Tuesday, June 4, 2013

முயற்சித்து முன்னுக்கு வருக!

* ஒற்றுமைக்கு வலிமை அதிகம். பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் புதிய வலிமையும், நன்மையும் பெறுவான். 
* திருமணம் செய்து கொண்ட ஆணுக்குப் பெண் அடிமையல்ல. மனைவி என்பவள் உயிர்த்துணை. வாழ்க்கைக்கு ஊன்றுகோல். கணவனின் உயிரிலே ஒரு பகுதி.
* செல்வம் சிலரின் வசமாகி விட்டதால் தான், பலரும் ஏழைகளாக இருக்கும்படி ஆகி விட்டது. இயன்றவரை பலரிடமும் பொருள் இருக்கும் படி செய்யும் வியாபாரமே சிறந்தது.
* திருமண பந்தத்தை விலக்கிக் கொள்வதில் அவசரப்படுவது கூடாது. பொறுமையாக இருந்து மணவாழ்வைப் பாதுகாப்பதே நாகரிகம்.
* மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும்போது, தைரியம் என்னும் சாதனத்தால் தாங்கிப் பிடித்து நிறுத்தப் பழகுவதே சரியான யோகப் பயிற்சி.
* பிறர் உழைப்பின் பயனைத் திருடி வாழ முற்படுவது கூடாது. உங்கள் சொந்த முயற்சியில் முன்னுக்கு வருவதில் தான் பெருமை இருக்கிறது.
- பாரதியார்

No comments:

Post a Comment