Tuesday, April 21, 2015

குறிக்கோளும் முடிவெடுத்தலும்

குறிக்கோளும் முடிவெடுத்தலும் 

இப் கட்டுரை பசுமைக்குமார் எழுதிய புத்தகத்தில் இருந்து படித்து அப்படியே உங்களுக்கு தருகிறேன் ... 

இளையவர்களை சமூக முன்னேற்றதுக்கு பாடுபடக்கூடிய நல்லவர்களாகவும் லட்சிய நோக்கம் கொண்ட வல்லவர்களாகவும்  உருவாக்கிடவேண்டும். அப்படி அவர்கள்  உருவாகிவிட அவர்களுக்கு குரிக்கொல்குறிக்கோள் பற்றிய தெளிவும், எந்த ஒரு பிரச்சனையிலும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் வேண்டும்.

இளமைப்பருவம் ஆக்கபுர்வமான சக்திகள் கொண்டது. வளமைமிக்கது. அபரிமிதமான ஆற்றல் கொண்ட இந்த இளம் பருவத்தினரைச் சமுதாயம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக்க நோக்கத்திற்கும் இது பயன்படும். அழிவு நோக்கதிற்கும் பயன்படும். காட்டாற்று வெள்ளத்தை தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவது போல இளையதலைமுறையினரின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினர் தீயவர்களின் பிடிக்குள் சிக்கினால் அவர்களின் சக்தி யாவும் வீணாவதுடன் சமுதாயத்திற்கும் கேடாகமாறிவிடும்.

இளையவர்களை சமூக முன்னேற்றதுக்குப் பாடுபடக்கூடிய நல்லவர்களாகவும் லட்சிய நோக்கம் கொண்டவல்லவர்களாகவும் உருவாக்கிடவேண்டும்.அப்படி அவர்கள் உருவாகிட அவர்களுக்குக் குறிக்கோள் பற்றிய தெளிவும் எந்த ஒரு பிரச்சனையிலும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் வேண்டும்.

அவரது குறிக்கோளை அடையலாம் கண்டு கொள்ளும் திறன் மிகவும் இன்றியமையாதது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை திசை தெரியப் பயணம் போன்றது. எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற தெளிவு வேண்டும்.

இதுதான் பாதை, இதுதான் பயணம் என்ற புரிதலுணர்வு தேவை. வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அல்ல, அது இருந்த இடத்திற்கே சுற்றிச்சுற்றி ஒருநாளும் வருவதில்லை.

வாழ்க்கை என்பது சூலலேணி வளர்சியைக்கொண்டது. ஆனாலும் அதில் தொடர்ச்சியான முன்னேட்டம் இருக்கும். இந்த சூலேணி படியில் எவ்வளவு படிகளைதொட வேண்டும் என்ற இலக்கு நிர்னயிக்காமல் தொடர்ந்து மேலேறுவது சோர்வெனும் பாறாங்கல்லைத் தலைக்குள் முளைக்க வைத்து விடும்.

லட்சியதிற்குத்தான் சென்றடைய வேண்டிய இலக்கு, இலக்கை அடைவதற்கான திட்டம், திட்டத்தை நிறைவேடற்டறுவதற்கான மனபலம், விடமுயட்சி, துணிச்சல் போன்றன வேண்டும். தோல்வியைக்கண்டு துவண்டு விடக்கூடாது, அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும்.

வெற்றியாளர்கள் பல துறைக்களிலும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கை அனுபவங்களை தெரிந்து கொண்டாலே, அவை வெற்றியை நோக்கி வீர நடை போட உத் வேகம் ஊட்டும். 

வெற்றியை விட ஒருபடி மேல் சாதனை. ஒரு இலக்கைத்தொட்டு, வெற்றியை ஆரத் தழுவிக்கொண்டவகள், அடுத்து நிர்ணயிக்க வேண்டிய இலக்கு என்பது சாதனை புரிவது. பல துறைகளிலும் நாமறிந்த, தெரிந்து கொண்ட சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், நமது சாதனை மனோ பாவத்தை உரமூட்டி வளர்க்கும்.

குறிக்கோளை அடைய நினைப்பவர்கள், வேர்ரியலர்களைத் திகழ விரும்புகிறவர்கள், சாதனையாளர்களை மாறத் துடிப்பவர்கள்ஆகிய இவர்களுக்கெல்லாம் வலிமை மிக்க அறிவாற்றல் தேவை. பலவீனமான எண்ணம் தோல்வியைத்தான் தழுவும். 

எதிர் மறையான எண்ணம் உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும். ஒருவர் தன்னுடைய குறிக்கோளை கண்டு கொள்வது அவசியம். அது போலவே முடிவெடுக்கும் திறனும், பிரச்சனைகளை சந்திக்கும் துணிவும் அவசியம்.

