Tuesday, August 27, 2013

பராசக்தி தத்துவம்

பெண் பிறவி என்பது பாவம் அல்ல! பெண் சிருஷ்டியில் தான் பராசக்தி தத்துவமே அடங்கி உள்ளது"

"எவ்வளவுக்கெவ்வளவுப் பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுகிறார்களோ அவ்வவளவுக்கவ்வளவு உலகம் அழிவுகளிலிருந்து காப்பாற்றப்படுகிறது"

"ஆன்மிகத்தின் உச்சியை அடையும் திறமை பெண்களுக்கு உண்டு"

"தூய உணர்வோடும், பயபக்தியோடும், தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் தொண்டு செய்ய வேண்டும்"

"சிறிய அணு குண்டு பெரிய பெரிய காரியங்களைச் செய்கிறது. நீ செய்யும் சின்னஞ்சிறிய தொண்டிற்கும் அணுகுண்டிற்குள்ள சக்தி உண்டு"

"நீங்கள் செய்யும் தொண்டுகளை வைத்து உங்கள் பேரன், பேத்திகளுக்கு என் அருளைக் கொடுப்பேன்"***

பிற:

***

"தொண்டு என்பது அடிமை வேலையன்று. அது தெய்வப்பணி"

"நன்மையை நூறுபேர் விரும்புவார்கள். உண்மையை சிலரே விரும்புவர்"

"ஒரு நாட்டின் நலம் அந்நாட்டுப் பெண்களின் நிலையைப் பொறுத்தது"

"வாதாடப் பலருக்குத் தெரியும். உரையாட ஒரு சிலருக்கே தெரியும்"

"மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பு"

***

காரணமின்றி கண்ணீர் வரும் - உன் கருணை விழிகள் கண்டால்

No comments:

Post a Comment