Tuesday, June 16, 2015

ஓய்வின்றி வேலை செய்க!

ஓய்வின்றி வேலை செய்க!

* உங்களிடம் உள்ளதை எல்லாம் பிறருக்கு கொடுத்துவிட்டு பிரதிபலன் எதிர்பாராமல் வாழுங்கள்.

* நாம் உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் கடவுளுக்காகவே. அனைத்திலும் எப்போதும் கடவுளையே காணுங்கள்.

* ஒரு எஜமானனைப் போல கடமையைச் செய்யுங்கள். அடிமையைப் போல இருக்காதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள்.

* சாகின்ற நிலையிலும் கூட நாம், ஒருவர் யார் எப்படிப்பட்டவர் என்று கேள்வி கேட்காமல் உதவி செய்வது தான் கர்மயோகம்.

* சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.

* ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால் வேலைகளுக்குள் கட்டுப்பட்டு விடாதீர்கள்.

* வாழ்வில் மனிதன் உயர வேண்டுமானால் கடுமையான சோதனைகளைக் கடந்து சென்றாக வேண்டும்.

* சூழ்நிலைக்குத் தக்கபடி வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம்.

* ஒரு செயலின் பயனில் கருத்துச் செலுத்தும் அதே அளவிற்கு அதைச் செய்யும் முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட போராடி மாள்வதே மேலானது. நீ ஒருபோதும் அழக்கூடாது.

* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.

* சுயநலத்துடன் வாழாமல், “நான் அல்லேன் நீயே’ என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லா நன்மைகளுக்கும், ஒழுக்கங்களுக்கும் இதுவே அடிப்படை பண்பு.

* உன்னால் எல்லாருக்கும் சேவை செய்ய முடியும். அதுவும் கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது.

No comments:

Post a Comment