Tuesday, December 9, 2014

பரிகார ரகசியம் ஒரு பார்வை

பரிகார ரகசியம் ஒரு பார்வை

மனிதர்களாய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில், அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களின் தன்மைக்கு ஏற்ப, சாஸ்திரங்கள், சில பரிகாரங் களை பரிந்துரை செய்கிறது.
ஜாதகத்தில் தோஷத்தை தரும் கிரகம் நிற்கும் இராசிகளை வைத்துதான் அதற்கான பரிகாரங்களை செய்ய வேண்டும். அத்தகைய பரிகாரங்களை முன்னோர்கள் மறைத்து வைத்திருந்தனர். அந்த இரகசியத்தை இங்கே விரிவாக பார்போம்.

நெருப்பு இராசிகள் - மேஷம், சிம்மம், தனுசு.
நில இராசிகள் - ரிஷபம், கன்னி, மகரம்.
காற்று இராசிகள் - மிதுனம், துலாம், கும்பம்.
நீர் இராசிகள் - கடகம், விருட்சிகம், மீனம்.

நில இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்கு உண்டான அதிஷ்ட கற்களை அணிந்து கொண்டால் தோஷம் நீங்கும்.

காற்று இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்குரிய மந்திர ஜெபம் பூஜைகள் செய்ய தோஷம் நீங்கும்.

நீர் இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அக்கிரகத்துக்குறிய பொருட்களை தானம் செய்யலாம், மீன்களுக்கு இறையாக நீரில் இடலாம்.

நெருப்பு இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அக்கிரகத்திற்குரிய தீபாராதனை, யாகபூஜைகள் செய்யலாம்.

இவ்விதம் தோஷம் செய்யும் கிரகம் இருக்கும் இராசிக்கு உண்டான பரிகாரங்களை, நீங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, தோஷம் தரும் கிரகத்தின் நாளிலோ தங்களுக்குண்டான விருட்சங்களை வழிபட்டு செய்ய உடனே தோஷம் நீங்கும்.

No comments:

Post a Comment