Wednesday, August 28, 2013

சீக்கிய மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியாவில் இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களால் பின்பற்றப்பட்டு வரும் சீக்கிய மதம் சீக்கியர் என்னும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. 

சீக்கியர்கள் யார்?

கி.மு. 2000-க்கும் கி.மு. 1500-க்கும் இடையே ஆரியர் இந்தியாவில் வந்து குடியேறினர். இவர்களில் பஞ்சாப் பகுதியில் குடியேறிய ஆரியர், போர்த்தொழிலில் முதிர்ச்சி பெற்ற சத்ரியர்கள் எனவும், விவசாயத்தில் ஆர்வமிக்க இராஜபுத்திரர் எனவும் இரு பிரிவினராய் பிரிந்தனர். இந்த சத்ரியரிலிருந்து ‘கட்ரி’ என்ற இனத்தவரும், இராஜபுத்திரர் பிரிவிலிருந்து ‘ஜாட்’ என்ற இனத்தவரும் தோன்றினர். இந்த கட்ரி மற்றும் ஜாட் இனங்களின் கூட்டமைப்பில் உருவான கலப்பு இனமே சீக்கியர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக இவர்கள் கீழ்க்காணும் குணநலன் உடையவர்களாய் காணப்படுகின்றனர்.

1. பக்தியில் ஊறிப்போனவர்கள்
2. துறவறம் வெறுத்து குடும்பப் பற்றுடையோராய் குடும்பத்தோடு சேர்ந்து 3. வாழ்கின்றனர்.
4. பிறரிடம் பரஸ்பர அன்பு காட்டும் இவர்கள் குருக்களின் 5. போதனைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
5. சமுதாயத் தொண்டும், பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் உடையவர்கள். 
6. கடவுளின் சித்தமே நடக்கும் என மதிக்கும் தலைவிதி வாதிகள்.
சுதந்திர உணர்ச்சி மிக்கவர்கள். 

தோற்றம்

சீக்கிய மதத்தை உருவாக்கியவர் குருநானக் ஆவார். எனினும் அவருக்கு முன்பே அது தோன்றுவதற்கு வித்திட்டவர் கபீர் என்பவராவார். முகம்மதிய மார்க்கத்திலும், இந்து மார்க்கத்திலும் நாட்டமுடைய கபீர் என்பவர் இரண்டு மார்க்க கருத்துகளையும் சேர்த்து பொதுவான கருத்து ஒன்றை வெளியிட்டார். இதுவே சீக்கிய மார்க்கமாக உருவாயிற்று. இக்கெள்கைகளை குருநானக் எடுத்துரைத்து அதற்கு மார்க்க உருவம் கொடுத்தமையால் சீக்கிய மார்க்கத்தின் முதல் குரு ஆனார். அவரைத் தொடர்ந்து ஒன்பது குருக்களின் தொண்டுகளால் சீக்கிய மார்க்கம் வளர்ந்தது. குருநானக் முதலான பத்து குருக்களின் போதனையே இன்று சீக்கிய மதத்தின் போதனையாய் விளங்குகிறது. 

சீக்கிய மதத்தின் பத்து குருக்கள்

1. குருநானக், 2. குரு அங்கத், 3. குரு அமர்தாஸ், 4.குரு ராம்தாஸ், 5.குரு அர்ஜூன், 6. குரு ஹர்கோபிந், 7. குரு ஹார்ராய், 8. குரு ராம்ராய், 9. குரு தேஜ்பகதூர், 10. குரு கோபிந்த் சிங்.

மேற்கூறிய பத்து குருக்களின் போதனைகளைப் பின்பற்றுகிறர்வகளே சீக்கியர் எனப்பட்டாலும் இன்று அவர்களின் சீக்கியர் மற்றும் சிங் என இரு பிரிவினர் இருப்பதைக் காணலாம். ஒரே மார்க்கத்தைப் பின்பற்றினாலும் இவர்களிடையே வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். 

வித்தியாசங்கள்

சீக்கியர்

1. நம்மைப் போல் சாதாரணத் தோற்றமுள்ளவர்.
2. ‘சீக்’ என்பதற்கு ‘கற்பவன்’ என்று பொருள்.
3. பூணூல் அணிந்திருப்பவன்.
4. புகை பிடிக்கும் பழக்கமுடையவன்.
5. ஒரே பரம்பரையினர். உயர்குடிப் பிறந்தவர்கள்.

