Wednesday, May 6, 2015

நமக்கு எப்போதும் கை கொடுக்கும் நம்பிக்கை

நமக்கு எப்போதும் கை கொடுக்கும் நம்பிக்கை

எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால், அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதைச் சாதிக்க திறமை வேண்டும். திட்டமிடல் வேண்டும், விடமுயற்சி வேண்டும், கடின உழைப்பு வேண்டும். இவைகளிருந்தால் எதையும் சாதிக்கலாம்.

செயல் என்பது உயிரின் இசை என்றொரு பழமொழி உண்டு. அதைச் செயல்படுத்துங்கள்.

இன்ப வாழ்க்கை வாழ மனிதனுக்குச் சிந்தனை எவ்வளவு அவசியமாகத் தேவையோ அந்த அளவுக்கு செயலாற்றலும் தேவை சொன்னவர் ஹாஸ்விட் அறிஞர்.

அறிவு தான் ஆற்றல் சொன்னவர் பேகன்.

நம்பிக்கையானது துணிச்சலைத் தட்டி எழுப்புகிறது. நம்பிக்கை மனித இதயத்தில் துணிச்சலை ஊட்டக்கூடியது சொன்னவர் லான்மெல் அறிஞர்.

து|ய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாததாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும் என்று சொன்னவர் விவேகானந்தர்.

வயதைக் கூட்டுவதல்ல நம் வாழ்க்கையின் நோக்கம். வயதிற்கு உயிர் ஊட்டுவதுதான் நம் வாழ்க்iகியின் நோக்கம் சொன்னவர் அலெக்ஸிக்ச் கார்மல்.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற கொள்கையில் வாழ் நாளெல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிடுங்கள். 

இந்த இலட்சியத்தை தம்மானல் அடைய முடியும் என்று மனதார நம்புவதே தன்னம்பிக்கை. எதை இழந்தாலும் இழக்காலாம். ஆனால் இழக்கக்கூடாத ஒன்று தன்னம்பிக்கைதான். 

தேவைற்ற பொருள்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம் தான். உங்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு நண்பர்களோ அல்லது அலுவலக நண்பர்களோ அல்லது நீங்கள் இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவர்களின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீர்கள். உங்கள் வார்த்தைகள் எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்தாகவும் இருக்கட்டும். 
மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற அவர்களுக்கு நீங்கள் முதலில் உதவ வேண்டும். 

உங்களிடமுள்ள குறைகளைக் குறைத்து நிறைகளைப் பெற எப்போதும் முயலுங்கள்.

உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அது உங்கள் திறமைக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்து பிரச்சனைகளை அணுகுங்கள். 

படிக்கப் படிக்க மனம் விரிவடையும், திறந்த மனம் வெற்றியின் விளைநிலம். 

பள்ளம்தான் மேட்டினை நிர்ணயிக்கிறது.
குள்ளம் தான் உயர்வினை வடிவமைக்கிறது.
இல்லாதது தான் இருப்பதை காட்டுகிறது.

தவறு செய்வது தவறல்ல. திருத்திக் கொள்ள மறுப்பது தவறு. 

ஒரு பக்கம் நீங்கள் கை கொடுத்தால் இன்னொரு பக்கம் உங்களுக்கு கை கொடுக்கும்.

வெற்றி ஓர் அனுபவம் என்றால் தோல்வியும் ஓர் அனுபவமே. தோல்வி எனப்படுவது வெற்றிக் செலுத்தும் காணிக்கை அவ்வளவு தான். அதற்காக உற்சாகம் இழக்கத் தேவையில்லை.

உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்கத் தயங்கிக் கொண்டேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, இவ்வைந்தும் வெற்றியின் ரகசியங்கள். எதில் ஈடுபட்டாலும் மனஉறுதியோடு ஈடுபட வேண்டும். விட்டுக் கொடுத்தால் மன நிம்மதியோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.

முயற்சி முயற்சி இவை கூடிக் கொண்டே இருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும். 

