Wednesday, June 17, 2015

முன்னேற்றத்தின் மூல மந்திரங்கள் – சுகி சிவம்

முன்னேற்றத்தின் மூல மந்திரங்கள் – சுகி சிவம்

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு முறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

”ரிலேட்டிவிட்டி தியரி என்கிற உங்கள் அரிய விஞ்ஞான உண்மையை நீங்கள் கண்டு பிடிக்காமல் விட்டிருந்தா ல் இந்த உலகம் என்னவா கி இருக்கும் ?”

ஐன்ஸ்டீன் சிரித்தபடி, ” ஒன்றும் குடிமுழுகிப்போ ய் இருக்காது… வேறு ஒரு வர் அதைக் கண்டறிந்து வெளிப்படுத்தி இருப்பார்” என்றார்.
அதிர்ச்சி அடைந்த கேள்வியாளர், “இன்னொருவர் கண்டறிந்து வெளிப்படுத்த பல ஆண்டுகள் ஆகி விடும் அல்லவா ?” என்று இழுத்தார்.

சிறிது யோசித்த ஐன்ஸ்டீன்… ”அதிகபட்சம் இன்னும் ஒரு மூன்று வாரங்கள் வேண்டுமா னால் தள்ளிப் போயிருக்கும். அவ் வளவுதான்”என்றார். ஆம்… இது உண்மை. உலகில் ஒரே ஒரு ஆல்ப ர்ட் ஐன்ஸ்டீன்தான் இதைக்கண்டறி ய முடியும் என்பதில்லை. காரணம் அதே கால கட்டத்தில் பல விஞ்ஞா னிகள் பல பகுதிகளில் அத்தகைய சிந்தனைத் தாக்கத்துடன் அதே கோட்பாடுகளைப் பற் றி ஆய்வு செய்து கொண்டிருந் தனர். யார் முந்தப் போ கிறார்கள் என்பதற்குத்தான் உலகம் காத்திருந்தது. ஒரு பந்தயம் போல… வேறு ஜெர்மானிய விஞ்ஞானி யும் ரிலேட்டிவிட்டி தியரியின் பல கூறுகளை ஆய்வு செய்திருந்தார்.

கிட்டத்தட்ட முடிவையும் கண்டறிந்து விட்டார். ஆனா ல், வகுத்து, தொகுத்து, ஆராய்ச்சிக் கட்டுரையாக்க தா மதம் செய்து விட்டார். எழுத்தில் வடிப்பதில் கொஞ்ச ம் சோம்பேறித்தனமாக இ ருந்துவிட்டதால் புகழ்முழு வதையும், ஐன்ஸ்டீன் அள்ளிக் கொண்டார். ஐன்ஸ்டீன் அவரையும் அவரது ஆராய்ச்சியையும் மனதில் வைத் துக் கொண்டுதான் அதிகபட்சம் மூன்று வாரங்கள் என்று பதில் கூறியதாகக் கருதுகிறார்கள்.

பலர் இப்படித்தான் பெரும்புகழையும், பொருளையும் சின்னச் சின்ன சோம்பேறித்தனத்தால் இழந்து போய் விட்டார்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம். பின்னர் செ ய்து முடிக்கலாம் என்று கொஞ்சம் தள்ளி வைத்த வர்களை உலகம் மொத்த மாகத்தள்ளி வைத்துவிடு கிற து. காரணம் இது ஒரு ஓடுகளம்,இங்கே தயங்கி நிற்பவர்கள் தள்ளப்படு வார்கள்.

ஒரு சின்ன தகவல் படித்தேன். கடிதங்கள் எழுதுவதி ல் தபால் அட்டைகளை அதிகம் பயன்படுத்துகிறவர்க ள் கொஞ்சம் கூடுதல் சுறுசுறுப்புள்ளவர்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறதாம். தவத்திரு குன்றக்குடி அடிக ளார், திருமுருக கிருபானந்த வாரியார், திரு கி. ஆ.பெ. விசுவநாதன், திரு கி.வா. ஜக ன்னாதன் போன்ற பெரியவர் களோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். இவர்கள் எவ்வளவு வேலைகள், பயண ங்களுக்கிடையிலும் கிடுகிடு வென்று தபால்களுக்குப் பதி ல் எழுத அஞ்சல் அட்டைகளை உபயோகிப்பார்கள். உ டனுக்கு டன் தபால் பெட்டியில் சேர்த்தும் விடுவார்கள்.