சிங்

1. சீக்கிய மார்க்கத்தில் இணைந்து தலைப்பாகை வைத்திருப்பான்
2. ‘சிங்’ என்பதற்கு ‘வீரம் மிக்கவன்’ என்று பொருள்.
3. பூணூல் அணியமாட்டான்.
4. புகையிலை வஸ்துக்களை பயன்படுத்த மாட்டான்
5. பல இனத்தவர்களிடமிருந்து வந்தவர்கள்.

வேத நூல்

ஆதிகிரந்தம் அல்லது கிரந்தசாஹிப். புத்தகம் என்பது இதன் பொருள். சீக்கியரின் ‘குருமுக்கி’ எனும் மொழியில் எழுதப்பட்டது. கபீர் முதல் 5-ம் குருவின் காலம் வரையுள்ள போதனைகள் பாடல்களாக இதில் இடம் பெறுகின்றன. அத்துடன் இந்து, இஸ்லாமிய மார்க்க பாடல்களும் இடம் பெற்றுள்ளன. 

கடவுள்

சத்நாம் என்பவரே கடவுள். இவர் எல்லாம் அறிந்த ஒரே கடவுள். ‘சத்நாம்’ என்பதற்கு ‘உண்மையுள்ள நாமம்’ என்பது பொருள். எங்கும் நிறைந்த இவர் இரக்கமும் அன்பும் மிகுந்தவர் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.

வழிபாட்டு முறைமை

குருத்துவாரம் (மக்கள் கூடும் இடம்) வழிபடும் இடமாக இருக்கிறது. மக்கள் கூட்டமாய் வந்து அமர்ந்து குருவிடம் உபதேசம் கேட்பர். உள்ளே ஆதி கிரந்தம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு நேராய் தலை சாய்த்து வணங்க வேண்டும். நாள்தோறும் கிரந்தத்தை காலை அல்லது மாலையில் திறந்து இடது பக்க ஓரத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க வேண்டும்.

பிற முக்கிய கொள்கைகள்

1. ஆணோ, பெண்ணோ காது அல்லது மூக்கில் துளையிடுதல் கூடாது.
2. திருமணத்தில் ஜாதி, இனம் பார்க்கக் கூடாது. சீக்கியருக்குள்ளேதான் திருமணம் செய்ய வேண்டும்.
3. பலதார மணம் கூடாது. இறந்தவர்கள் தகனம் செய்யப்பட வேண்டும்.
4. நினைவுச் சின்னமோ தூணோ நாட்டக் கூடாது.
5. பயணம் புறப்படும் முன்னும், புதுத்தொழில் ஆரம்பிக்கும் முன்னும் ஆதிகிரந்தம் வாசிக்கப்பட வேண்டும்
6. ஒவ்வொரு சீக்கியனும் குடும்பஸ்தனாய் வாழ்ந்து குடும்பத்தை நன்கு பராமரிக்க வேண்டும். 

பொற்கோவில்

குரு இராம்தாஸ் என்ற 4-வது குருவிற்கு மொகலாய அரசர் அக்பர் பெரும் நிலம் ஒன்றை தானமாக் கொடுத்தார். அதில்தான் குரு தமது பெயரால் இராம்தாஸ்பூர் என்ற நகரத்தை நிர்மாணித்தார். இதுவே இன்று அமிர்தசரஸ் என்று அழைக்கப்படுகிறது. 5-வது குருவாகிய குரு அர்ஜூன் இங்கு சீக்கியர்களின் பொற்கோவிலைக் கட்டினார். சீக்கியர்களிடம் வசூலிக்கப்பட்ட வரிகளால் வந்த பெரும் செல்வம் பொற்கோவிலில் சேர்த்து வைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் ‘அழியாத சிம்மாசனம்’ என்ற அர்த்தம் கொள்ளும் ‘அகால் தாஹ்ட்’ அல்லது ‘அகாலிதளம்’ என்று அழைக்கப்பட்டது. (இதன் பெயரில் இன்று ஒரு அரசியல் கட்சியும் உள்ளது). 

இந்திய விடுதலைப் போரில் சீக்கியர்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. பொதுவாக சீக்கியர்கள் மதப் பற்றை விட குடும்பப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் அதிகமுடையவர்கள். 

No comments:

Post a Comment