முடியும் என்றால் முடிகிறது. தயங்கினால் சரிகிறது. 

நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே.

எப்போதும் ஒருவருடைய இதயம் ஈரமாகவே இருக்கட்டும். அப்போது தான் குடும்ப இதயமே ஈரமாக இருக்கும். குடும்ப இதயயே ஈரமாக இருந்தால் சமுதாய இதயம் ஈரமாக இருக்கும். 

நம் உடலும் உயிரும் போல நம் எண்ணமும் செயலும் இருக்கட்டும். எப்படியாவது வாழ்ந்து விடுவோம் என்று எண்ணுவதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழுவதே வாழ்க்கை. எப்போதும் புன்சிரிப்போடு இருப்பது நல்லது. 

உங்கள் வாழ்க்கையில் எது செய்தாலும் ஒருபோதும் மற்றவர்களைப் பின்பற்;றாதீர்கள். பிரதியெடுப்பது தவறு. புதுமையாக சிந்தனை செய்து வாழ்பவனுக்கு என்றும் எதிர்காலம் உண்டு. உல்லாசத்தை மட்டுமே தொழிலராகக் கொண்டு வாழ்ந்துவரும் ஒருவன் உண்மையான சந்தோஷக்காரான இருக்கு முடியாது.

அதிஷ்டம், துரதிஷ்டம், என்னால் முடியாது போன்ற வார்த்தைகளை தனது வாழ்க்iகியின் அடிமட்டத்திலேயே து|க்கி எறிய வேண்டும். அப்போதுதான் வெற்றி வரும். பொய்யான எதற்குள்ளும் நுழையக் கூடாது. எதிலும் நிஜம் இருக்கட்டும். அனாவசியமான ஆசைகளை ஒழித்துக் கொண்டு, அவசியமான ஆக வேண்டிய ஆசைகளை வளர்ந்துக் கொள்ளவேண்டும். உன் திறமையை து|ண்டி விட மற்றவர்களால் முடியும். உன்னை வளர்த்துக்கொள்ள உன்னால்தான் முடியும். உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை இழந்துவிடக்கூடாது. பிறரிடம் காணும் குறையை, நம்மிடம் எப்;;போதும் அண்டவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் துயரங்களைப் பார்த்து இரக்கப்படு. உன் துயரங்களை உன்னோடு மட்டுமே வைத்துக்கொள். 

உயர்ந்த பண்;புக்கு அடிப்படை, சின்னச் சின்ன தியாகங்கள். நம்பிக்கை வைத்தவனை ஏமாற்றுவது சாமாத்தியம் அல்ல. அது துரோகமே. பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைக்கிறோம் என்று எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி ஓட வேண்டும். வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும்.

பயணப்படாத பாதை மறைந்துவிடுவது போல, பயணப்படாத திறமை அழிந்துவிடும். அழகு, பொருள்களில் இல்லை. அது பார்வையில் இருக்கிறது. நேர்மையான வழியில் வராத எதுவும் நிலைத்துவிடுவதில்லை. நிறைவைக் கொடுப்பதும் இல்லை. மனத்தை அடக்க நினைத்தால் அலையும். மனத்தை அறிய நினைத்தால் அடங்கும். எண்ணம், சொல், செயலால் எவர்க்கும் எப்போதும் நன்மையையே விளைவிக்க நாட்டமாயிரு. 

உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்து உயர்வு – உத்தமர் இயல்பு, உன்ளொன்று வைத்து புறமொன்று பேசினால் உள்ளொளி தீயாகி உடலைக் கெடுத்துவிடும். அவனில் அணு, அணுவில் அவன், உன்னில் எல்லாம். உன்னை அறி. உண்மையில் உனக்கு எதிரி உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே என்றார் மகரிஷி அவர்கள்.

