Tuesday, May 5, 2015

வெற்றி வேண்டுமா...உற்சாகமாய் செயல்படுங்கள்

வெற்றி வேண்டுமா...உற்சாகமாய் செயல்படுங்கள்

ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்விக்கு உற்சாகம் குறையாமல் செல்வதே வெற்றி.

திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது -அடக்கத்துடன் இருங்கள்.

புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது -நன்றியுடன் இருங்கள்.

அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் 
கொள்வது- எச்சரிக்கையுடன் இருங்கள்.

ஒரு கையைப் பிடிப்பதற்காக மூளையைத் தொலைக்கும் செயலே காதல்.

யாராவது ஒரு வேலையை உங்களால் செய்ய முடியுமா என்று கேட்டால்  முடியும் என்று சொல்லிவிட்டு அதை  எப்படி செய்வது என்பதை யோசியுங்கள்.

முடியுமா என்பது முட்டாள்தனம்:
முடியாது என்பது மூடத்தனம்.
முடியும் என்பதே மூலதனம்.

No comments:

Post a Comment