Tuesday, June 16, 2015

தைரியமாக இரு மன உறுதியை இழக்காதீர்!!!

தைரியமாக இரு மன உறுதியை இழக்காதீர்!!!

* அறியாமையால் அச்சம் உண்டாகிறது. அச்சம் துன்பத்திற்கு வழிவகுக்கிறது.

* நிமிர்ந்த நெஞ்சுடன் தைரியமாகப் போராடுங்கள்.

* பணியின் முழுப் பொறுப்பையும் உங்கள் மீது சுமத்திக் கொள்ளுங்கள்.

* துணிவுடன் செயலாற்றுங்கள். உங்களுக்குரிய விதியை வகுத்துக் கொள்வது நீங்கள் தான் என்பதை உணருங்கள்.

* ஒழுக்கம், அன்பு, அமைதி உள்ளவர்களை@ய இந்த மண்ணுலகம் வேண்டுகிறது.

* அறிவார்ந்து சிந்திக்கும்போது தான், பிழைகளை நம்மால் அகற்ற முடியும்.

* ஞானம் புறவுலகில் இருந்து வருவது இல்லை. இயல்பாகவே மனிதனுக்குள் எப்போதும் இருக்கிறது.

* மனஉறுதியை எப்போதும் இழக்கக் கூடாது. ஏழை, எளியோரின் மருந்து அது ஒன்றே.

* எல்லாருக்கும் இன்பம் அளிக்கும் ஒரே மாதிரியான பொருள் உலகில் இல்லவே இல்லை.

* தோல்வி இல்லாத வாழ்வால் பயன் உண்டாகாது. வாழ்வின் சுவையே போராட்டத்தில் தான் இருக்கிறது.

* தனக்கென லட்சியத்தை வகுத்துக் கொண்டு, அதை அடைய இன்று முதல் வெற்றி பயணம் மேற்கொள்ளுங்கள்.

* நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், தூய்மையும், மகிழ்ச்சியும் குடி கொண்டிருக்கின்றன.

* மிகப் பெரிய உண்மை ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். அது தான் வலிமையே வாழ்வு.

* உலகத்தைப் போல உங்கள் உள்ளமும் பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும்.

* தன்னை நெறிப்படுத்திக் கொண்டு வாழ்பவனே, உலகையும் நெறிப்படுத்தும் தகுதியைப் பெறுகிறான்.

No comments:

Post a Comment