Friday, June 28, 2013

வாஸ்து முறையில் வீடு அமைக்க

வாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலாம். நாம் வாழும் வீடு சுத்தமாகவும் வாஸ்து சாஸ்திரப்படியும் துல்லியமாக அமைந்து விட்டால் எல்லா வகையான பேறுகளையும் பெற்று வாழ முடியும்.

இந்த வாஸ்து சாஸ்திரம் என்கிற மெய்ஞானத்தைப் பற்றி இன்று பல நூல்கள் வந்து விட்டாலும் மனை அடி சாஸ்திரத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கும் ஆதிகால நூல் சர்வார்த்த சிற்ப சிந்தாமணியே. சிற்ப சாஸ்திரம் என்பது மிகச் சிறிய சிலைகளை வடிக்கும் நுட்பங்களைக் கூறுவது.

சிலா சாஸ்திரம் என்பது மிகப்பெரிய ஆலயங்கள், விண்முட்டும் கோபுரங்கள் ஸ்தூபிகள் அமைப்பதைப் பற்றி கூறுவதாகும். வீட்டைக் கட்டுபவர் மேஸ்திரி என்றும் என்ஜினீயர் என்றும் ஆலயம் கட்டுபவர்கள் ஸ்தபதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மனையடி சாஸ்திரத்தின்படி வீடு கட்டுபவர்கள், வீடு கட்டப்படுகிற நிலப்பரப்பின் நீளம் மற்றும் அகல அளவுகளை அடிகள் கணக்கீட்டால் அளந்து பார்க்கப்பட்டு வீடு அமைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

உத்தமமான மனையின் நீள அகல அளவு 16 அடிகளுக்கு மேலும், மத்தியமான மனையின் நீள அகல அளவு ஒரு குறிப்பிட்ட அளவும், தீயதான (அதமமான) மனையின் நீள அகல அளவுகள் தற்செயலாக அமைந்து விட்டால் அதைச் சரி செய்து விட வேண்டும் என்றும் மனை அடி சாஸ்திரம் விதிகள் கூறுகிறது.

ஒரு வீட்டைக் கட்டுவதில் குழப்பமில்லாத மனநிலை இருக்க வேண்டும். தரம் கொண்ட தகுதியான நிலப்பரப்பிலும், விதியோடு கூடிய நீள அகல உயர அடிகள் அளவிலும் அமைத்து நல்ல நாள் நேரம் பார்த்து வீடு கட்ட ஆரம்பிப்பதும் சுபநாளில் வேதமுறைப்படி கிரகபிரவேசம் செய்வதும் நம் வாழ்வில் நிம்மதியான தருணங்களை உருவாக்கும்.

உங்கள் வீடு லட்சுமி கரமாயத் திகழ்கிறது என்று மற்றவர்களால் பாராட்டப்படவும் வாழ்த்துப் பெறவும் பொறுமையாகச் செய்யப்பட்டு யோகமான வீட்டைக் கட்டுங்கள்.

1. கிழக்கு வடக்கு திசைகளில் அதிகமான காலி இடம் விட வேண்டும். 

2. கடைக்கால் வெட்டல் (வாணம் தோண்டல்) வடகிழக்காகிய ஈசான மூலையிலிருந்து தொடங்க வேண்டும். 

3. உங்கள் வீட்டு தனப்பகுதிக்கு உரிய கிழக்கு வடக்கு ஈசானிய திசைகள் பள்ளமாக இருக்கும்படி சரி செய்ய வேண்டும். 

4. மேற்கு, தெற்கு, தென்மேற்கு கன்னி மூலை மேடாக அமைக்க. 

5. கிழக்கு, வடக்கு ஈசான்யம் தவிர மற்ற திசைகளில் கிணறு குழி, பள்ளம், இருந்தால் அதை மண் மூடி புதைத்து விடுதல். 

6. ஈசான்யத்தில் கிணறு அல்லது குழி வெட்டி நீர் தேக்கி. அந்த நீரை வீடுகட்ட பயன்படுத்துதல் வேண்டும். 

7. வீடுகட்ட கொண்டு வரும் கற்கள் மற்றும் பொருட்களை செங்கல், மரச்சாமான்கள், உபகரணங்கள் உட்பட கிழக்கு வடக்கு திசைகளில் வைக்காமல் தெற்கு மேற்கு திசைகளில் வைக்க வேண்டும். 

8. வீடு கட்ட நீங்கள் தேர்வு செய்யும் நிலப்பகுதி சதுரமாகவோ நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். 

9. அந்த திசையின் கோணமும் வெட்டுப்பட்ட நிலையில், பின்னமாக, முக்கியமாக ஈசான்யம் மட்டும் குறைந்த நிலையில் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

10. வாசற்படி, ஜன்னல், அலமாரி, கதவுகளை ஒன்றுக்கு ஒன்று எதிராக வைத்தல் நல்லது. 

11. வாசலில் முழுமையாக சுவர் அமைத்து (4 அங்குலம் வரை) அதன் பிறகு அமைத்தல் நல்லது. 

12. வாஸ்து நேரத்தைப் பயன்படுத்தும் போது நேரத்தை விட்டுவிடாது வழிபட்டு தொடங்க வேண்டும்.

No comments:

Post a Comment