Friday, June 28, 2013

சுய முன்னேற்றம்

மனித வாழ்வு என்பது இன்பம் மற்றும் துன்பம் இணைந்தே காணப்படும் இயல்பு கொண்டது. இத்தகைய அற்புத பிறவியில் சிறப்பாகச் செயல்பட்டு அழியா புகழை நிலை நிறுத்த வேண்டுமானால் நிலையான மகிழ்ச்சி மனநிலையில் செயல்பட வேண்டும் என்பது உளவியல் வல்லுனர்களின் கூற்று மட்டுமல்ல. வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ளக் கூடிய செய்தியும் அதுவே தான். ஆகவே வெற்றிகளை அடைய வேண்டுமானால், சாதனை சரித்திரத்தை உருவாக்க வேண்டுமானால், நாம் எத்தகைய சூழலிலும், அதாவது சாதக சூழலிலும், துன்ப அல்லது பாதக சூழலிலும், மகிழ்ச்சி யுடனும், முழு மனதுடனும் செயலாற்றுவது அடிப் படை அவசியம். எனவே வாழ்வில் சந்தோஷத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட என்னுள் சந்தோஷம் என்ன விலை? சந்தோஷம் எங்கு கிடைக்கும்? சந்தோஷத்தை எப்படி அடைய லாம்? என எண்ணற்ற கேள்விகள் அலை மோதிக் கொண்டிருந்தன. அந்த கேள்விகளுக்கான விடை கண்டு தன்னம்பிக்கை வாசகர்களின் சந்தோஷத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவின் பலனே இந்த கட்டுரை.

போட்டிகள் நிறைந்த இயந்திரத் தனமான வாழ்க்கை முறை மிகுந்த உலக ளாவிய சமூக பொருளாதார சூழலில் சந்தோஷம் என்ன விலை? என்று கேட்கும் நிலைக்கு மனித வாழ்க்கை முறை மாறி வருவது கண்கூடு.
ஆனால் சந்தோஷம் என்பது மனிதன் உயிர் வாழத் தேவையான அடிப்படை காரணி களில் ஒன்று என்பது உளவியல் வல்லுனர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.

இன்று நடைபெறுகின்ற பல்வேறு கொலை, கொள்ளை, தற்கொலை, மணமுறிவு, மனநல பாதிப்பு, சண்டை சச்சரவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்ப்போ மானால், மேற்கண்ட தீமைகள் மூலம் ஒருவர் சந்தோஷத்தை தேட முயல்கின்றனர் அல்லது மேற்கண்ட பிரச்சனைகள் மூலம் ஒருவர் தான் இழந்த சந்தோஷத்தை மற்றவர்களிடமிருந்தும் எடுத்துவிட வேண்டும் என்று செயல்படு கின்றார்.

தன்னம்பிக்கை மற்றும் துணிவு இல்லாத மூன்றாவது வகை மனிதர்கள் தங்கள் சந்தோஷம் போய்விட்டதை எண்ணியோ, அடுத்தவர் சந்தோஷமாக வாழ்கின்றதை நினைத்தோ, தங்களால் சந்தோஷத்தை அடைய முடிய வில்லையே என்ற இயலாமையினாலோ, சந்தோஷத்தை தேடி புறப்படுவதற்குப் பதில், தங்கள் இயலாமையைத் துயரங்களாக மாற்றி, அபார சக்தி கொண்ட மனித மனத்தையே அடக்கி, ஒடுக்கி மனஅழுத்தம், மனநோய், தற்கொலை என தங்களைத் தாங்களே வருத்தி அழித்துக் கொள்கின்றனர்.

சந்தோஷம் முக்கியமா?

மனித சமுதாயம் செழிப்புடன், வளர்ச்சிப் பாதையை நோக்கி வீறுநடை போடுவது நமக்கெல்லாம் நன்மை பயக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் மனிதகுலம் மகத்தான சாதனைகள் நிகழ்த்த வேண்டுமானால், நிச்சயமாக மனித சமுதாயத்தின் மனங்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு குதூகுலம் கொண்டு இருக்க வேண்டியது அவசியம்.

இன்று வரையிலும் மனிதகுலம் செய்த சாதனைகள், அனைத்திற்கும் காரணம் என்ன என்று தேடிப் பார்ப்போமானால், அந்த சாதனை களை நிகழ்த்தியவர்கள், அத்தகைய சாதனை களை நிகழ்த்துவதற்காக அனுபவித்த துன்பங்கள், தியாகங்கள், வலிகளை சந்தோஷத்தின் ஊற்றுக் களாக ஏற்றுக் கொண்டதே காரணம் ஆகும்.

வரலாற்றை புரட்டிப் பார்ப்போமானால், அமெரிக்க தேசத்தை அடையாளம் காட்டிய கொலம்பஸ், தன் வாழ்நாள் குறிக்கோளுக்காக தன் தாய், தந்தை, மனைவியை இழந்ததுடன் தன் அன்பு மகன் டீக்கோவை அனாதை இல்லத்தில், பெரும் சோகம், வருத்தம், துக்கம் மற்றும் மனவலியுடன் ஒப்படைத்து விட்டு செயல்பட புறப்பட்டார் என்பதைக் காணமுடிகிறது.

