Wednesday, June 17, 2015

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்! – உணர வேண்டிய உன்ன‍த வரிகள்!

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்! – உணர வேண்டிய உன்ன‍த வரிகள்!

ஆளுமை தரும் அடையாளம்! ஆளுமை… நாம் நம்மி டையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே பார்ப்பதுதான் ஆளுமை. பெர்சனாலிட்டி (personality) என்ற ஆங்கிலச் சொல்லை அடிக்கடி இன்று கேட்கின் றோம். யாரை எப்படி எப்படிக் கையாளுவது என்பதில்தான் ஆளுமைஅடங்கியிருக்கின்றது உங்களிடம் வெளிப்படும் சிந்த னை, செயல், எண்ணம், மொழி, மனம், ஒழுக்கம், சமூக உறவு போன்றவைதான்உங்களுடை ய ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்தும். பிறருக்கு உங்களை அடையாளப்படு த்தும்!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள் ளாதீர்கள். அது உங்களை பல வீனமானவராக காட்டும்.
2.மற்றவரின் கண்களை நேரா கப் பார்த்து பேசவும். அது உங் களை நேர்மையானவராகக் காட்டும்.
3.நீங்கள்பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
4. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
5. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பி க்கையற்றவராகக் காட்டும்.
6. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடி ப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்த வராக காட் டக்கூடும்.
7. நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வ தை கேட்க விரும்பாதவரையும் கேட்க வைக்கும்.
8.உங்கள் பேச்சைவிளக்குவதற்கு, உங்க ள் கைகளையும் பயன்படுத்தவும். சைகை கள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக் கும். 

No comments:

Post a Comment