Friday, June 7, 2013

சின்ன சின்ன ஆசை


* மெழுகுவர்த்தி தான் உருகி அனைவருக்கும் வெளிச்சத்தை கொடுத்து, கரைந்து காணாமல் போகிறது.

அதுபோல் உருக ஆசை!!

* ஒரு கப்பல் மூழ்க போகிறது என்றால் அதன் கேப்டன் அதில் உள்ள எல்லாரையும் தப்பிக்க வைக்க நினைப்பான்.

அது முடியாத போது 'அந்த கப்பலோடு தானும் மூழ்கி போவான்'.

'பயணிகளை காப்பாற்ற முடியலையே', 'கப்பலை காப்பாற்ற முடியலையே' என்று தன்னை தப்பிக்க நினைக்காது மூழ்கும்

கேப்டனைப் போல் மூழ்க ஆசை!!

* ஒரு விமானம் பறக்கிறது அதில் மொத்தம் 50 பேர் பயணிக்கிறார்கள்! அதில் மொத்தம் 49 பாராசூட்டுகள்தான் உள்ளன.

விமானம் பழுது காரணமாக வெடிக்க போகிறது.

5-ந்தாவது நபராகி பாராசூட்டை மற்றவர்களுக்கு கொடுக்க ஆசை!!

* ஒரு படகில் சிலபேர் பயணிக்கிறார்கள்! படகில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு அதில் உள்ள பாரத்தை குறைக்க வேண்டும்!

அந்த படகில் இருந்து ஒருவர் கடலில் குதித்து விட்டால் மற்றவர்கள் பிழைத்து கொள்ளலாம்!

அந்த ஒருவனாக இருக்க கொள்ளை ஆசை.

இந்த சின்ன சின்ன ஆசைகள் சொல்லும் கருத்து என்னவென்றால்..!

ஒவ்வொரு சுதந்திரத்திற்க்கும்,

விடியலுக்கும்,

மக்கள் எழுச்சிகளுக்கும்,

பிண்ணியில் சிலர் செய்த ஒப்பற்ற தியாகங்கள் அடங்கி நிற்கின்றன.

நாம் இந்த பூமியில் இருப்பதின் லட்சியம் நாம் வாழ மட்டும் இல்லை.

மற்றவர்கள் வாழ நம்மால் ஏதாவது செய்யவேண்டும்.

எல்லோரும்,

இந்த பூமியில் பிறக்கிறார்கள்,

உண்கிறார்கள்,

உடுத்துகிறார்கள்,

திருமணம் செய்து கொள்கிறார்கள்,

குழந்தைகள் பெற்று கொள்கிறார்கள்,

எல்லாம் தனக்காக மட்டுமே.

இதில் இருந்து நாம் எப்படி வேறுபட்டு நிற்கிறோம் என்பதே இங்கு கேள்வி.

ஒரு சிலரே தங்களை உருக்கி மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்கும் மெழுகுவர்த்தியாக வாழ்ந்தார்கள்.

அதுவே இன்று உலகில் நாம் காணும் நல்ல விஷயங்களும், எஞ்சி நிற்கும் மனித நேயம்.

இன்று நாம் அனுபவிப்பது எல்லாம் இவர்கள் தங்களை உருக்கி நமக்கு போட்ட பிச்சைகளே.

வெறும் வெளிச்சத்தை நுகரும் ஒரு சராசரி மனிதனாக நாம் வாழாமல்,

நாமும் பிறருக்காக ஓளி வீசுவோம்.

பிறரின் இன்ப,துன்பங்களில் பங்கு ஏற்போம்..

No comments:

Post a Comment