கொலம்பஸ் மேற்கண்ட துன்பங்களில் மகிழ்ச்சியை காணும் மனவலிமை மற்றும் மனநிலையில் தான் அமெரிக்க தேசத்தை அடை யாளம் காட்டிய சாதனைக்காக இன்றளவும் மக்கள் மனதில் புகழோடு நிலைபெற்றிருக்கின்றார்.

அதே போன்று தான் ஒரு தாய், பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து, பல்வேறு துன்பங்களை ஏற்று, தன் உயிரினும் மேலான மழலைச் செல்வத்தை பெற்றெடுக்க காரணம் துன்பத்திலும் இன்பம், துயரத்திலும் சந்தோஷம் என்ற மனநிலையே.

உலகில் எந்த ஒரு சாதனையையோ, அற்புதத்தையோ, நல்ல செயல்களையோ, நிகழ்த்த வேண்டுமானால் துன்பங்களை இன்ப அனுபவங்களாய் ஏற்றே தீர வேண்டும். யார் ஒருவர், துன்பத்தில் இன்பம் காண முடியுமோ? துயரங்களில் சந்தோஷம காண முடியுமோ? அவர்களாலேயே சாதனைகளை உருவாக்க முடியும். வெற்றிகளை குவிக்க முடியும். அற்புதங்களை நிகழ்த்த முடியும்.

ஆகவே இன்று மனித குலத்தின் மகத்துவ மான வாழ்விற்கு வழிவகுத்த விமானம், கணிப்பொறி, விண்வெளி தொழில் நுட்பம் போன்ற அனைத்து முன்னேற்றங்களுக்கும் காரணம், பல்வேறு மனிதர்கள் துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுத் துணிவுடன், மகிழ்வுடன் தடைகளைத் தாண்டி செயல்பட்ட மகிழ்வு மனநிலையே. மட்டுமின்றி, எத்தகைய சூழலிலும் சந்தோஷ மனநிலையில் செயல்படுபவரால் அல்லது சந்தோஷ மனநிலையை உருவாக்க முடிப வரால் உழைப்பு, ஊக்கம் விடாமுயற்சி, உறவு, நட்பு, தன்னம்பிக்கை, உதவிகள், துணிவு, மன நிறைவு, அமைதி உடல்நலம் போன்ற பல்வேறு நேர்மறை விளைவுகளை அடைய முடிகின்றது.

ஆகவே இவ்வளவு அற்புதமான நன்மை களையும், வெற்றிகளையும் வழங்கும் மகிழ்வு மன நிலையை உருவாக்க உதவும் உன்னத வழிமுறை களை இக்கட்டுரை வாயிலாக பார்ப்போம்.

மகிழ்ச்சிக்கான வழிமுறைகள்

சந்தோஷத்தின் வழிமுறைகளை வரிசைப் படுத்தும் முன் உங்களுடன் சந்தோஷம் சார்ந்த மூன்று கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுவது நன்மை பயக்கும் என்று கருதுகிறேன்.

1. சந்தோஷம் என்பது ஒரு மனநிலை மட்டுமே
இது நம் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகள், கிடைக்கும் அனுபவங்கள், காணப் படும் சூழல்கள், நம்முடைய மனோபாவம் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படை யாகக் கொண்டது. இதை விலைகொடுத்தோ, கடனாகவோ, நன்கொடையாகவோ நாம் அடைய இயலாது இது நம் உள்ளிருந்து வெளியே வரும் ஒரு உணர்வே ஆகும்.

2. சந்தோஷம் என்பது நிலையான ஒரு காரணி அல்ல:
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று, வாழ்வில் சந்தோஷ மனநிலையும் சந்தோஷமற்ற மனநிலையும் மாறி மாறி காணப்படுவது இயற்கை. துன்பமும், (அல்லது) சந்தோஷமும் மட்டுமே நிலையாக இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

3. சந்தோஷத்திற்கு அடிப்படையான, வெற்றி, சாதனை, பாராட்டு போன்றவற்றிக்கு அடிப்படை பிரச்சனைகள், தோல்விகள், அவமானங்கள், தடைகள் தாண்டிய முன்னேற்றமே :

இத்தகைய தடைகள் தாண்டிய வெற்றிப் பயணத்தை பயணிக்கும் போது நிச்சயம் பல்வேறு துன்பங்கள் ஏற்படுவது உறுதி. ஆனால் அத்தகைய துன்பங்களை எதிர் கொண்டு முன்னேறுபவர்களே வெற்றிக் கனியைப் பறிக்க முடியும். எனவே வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர் களுக்குத் துன்பமும் இன்பமே. ஆகவே துன்பங்கள் இருந்தாலும், அவற்றை மீறி சந்தோஷ மனநிலையில் செயல்படுபவர்களே வெற்றிகளைக் குவித்து மேலும் மேலும் மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

மேற்கண்ட கருத்துக்கள் உலகில் எல்லோர் வாழ்விலும் நிச்சயம் துன்பங்கள் மற்றும் இன்பங்கள் இணைந்து காணப்படுவதை உணர்த்துகின்றன. ஆகவே வாழ்க்கையில், துன்பங்களை முழுமையாக மாற்றி விட முடியாது என்பது அனுபவ பூர்வமான உண்மை. எனவே இந்தக் கட்டுரையில் சந்தோஷத்திற்கான மூன்று விதமான வழிமுறைகளை ஆராய்வோமா.