தனக்குள் இருக்கும் மனக்குறைகளைப் புரிந்து கொண்டு அவற்றை அழுந்தப் புதைத்துவிட்டு தன்னிடமுள்ள திறமைகளைப் புரிந்துகொண்டு அவற்றை வெளிக்கொணரும் வகையில் ஒருவன் விழிப்பும், சுதாரிப்பும் அடைந்துவிட்டால் அவன் முன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது என்றார் அறிஞர் ஒருவர்.

ஒரு பிச்சனையிலேயிருந்து தப்பிக்கப் போறதுக்கு நமக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ அதே அளவு சக்திதான் பிரச்சனைகளைப் புரிஞ்சுக்கிட்டு அதை ஜெயிப்பதற்கும் தேவைப்படுகிறது என்கிறார் எம்.ஆர். காம்மேயர்.

வயதைக்கூட்டுவதல்ல நம் வாழ்க்கையின் நோக்கம். வயதிற்கு உயிர் ஊட்டுவதுதான் நம் வாழ்க்கையின் நோக்கம் என்றார் அலெக்ஸிக்ச் கார்மல்.

உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை யாரும் தேர்வு செய்வதில்லை. நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்பதைப் பார்த்துத்தான் உங்கள் தகுதியைத் தீர்மானிக்கிறார்கள்.

எதிர்ப்பு இல்லை என்றால் அங்கு முனNனெற்றம் இல்லை. கனவு காணுங்கள் வாழ்க்கையில் முன்னேற. அன்பு, அறிவு, கணிவு, துணிவு இந் நான்கும் இருந்தால் உனக்கு நல்வழி காட்டும். எவ்வளவு நேரம் வேலை செய்கிறொம் என்பதைவிட எப்படி வேலை செய்கிறோம் என்பதுதான் முக்கியம். திட்டம் இல்லாத வாழ்க்கை பிரேக் இல்லாத வண்டியைப் போன்றது.

முயற்சி என்பது வெறும் கானல் நீர் அன்று. அது நி;ச்சயம் ஆற்றங்கரைக்கு அழைத்தே செல்லும் என்ககிறார் கதே. 

கோபம் கொள்ளாதீர்கள், கோபம் வாயைத் திறக்கும். ஆனால், கண்களை மூடிவிடும் என்கிறார் கேட்டோ அறிஞர்.

மனிதனின் மனம் எதைச் சாதித்து, உறுதியாக நம்புகிறதோ அதை உறுதியாக அடைந்தே தீரும். தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுகிறவன் தோல்வியுறுவான். ஏனெனில் தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழந்துவிடுகிறான்.

மனக்குழப்பம் செயல் திறனைப் பாதிக்கும். ஆகவே வீண் சபலங்களுக்கு மனதினில் இடம் கொடுக்காமல், தெளிவான அடிப்படையில் திடமாக அடியெடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம். 

மன வலிமை உள்ளவர்கள் மரணத்தையும் வெல்ல முடியும். மரணத்தின் ஆக்கிரமிப்பை, தன்னம்பிக்கையினால் தள்ளிப்போட முடியும்.

முயற்;சி முயற்சி இவை கூடிக் கொண்டே இருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும். முடியும் என்றால் முடிகிறது. தயங்;;கினால் சரிகிறது. 

வாழ்க்;;கையில் வெற்றி தோல்விகளை எப்படி சந்திக்க வேண்டும் என்று அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். சிந்தனையை சீர்படுத்தக்கூடிய குரு அல்லது ஆசிரியர்களே இன்றைய மாணவர்களுக்குத் தேவை. சிந்திப்பதே மூலதனம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் எத்தனை ஏற்ற தாழ்வுகள் வந்தாலும் சிந்தித்துக்கொண்டே இருப்பதுதான் எனது மூலதனம் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.

ஆகவே, உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்கத் தயங்கிக் கொண்டேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, இவ்வைந்தும் வெற்றியின் ரகசியங்;கள். 

நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே. வெற்றியின் முதல் இரகசியம் தன்னம்பிக்கையே.

No comments:

Post a Comment