Thursday, November 21, 2013

ஆண்கள் ஏன் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்று தெரியுமா...?

ஒரு குடும்பம் என்று வந்துவிட்டாலே அதில் பொறுப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனை வழிநடத்துவது யார்? குடும்பத்தலைவரா அல்லது குடும்பத்தலைவியா? பெரும்பாலான இல்லங்களில் குடும்பத்தலைவனான ஆண் வேலைக்குச் சென்று பணத்தை ஈட்டுவது மட்டுமே செய்து வருகின்றான். குடும்பத்தலைவி தான் வீட்டின் மற்ற பொறுப்புகளை ஏற்று குடும்பத்தை வழிநடத்தி செல்லுகின்றாள்.

முதலாவதாக, எல்லா ஆண்களும் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்லுவது கிடையாது. ஒரு சிலர் தங்களது மனைவியைவிட சிறப்பாக செயல்படுவார்கள். எனினும், பெரும்பாலான ஆண்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச்செல்லுகின்றனர். இவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் பல காரணங்கள் உள்ளன. ஒரு சிலர் தங்களது பெற்றோரை வழுவி வந்தவர்களாகவும் அல்லது வளர்ந்து வந்த சூழ்நிலையை பொருத்தும் இவ்வாறு இருக்கின்றனர். பல நேரங்களில் கவனக்குறைவு மற்றும் சோம்பேறித்தனம் போன்றவைகள் காரணமாக இருக்கின்றன.

ஆண்கள் ஏன் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்று தெரியுமா...?

ஒரு சிலர் அவர்களது வாழ்வில் சில சமயத்தில் இந்த பொறுப்புகளால் ஏற்பட்ட மனநிலை பாதிப்பின் காரணமாக அதனை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். இந்த பொறுப்புக்களை அவர்களது வாழ்வில் ஏற்கனவே ஏற்று வந்ததால் அதனை மீண்டும் ஏற்க மறுப்பார்கள். வலுவான இதயம் உள்ள ஆண்களே பொறுப்பேற்க தகுதி பெற்றவர்கள். எல்லா ஆண்களும் இவ்வாறு அல்ல, ஒரு சிலர் முழுதாக பொறுப்பேற்காமல் சாதுரியமாக சில பொறுப்புகளை மட்டுமே கையாளுவார்கள்.

சிலர் பொறுப்புகளில் ஏற்படும் இழப்புகளுக்கு பயப்படுவார்கள். இதனால் பொறுப்பேற்று அதனை முடிப்பதற்கு பயந்து அதனை விட்டு விலகுவார்கள். தங்களது தலைமையில் பொறுப்பேற்க மறுப்பார்கள். ஒரு ஆண் தன்னை வலிமைஉடையவனாக இவ்வுலகிற்கு காட்டிவந்தாலும் ஒரு சில வேளைகளில் பொறுப்புகளை ஏற்க பயப்படுகின்றார்கள். அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த பொறுப்பேற்பது ஆகும். இந்த பொறுப்பேற்றல் பயத்தை போக்குவதற்கு ஆதரவும் கடின உழைப்பும் அதிகம் தேவைப்படும். எனினும், எல்லா ஆண்களும் இந்த பொறுப்பேற்பதில் இருந்து விலகுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

1. சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனத்தினால் தான் பெரும்பாலான ஆண்கள் பொறுப்பேற்க மறுக்கின்றனர். வலிமையையும் உறுதியும் ஆண்களிடம் இருந்தாலும் அவர்களிடம் சோம்பேறித்தனமும் மிகையாக இருக்கின்றது. பொறுப்பேற்றல் என்பது கடினமான காரியம். அதனை கையாள மிகுந்த உறுதியும் முயற்சியும் அதிகமாக தேவைப்படும். இது எல்லா ஆண்களாலும் முடியாது.

2. பிறப்பு வழிப் பண்பு

நாம் அனைவரும் ஒரு சில விசியத்தில் நம்முடைய பெற்றோரை வழுவியே வந்துள்ளோம். ஒரு சிலர் துரதிஷ்டவசமாக பெற்றோர்களுக்கு பிள்ளையாக பிறந்ததால், அவர்களின் பொறுப்பேற்றல் குறித்த பயம் இவர்களிடையேயும் இருக்கக் கூடும். சில சமயங்களில் அவர்கள் வளர்ந்து வந்த சூழல் அவர்களை பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்ல வைக்கும்.

3. பயம்

உறுதியளிப்பின் பயமே ஆண்களை பொறுப்பில் இருந்து விலகிச்செல்ல முக்கிய காரணமாக இருக்கின்றது. கடந்தகாலத்தில் அவர்கள் ஏற்ற பொறுப்பில் வெற்றி கிடைக்காதால் அவர்கள் மீண்டும் அப்பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர். நாம் எல்லாரிடமும் ஒருவித பயம் இருக்கும். எனினும் சிலர் வலிமைமிக்க ஆண்களாக இருந்தாலும் பொறுப்பேற்பதில் பயம் கொள்ளுவார்கள்.

4. கடந்த காலம்

ஒருசில ஆண்கள் பொறுப்புகளை வேண்டுமென்றே மறுப்பதற்கு அவர்களின் கடந்த கால நிகழ்வுகள் எதாவது இருக்கும். கடந்தகாலத்தில் பொறுப்புகளை ஏற்று அதனால் பெரும் தொல்லையோ அல்லது மன உளைச்சலோ ஏற்பட்டிருக்க கூடும். இவ்விதமான நிகழ்வுகள் நாம் நன்மைகென்றே நினைத்தாலும், ஒரு மெல்லிய தற்காப்பு திரையை நம் மனதில் உருவாக்கிவிடும். இதனால் மீண்டும் அந்த பாதையை கடக்க மறுப்பார்கள்.

5. மனப்பான்மை

பொறுப்புகளை ஏற்பதற்கு உறுதியான மனப்பான்மை அவசியமானதாகும். எதிர்மறையான முடிவை எண்ணும் ஆண்களால் இதனை ஏற்க முடியாது. இத்தகைய எதிர்மறையான எண்ணம் உள்ளவர்கள் தங்களது பொறுப்பில் முதல் அடியை கூட எடுக்க பயப்படுவார்கள்.

6. அனுபவம்

பொறுப்புகளை வெற்றிப்பாதையில் செலுத்த ஒருவர்க்கு கண்டிப்பாக சிறிது அனுபவம் தேவை. அனுபவம் இல்லாத ஆண்கள் இந்த பொறுப்புகளை மறுப்பதோடு மட்டுமல்லாது அதில் வெற்றிபெற தேவைப்படும் அறிவு மற்றும் சிந்தனை இல்லாததால், இதனை ஏற்பதற்கு முற்றிலுமாக மறுக்கின்றனர்.

No comments:

Post a Comment