Tuesday, June 4, 2013

வாழ்க்கையின் ரகசியம்

* உடல், மனம், அறிவு மூன்றையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென்று ஒதுக்கி விடுங்கள். 
* வஞ்சனையால் எதையும் உலகில் சாதிக்க இயலாது. அன்பும் உண்மையும் இருந்தால் பெரிய செயலைக் கூட எளிதாக செய்து விடலாம்.
* இந்த பரந்த உலகில் பிறந்திருக்கும் நீங்கள், அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால், உங்களுக்கும் சிறு கல்லுக்கும் கூட வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
* பயமின்மையே வாழ்க்கையின் ரகசியம். பிறரிடம் இருந்து வரும் உதவியை ஏற்க மறுக்கின்ற அந்த கணமே நமக்கு சுதந்திரம் கிடைத்து விடும்.
* நியாயமான கோபம் என்ற ஒன்று எங்கும் கிடையாது. ஏனெனில், அனைத்தையும் சமமாகக் காணத் தவறுவதால் தான் ஒருவருக்கு கோபமே உண்டாகிறது.
* எண்ணங்களுக்கு நாம் உரிமை உடையவர்கள். நல்ல எண்ணங்கள் நம்மை நோக்கி வருவதற்காக உள்ளங்களைத் திறந்து வைக்க வேண்டியது நம் கடமை. 
- விவேகானந்தர்

No comments:

Post a Comment