ஒருமுறை ஒரு விழாவில் பேசி விட்டு திரு கி.வா.ஜ. அவர்களும் நானும் ரயிலில் ஒன்றாக வந்து கொண்டி ருந்தோம். காலையில் ரயி ல் சென்னை வந்து அடையு ம் முன்பு எழுந்து நான்கை ந்து தபால் அட்டைகளில் கடிதம் எழுதிக் கொண்டிருந் தார்கள். ரயில் நிலையத் தில் இறங்கியதும் நிலையத் தில் இருந்த தபால் பெட்டியில் தம் கைப்பட சேர்த்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்கள். “இவ்வளவு அதிகா லையில் தபால்எழுதி உடனே பெட்டியிலும் சேர்க்கி றீர்களே… ஏதும் அவசரமா ?” என் றேன்.

“நேற்றுவிழா நடத்தி நம் மை ரயிலில் கொண்டு வந்து பொறுப்புடன் சேர் த்த நண்பர்களுக் குத்தான் நன்றி தெரிவித்து, பத்திர மாக வந்து சேர்ந்த விவர த்தையும் எழுதினேன். அப் புறம் எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டால் அப்படியே போய்விடும்” என் றார்.
”நலமுடன் சென்னை வந்து சேர்ந்தேன். அன்புடன் உப சரித்தமைக்கு நன்றி” என்று ஊர் சேருமுன்பே தபா ல் எழுதி நேரத் தை மிச்சப்படுத்தி உடனுக்குடன் செய லை முடிக்கும் அவரைப் பார்த்து ஆச்சர்யம் அடைந் தேன்.

அப்போது அவர் சொன்னார். “இது ராஜாஜி அவர்களி டமிருந்து நான் அறிந்து பின்பற்றும் வழக்கம்” என்றா ர். இப்போது தான் செல்ஃபோன் வந்து விட்டதே… இது ஏன் என்று நீங்கள் நினைக்க லாம். தபால் அட்டை எழுதுங் கள் என்பது என் செய்தி அல்ல. வேலைகளைத் தள்ளிப்போடா து உடனுக்குடன் முடியுங்கள்… விரை வாகச் செயல்படுங்கள்… தாமதம் தலைவனாகிறவனுக் குத் தடை என்று உணருங்கள் என்பதே என் செய்தி.

கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வரும் வெங்காய லாரிகளை, உருளைக் கிழங்கு லாரிகளை நீங்கள் எப்போதாவது கவனித்தது உண்டா? சந்தைக்குலாரி யை க் கொண்டு வரும் ஓட் டுனர்கள் புயல்வேகத்தில் வருவார்கள். ஒரே காரணம். முதலில் வரும் லாரியில் உள்ள காய்களுக்குக் கிடை க்கும் விலை அடுத்தடுத்த லாரியின் காய்களுக்குக் கி டைக்காது. அசுர வேகம் ஆபத்து என்பதை ஒப்புக்கொ ள்கிறேன்.

அதையும் உணரவேண்டும். அதே சமயம் தாமதமாக லாரிக் குக் கணிசமாக விலை கிடை க்காது என்பதையு ம் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். முன் னேறுகிறவ ர்கள் முந்திக் கொ ள்ள வேண்டும்.

“பரபரப்பு வேறு. சுறுசுறுப்பு வேறு. பரபரப்பு ஆபத்தின் அன்னை. சுறுசுறுப்பு வெற்றியின் செல்லப்பிள்ளை.

