Monday, April 20, 2015

இளநரையை தடுக்க, போக்க… இய‌ற்கை மூலிகை எண்ணெய்!

இளநரையை தடுக்க, போக்க… இய‌ற்கை மூலிகை எண்ணெய்!

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே, ஆண், பெண் இரு பாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால், நம் முன்னோர்கள் 60 வயது வரை, தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன்  வாழ்ந்தார்கள்.

அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில், நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால், அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, பித்தத்தை அதிகரித்து, பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து, இளவயதிலேயே நரையை உண்டு பண்ணுகிறது.

இத்தகைய பிரச்சனையைப் போக்க, உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.  மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்க இயற்கை உணவுகளே சிறந்தது. எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.

உணவில், அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வது நல்ல பயன்தரும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து, சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக் கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தாலும், இளநரை மாறும்.
இளநரையை போக்க மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை

தேங்காய் எண்ணெய் 100 மி.லி.,
சீரகம் 1 ஸ்பூன்,
சோம்பு 1/2 ஸ்பூன்,
சின்ன வெங்காயம் 3,
கறிவேப்பிலை 2 இணுக்கு,
கொத்தமல்லி சிறிதளவு,
நெல்லி வற்றல்10 கிராம்,
வெட்டிவேர் 5 கிராம்.

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி, தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநறை நீங்கும் என கூறப்படுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எதுவும், பக்க விளைவை ஏற்படுத்தாது என்பதால், முயற்சி செய்து பார்க்கலாமே…!

No comments:

Post a Comment