Friday, May 29, 2015

உங்களை நம்புங்கள்

உங்களை நம்புங்கள்

இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன் என்று சான்றோர்கள் கூறுவார்கள். நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

பலமுறை தோல்விகளை தழுவக்கூடும். காரணம் என்ன... நாம் நம்முடைய இலக்கை நோக்கி செல்வதில்லை. அடுத்தவரின் வழிகாட்டுதல் அல்லது தூண்டுதலின் படி செல்கிறோம். பெரும்பாலானோர் தங்களுடைய இலக்கை நிர்ணயிப்பதில்லை. நம்மைப் பற்றிய எண்ணமும், தன்னம்பிக்கை குறைவுமே அதற்கு காரணங்கள். இவற்றை போக்குவதற்கு சில வழிகள்.

உங்கள் உள்ளாற்றலை அறியுங்கள்
தன்னம்பிக்கையை வளருங்கள். மற்றவரிடம் இல்லாத தனித்திறமை உங்களிடம் உண்டு. அந்த திறமையை கண்டறிந்து சிறப்பாக செயல்படுங்கள்.

உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்குங்கள்:
உங்களுடைய செயல்திறனை அறியுங்கள். அதன் மூலம் செய்யும் காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

வருத்தம் கொள்ளாதீர்கள்
உங்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து வருத்தம் கொள்ளாதீர்கள்.

கனவு காணுங்கள்
எத்தகைய முயற்சிகள் மேற்கொண்டால் உங்களுடைய இலக்கை அடையலாம் என்று கனவு காணுங்கள்.

திட்டமிடுங்கள்
மேற்கொள்ளும் செயலில் வெற்றி காண தேவையான திட்டத்தை தீட்டுங்கள். அதை நடைமுறைப்படுத்துங்கள்.

உங்களை நம்புங்கள்
உங்கள் மீது அதிக நம்பிக்கை வையுங்கள். அதன் மூலமாக தான் தன்னம்பிக்கையும், மனதைரியமும் பெருகும்.

முயற்சியை கைவிடாதீர்கள்
ஒரு செயலை செய்யும் போது தோல்வி ஏற்பட்டால் அதனை கைவிடாமல் தொடர்ந்து போராடுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டால் உங்களுடைய இலக்கை மிகவும் எளிதாக அடையலாம்.

No comments:

Post a Comment