சமய உலகில் மனிதனுடைய குணங் களை எல்லாம் நன்கு ஆராய்ந்து மூன்று பிரிவுகளில் அடக்கினார்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்பார்கள். தமஸ் என்கிற தாமத இயல்பு கடவு ளை அடையப் பெருந்தடை என்கிறா ர்கள்.

மகிஷாசுர மர்த்தினி என்று துர்க்கைக்குப் பெயர். அவ ள் எருமைத் தலையை மிதித்தபடி நிற்பாள். துர்க்கை என்றால் மன உறுதி… இங்கு தமோ குணத்தை எருமையா கச் சித்தரித்து சொல்கிற புரா ணக் கதை அது. எருமைகள் எவ்வளவு மந்தமாக இயங் கும் என்பதைக் கவனித்தால் நாம் வெட்கப்படுவோம். வழி யை அடை த்துக் கொண்டு படுத்திருக்கும் எருமைகளை முன்பு எல்லாம் வாலை முறுக்கி வலியேற்படுத்தி எழுப்பி விடுவார்கள். அப் போதும் சில எருமைகள் எழாது. எழுந்தாலும் மறுபடி யும் படுத்துக் கொள்ளும்.

தமோ குணம் உள்ளவர்கள் எந்தச் செயலிலும் இறங்க மாட்டார்கள். இறங்கினாலும் வேலை செய்ய மாட்டா ர்கள். அதனால் அவர்கள் எருமைகள்.

சமய உலகில், இறைவனுக்குப் பூசைக்குப்பயன்படுத்தும் பூவை மலரும்முன் பறித்துவிடவேண் டும் என்று ஒரு நியதி உண்டு. அதை இலக்கியங்கள் “வண்டு தொடாமலர்” என்றுஎழுதும். வண்டு மொய்த் த மலர்களைக் கடவுளுக்கு இடுவது பாவம் என்று ஒரு கருத்து உண்டு.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வண்டு என்ன கடவுளுக்கு எதிரியா ? கருஞ்சட்டை போட்டிருப்ப தால் கடவுள் எதிர்ப்புக் கழக உறுப்பினரா? ஏன் வண்டு தொட்ட மலரைக் கடவுளுக்குச் சூட்டக்கூடாது ?

சிலர் முட்டாள்தனமாக வண்டு மலரில் வாய் வைத் தால் மலர் எச்சிலாகும். எச்சிலான பொருளைக் கடவு ள் ஏற்க மாட்டார் என்று நீட்டி முழக்குவார்கள். அட அசடுகளே ! எச்சில் கடவுளுக்கு ஆகாது என்றால் தேனை எப்படி அபி ஷேகம் செய்ய முடியும் ? தேன் கலந்த பஞ்சாமிர்தத்தை எப்படி படைக்க முடியும் ? கடவுளு க்கு எச்சில் ஆகாது என்பது வீண் புளுகு. தேனுக்கு “வண் டெச்சில்” என்றே திருப்புகழில் பாட்டு உண்டு.

வண்டு தொடாமலர் என்பதற்கு ஒரே காரணம், காலை அதிசீக்கிரம் எழுந்து மலர்களை மொய்ப்பது வண்டு அது தொடா மலர்தான் கடவுளுக்கு உரியது என்று விட்டால் வண்டுக்கு முன்பாக மனிதன் எழுந்தால் தான் அப்படிப்பட்ட பூவைப் பறி க்கமுடியும். தாமதகுணம் நீங்கி அதிகாலை எழுந்து சுறுசுறுப்பு டன்செயல்பட மனிதனைத் தயா ரிக்கவே சமயவாதிகள் வண்டு தொடா மலரே கடவு ளுக்கு உகந்தது என்று கதை சொன்னார்கள்.

அதிகாலை எழுவது… சுறுசுறுப்புடன் செயல்படுவது ஒத்திப்போடாமல்வேலை செய்வது… தாமதத்தை ஜெயிப்பது உடனு க்குடன் தொழில்படுவது என்பவை எல் லாம் முன்னேற்ற மனிதர்களின் மூல மந்திரங்கள்…

No comments:

Post a Comment