Friday, June 14, 2013

வெற்றி கிடைக்க காரணமாக இருந்தவர் கடவுள் மட்டுமே!

உலகையே வென்ற மாவீரர் அலெக்சாண்டர். அவர் உலகை ஜெயித்தது வீரத்தால் மட்டுமல்ல! இன்னொரு ரகசியமும் அவரது வெற்றிக்குப் பின் புதைந்து கிடக்கிறது.

அலெக்சாண்டரை ஒரு பேரறிஞர் சந்தித்தார்.

""மாவீரரே! உங்களுக்கு முன்பு இந்த தேசத்தை ஆண்ட அரசர்கள் பலர் உங்களை விட வலிமை வாய்ந்த படைகளுடன் இருந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், உங்களை விட பலமடங்கு பணமும் அவர்களிடம் கொட்டிக் கிடந்திருக்கிறது. ஆனால், அவர்களால் உலகை வெல்ல முடியவில்லை. நீங்கள் அவர்களை விட வலிமை குறைந்தவராயினும் உங்கள் வெற்றியின் ரகசியம் எனக்குப் புரியவில்லை. அதை வெளிப்படுத்துவீர்களா?'' என்றார்.

அலெக்சாண்டர் மென்மையாக ஒரு புன்முறுவலை உதிர்த்தபின் பதிலளித்தார்.

""அறிஞர் பெருமகனாரே! இதில் ரகசியம் ஏதுமில்லை. எனக்கு இந்தள் ஓரளவுக்கே நல்லாட்சியை தந்தனர். மக்களின் எதிர்பார்ப்பு அந்த ஆட்சியாளர்களி வெற்றி கிடைக்க காரணமாக இருந்தவர் கடவுள் மட்டுமே! அவரது அருள் பரிபூரணமாக எனக்கு கிடைத்தது. அதனால் நான் வென்றேன். 

நான் வென்ற நாடுகளில், ஏற்கனவே இருந்த ஆட்சிகடம் ஏராளமாக இருந்தது. அவற்றையெல்லாம் நான் சிறப்பாக நிறைவேற்றினேன். மக்கள் யார் ஆள்கிறார்கள் என்பது பார்ப்பதில்லை. தங்களைப் புரிந்து கொண்டு, தங்களுக்கு வேண்டியதைச் செய்யும் ஆட்சியாளர்களையே விரும்புகிறார்கள். அவ்வகையில், முந்தைய ஆட்சியாளர்களை விட சிறப்பான ஆட்சியையும், நிறைந்த வசதிகளையும் செய்து கொடுத்தேன். அந்த நாட்டு ஆட்சியாளர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக, அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் நான் நடக்கவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதை அளித்தேன். இதுவே நான் வெற்றிப்படிக்கட்டில் கால் வைத்த ரகசியம்,'' என்றார்,

உலகெங்கும் நல்லாட்சி மலரட்டும். மக்களின் தேவை நிறைவேறட்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் மனநிலை மக்களிடம் வளரட்டும். இதற்கெல்லாம், இந்த புத்தாண்டிலாவது, ஆண்டவனின் அனுக்கிரகம் கிடைக்கட்டும்.

No comments:

Post a Comment