Wednesday, June 17, 2015

வெற்றிலை தத்துவம்

வெற்றிலை தத்துவம் 

வெற்றிலை என்பது மிளகுக்குடும்பத்தைச் சேர்ந்த ஒர் மூலிகைக் கொடியாகும் பணப்பயிரும் ,வெற்றிக்கு வழிவகுக்கும் இலையும் கூட.

வெற்றிலையில் உள்ள சத்துக்கள்
நீர் சத்து 
புரசசத்து 
கொழுப்புச்சத்து
கால்சியம்
கரோட்டின்
தயமின்
ரிபோபிளேவின் 
வைட்டமின் சி உள்ளது

மிக முக்கியமாக வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் சக்தி கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் வேதியல் பொருள் உண்டு.

வெற்றிலையின் மறு பெயர்கள் 
நாகவள்ளி 
தாம்பூலம்
மெல்லிலை

வெற்றிலையின் பயன்கள் 
மருத்துவம்
  • வெற்றிலை சாறு ஓர் சிறந்த கிருமிகொல்லி (Antiseptic)
  • சுவாசத்திற்று புத்துணர்ச்சி ஊட்டல்
  • அஜீரணக் கோளாற்றிற்கு சிறந்த மருந்து
  • நெஞ்சுச்சளிக்கு கைமருந்து 
  • மிளகுடன் வெற்றிலையை மென்று உண்டால் உடலில் உள்ள நச்சுத்தன்மை அகற்றப்படும்


இறைவழிபாடுக்கு

விழாக்களுக்கு பெரியவர்களை வரவேற்க 

சோதிடம் பார்க்க (சோதிடருக்கு கொடுக்கும் வெற்றிலைகளின் எண்ணிக்கையை பொறுத்தது சாத்திரம் கூறல் ) இதனை வெற்றிலை வைத்து கேட்டல் என்பார்கள்

பணப்பரிமாற்றம் (இரு வெற்றிலைக்கிடையில் பணத்தை வைத்து கொடுத்தல்)

சிலர் தங்களுடைய மதிலில் கொடியை படரவிட்டு அழகுபார்க்கிறார்கள்.

சிறு போதையை உண்டுபண்ண (பாக்கு,புகையிலை,களிச்சுண்ணாம்புடன் சப்புதல்)
  • உமிழ் நீர் சுரப்பியின் ஊடாக இரத்த ஓட்டத்தில் கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்தல்

மலமிளக்கி - மலம் கழிக்க கஷ்டப்படும் குழந்தையின் மல வாயினுள் நல்லெண்ணை தேய்த்த வெற்றிலை காம்பை செலுத்தி ,சிறு அசைவு கொடுக்கும் போது சிறுது நேரத்தின் பின் மலம் கழியும்.

வெற்றிலையுடன் மென்னும் பொருட்கள்
வெற்றிலையுடன் பாக்கு (பச்சை,காய்ந்த)
வெற்றிலையுடன் பாக்கு (பச்சை,காய்ந்த),சுண்ணாம்பு 
வாய் நன்றாக சிவந்து பற்களில் கறை படிதல்
வெற்றிலையுடன் பாக்கு ,புகையிலை 
புற்று நோய்க்கு வழிவகுத்தல்
வெற்றிலையுடன் பாக்கு ,சுண்ணாம்பு,புகையிலை
வெற்றிலையுடன் மிளகு 
வெற்றிலையுடன் இலவங்கபட்டை

No comments:

Post a Comment