ஒன்று : துன்பங்கள் வரும் வாய்ப்பினை குறைப்பதற்கான வழிமுறைகள்

இரண்டு : துன்பங்களின் தாக்கத்தை குறைக்க உதவும் உத்திகள்.

மூன்று : ஏற்படும் துன்பங்களை மகிழ்ச்சி மனநிலைகளில் செயல்பட்டு, எதிர்கொண்டு, வெற்றி கொண்டு சந்தோச மனநிலைக்குள் பிரவேசிக்க உதவும் செயல்கள்.

இத்தகைய சந்தோஷம் தரும் 50 வழிமுறைகள் (அ) உத்திகள் (அ) செயல்கள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்பட்டிருந் தாலும், நாம் சூழலுக்கு ஏற்ப, பிரச்சனைகளின் தாக்கத்திற்கு ஏற்ப, ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சந்தோஷ வழிமுறைகளை பயன் படுத்தி நம் சந்தோஷத்தை உருவாக்கவோ அல்லது பெருக்கவோ செய்யலாம்.

தற்பொழுது சந்தோஷத்திற்கான 50 வழிமுறை கள் குறித்து ஆராய்வோமாக.

1. குறிக்கோள் கொள்க

மனித வாழ்வில் பிரச்சனைகள், மற்றும் துன்பங்கள் ஏற்படுவது இயற்கையான செயல். ஆனால் உறுதியான குறிக்கோள்களுடன் செயல் படுபவர்கள், அத்தகைய கடினமான சூழல் களிலும், மகிழ்ச்சியுடனும், இன்முகத்துடனும் தங்கள் இலக்கு நோக்கி உத்வேகத்துடன் செயலாற்றுகின்றனர். இவர்களால்,

(அ) எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ முடிகின்றது.
(ஆ) மற்றவர்களிடம் சிறப்பான உறவு (Relationship) பாராட்ட முடிகின்றது.
(இ) உறவினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரின் அன்பு மற்றும் ஆதர வுடன் வெற்றிகரமாக செயல்பட முடி கின்றது.
(ஈ) உறுதியான குறிக்கோளுடன் செயல் படுவதனால், லட்சியவாதிகளின் திட்ட மிட்ட, சிறந்த செயல்பாடுகளினால்:

1. தெளிவான, உறுதியான மனநிலையுடன் செயல்பட முடிகின்றது.
2. திட்டத்தின் அடிப்படையில், அடுத் தடுத்த உறுதியான செயல்களை சிறப்பாக செயல்படுத்த முடிகின்றது.
3. உறுதியான, சிறந்த செயல்பாடுகளினால், சாதனையை நோக்கிய பயணத்தில் பல்வேறு சிறிய சிறிய வெற்றிகள் வசப்படுகின்றன.

உறுதியான செயல்திட்டம், திட்டமிட்ட வழிமுறைகள் மற்றும் தெளிவான மனநிலை யுடன் செயல்படும் லட்சிய புருஷர்களுக்கு எந்த சூழல்களிலும் (வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ) உத்வேகத்துடன், உற்சாகத்துடன் மகிழ்ச்சியோடு தங்கள் குறிக்கோளை நோக்கி செயல்படமுடிகின்றது.

ஆகவே சந்தோஷத்தோடு செயல்பட்டு, வெற்றிகளை ஈட்டி சாதனை சரித்திரத்தை உருவாக்கி மக்கள் மனதில் வாழ வேண்டு மானால், உடனடியாக ஒரு உயரிய குறிக்கோளை ஏற்று, அந்த லட்சியத்தை நோக்கி வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளுங்கள். உறுதியான குறிக்கோளுடன் செயல்படுபவர்கள், எத்தகைய இடர்கள், தோல்விகள், துன்பங்கள், அவமானங்கள் அவர்கள் லட்சிய பயணத்தில் குறுக்கிட்டாலும், சிறிதளவேனும் மனவருத்தம் கொள்ளாமல், மேலும் உற்சாகத்துடன், உத்வேகத்துடன் செயல் பட்டு, அனுபவப் பாடத்துடன் தங்கள் உயரிய இலக்கை நோக்கி பயணிக்கின்றனர். ஆகவே லட்சிய வாழ்க்கை வாழ்வோம். சந்தோஷத்தை நிலையாதாக்கி கொள்வோம்

No comments:

Post a Comment