Thursday, August 29, 2013

ஏற்றுக்கொள் அல்லது ஒதுங்கி நில் !!!

! Water Formula for stress management!!

ஒரு நண்பர் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் பற்றி எழுதுமாறு கேட்டு உள்ளார்...

இந்த விசயத்தில் நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று என் மனதிற்கு தெரிந்தாலும்...
அவருக்காக... 

ஸ்ட்ரெஸ் = அழுத்தம், அதாவது மனஅழுத்தம்..
எப்போதெல்லாம் நாம் மனஅழுத்தத்தை உணர்கிறோம்???

*வேலை பளு கூடும் போது...
*உயர் அதிகாரிகளுக்கு பயந்து நிர்பந்தங்களுக்காக  சில வேலைகளை செய்யும் போது.. 
*மனைவி / காதலி / பெற்றோர் /நண்பர்களிடம் கருத்து ஒத்து போகாத போது...
*எதிர்பார்த்த ஒன்று எதிர்மறையாக நடக்கும் போது...
*இழப்புக்களின் போது...
*ஏமாறும் போது...
*இயலாத போது...
*தோற்கும் போது...
 இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம் ...

அதற்கு முடிவில்லை..
அவற்றை மூன்றாக பிரித்து கொள்வோம்...
1. Personal 
2. Social 
3. Professional 

Personal--- பெரும்பாலும் கருத்தொற்றுமை இல்லாத போது மனஅழுத்தம் ஏற்படும்... வாழ்க்கை ஒன்றும் நேர்கோட்டில் செல்லும் ரயில் கிடையாது. அவர் அவர்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். 

Opinions are like  Hand Watches. 
Everyone's watch shows different time from others. 
But, Everyone believes that their time is correct.!

என்ன செய்வது???

ஏற்றுக்கொள் அல்லது ஒதுங்கி நில்! (Water Formula)
என்ற கொள்கை மிக ஏற்புடையதாக இருக்கும்.. 

Lovely formula to learn from water: 
adjust yourself in every situation...
 in any shape and most importantly...
 - always find ur way out to every problem ! 

உறவுகளிடம் எடுத்து சொல், புரிய வைத்து உன் வழிக்கு கொண்டு வா அல்லது ஏற்றுக்கொண்டு அவர்கள் வழியில் செல்வது மனதிற்கு அமைதி தரும்.. 

Troubles r part of Life,
If u don’t share them with the people who LOVE u n CARE for u,...
In reality U take away a chance from them to LOVE u MORE...

நம் சமுதாய வாழ்வில் பல வகையில் நாம் மன அழுத்தத்தை அடைவோம்.. உதாரணமாக நண்பன் ஒருவன் நல்ல வேலையில் சேர்ந்து நம்மை விட அதிகமாக சொத்து சேர்க்கும் போது, நம் இயலாமை நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

எப்படி சமாளிப்பது???

"தியானம் செய்"--- மிகவும் பிரபலமான மிக கடினமான அறிவுரை, எல்லாராலும் இலவசமாக தரப்படும்..

தியானம் செய்தால் மன அழுத்தம் குறையுமா?? -- குறையும்  
இது மட்டும் தான் ஒரே வழியா?? -- இல்லை 
 இதற்கு அறிவியல் விளக்கம் என்னவெனில்...
மனதை அலைபாய விடும் போது நரம்புகளில் உள்ள உற்சாக வேதிபொருட்களின் அளவு கடுமையாக குறையும். அதனால் டிப்ரெசன் அதிகமாகும்..
தியானம் மூலம் மனதை ஒருமுக படுத்தும் போது உடலில் என்டோர்பின் எனப்படும் வேதிபொருள் உற்பத்தி ஆவதுடன் மற்றவை வீணாவதும் குறையும்.. 

எனக்கு தியானம் தெரியாது... வேறு எப்படி குறைக்கலாம்.
முதலில் உங்களுக்கு மனஅழுத்தம் தரும் சூழலில் இருந்து வெளியேறிவிடுங்கள்.
மாடிபடி இருந்தால் நான்கு தடவை ஏறி இறங்குங்கள்... அல்லது 
பதினைந்து நிமிடம் நடங்கள்.. அல்லது 
பாடத்தெரிந்தால் பாடுங்கள்... அல்லது  
ஆடதெரிந்தால் ஆடுங்கள்... அல்லது 
ரூமில் கதவை அடைத்துவிட்டு கத்துங்கள்... அல்லது 
தலையணையை குத்துங்கள்... அல்லது 
மேற்கூறியவற்றை கவனித்து பாருங்கள்...
ஒரு குழந்தை தனக்கு கோபம் வந்தால், பிடித்ததை செய்வதை உணர்வீர்கள்..

குழந்தைக்கு மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க தெரியும்..

கோபம்
எரிச்சல்
பொறாமை
கள்ளத்தனம் 
                           எல்லாம் நாம் இந்த உலகில் இருந்து எடுத்துகொண்டு நம்மையே கஷ்டப்படுத்தி கொள்கிறோம்!

ஆனால் இந்த வாழ்க்கை மிக சிறந்த ஆசிரியன்!!

எல்லா வாத்தியார்களும் பாடம் சொல்லி தந்த பிறகு தேர்வு நடத்துவார்கள்..
வாழ்க்கை தேர்வு வைத்தபின் தான் பாடம் சொல்லி தரும்!!!

எதிர்கொள்ளும் அனைத்து சூழலையும் நம்மால் மாற்ற இயலாது ஆனால் உங்கள் அணுகுமுறையை மாற்றலாம்...

You can not tailor -make the situation in life,
 but you can tailor -make the attitudes...
 to fit those situations ! 

எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் நம்முடைய தவறை கவனிக்காமல் அடுத்தவர் தவறை பெரிது படுத்துவதால் தான் எல்லா பிரச்சினைகளும்... மன்னிக்க பழகினால் வாழ்வு இனிமையே!!!

No comments:

Post a Comment