குழந்தைப்பருவம் முதல் இதற்கான பயிற்சி பெற்றால், இளமைப்பருவ வளர்ச்சியில் அவர்களிடம் ஆக்கபூர்வமான முன்னேர்ரதைக்கொண்டுவரும்.

கால்களில் சிக்கியிருப்பது, உதறினால் கீழே விழும் கயிறு என்பதனை அறியாமல், பாம்பு ஒன்று காலைச் சுற்றியிருப்ப்பதாய் கருதிவிடக்கூடாது. சிக்கல் எதுவாயினும், சிக்கலி இருந்து விடுபட சிக்கல் முடிப்பபதை அவிழ்ப்பதா அறுத்து விடுவதா என்று முடிவெடுக்கத் தெரிய வேண்டும். 

ஆதிரக்காறனுக்கு புத்தி மட்டு என்பார்கள், ஆத்திரம் அறிவுக்ககன்களை மறைத்துவிடும். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு பயணத்திற்கு தடையாக முடியலாம். முஇவு தவறாகும் போது, வெற்றி வெகுதுரம் பொய் விடும்.

முடிவெடுக்கும் போது அறிவு பூர்வமா முடிவெடுத்தல் சாலச்சிறந்தது. உணர்ச்சி பூர்வமாக முடிவெடுக்கக்கூடாது. “எண்ணித் துணிக கருமம்” என்றார் வள்ளுவர். அதே சமயம் நிதானமாக எடுக்கும் முடிவு அல்லது தாமதமாக எடுக்கும் முடிவும் தொல்வியைத் தளுவலாம். காலம் கருதி செயற்பட்டால் ஞாலத்தையும் வெல்ல முடியும். 

முவேடுக்கும்போது, தன் வலிமை, பிறரது  வலிமை, இடம், பொருள், இவள யாவும் நமது கவனத்திற்கு வர வேண்டும். மனித வாழ்க்கைக்கு பலவகையான திறமைகளை பெற வேண்டியுள்ளது. அதில் முடிவெடுக்கும் திறனும் ஒன்று. 

குறிக்கோள் பற்றிய தெளிவும், முடிவெடுக்கும் திறனும் உங்களை வெற்றிபடிகளில் வீர நடை போட வைக்கும்! அந்த வீர நடைக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

சரியாகக் குறிக்கோளைக் நிர்ணயித்துக்கொல்வதும் சரியான முடி வெடுக்கும் திறன் பெறுவதும் தன்னம்பிக்கை தரும். தன்னம்பிக்கை இல்லாதவர்களால் தங்களுக்கான குறிக்கோள்களை நிச்சயித்துக்கொள்ள முடியாது. குறிக்கோளை அவர்கள் இனங்கண்டு கொள்ள  முடியாமலும் போய் விடும்.

நாம் ஏன் குறிக்கோளை நிர்ணயிக்கத் தயங்குகிறோம்                   

*நாம் வாழ்க்கையை பெரும்பாலும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. நம்மில் பலர் வாய் சொல்லில் வீரர்தான். அதை செயலில் காட்ட தயங்குகிறோம். 

*நம் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு என்று ஏற்றுக்கொள்வதில்லை. பிறர் நம்மை புரிந்து கொள்வது இல்லை என்போம். என் விதி என்போம். அனால், நம் செய்கைகளே நம் வாழ்க்கை தரத்தை நினஇக்கிறது என்று மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். வாயில் வந்ததைப்பேசி, வேந்ததைத்தின்று விதி வந்தால் சாவோம் என்றே பலர் எண்ணி வாழ்கின்றனர். 

*நம்மில் பலருக்கு தம்மை பட்டிய தால்வேன்னம் இருக்கிறது. ஒரு விதமான குற்ற உணர்வு அவர்களை அலைக்கழிக்கிறது. சிறு வயது முதலிலே, நாம் விரும்பத்தகதவர்கள் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்தால் இலக்குகளை நோக்கி வெற்றி நடை போட இயலுமா?

*பலர் இலக்கு நர்ணயம் செய்வது முக்கியம் என்று நினைப்பது இல்லை. வாழ்க்கையின் அன்றாட அலைச்சல்களில் சிக்கித்தவிக்கும் பலருக்கு குறிக்கோள் பற்றி தெரிந்திருக்க வழியில்லை. எப்படி குறிக்கோளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவது இல்லை.

*பலருக்கு பிறர் என்ன சொல்வார்களோ என்று பயம். நம்மைச்சுட்டி இருப்பவர்களால் நாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு ஆவல். இதனால் பல நேரம் நாம் உண்மையாக விரும்புவதை செய்ய தயங்குகிறோம். சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களே செய்ய விழைகிறோம். நம்மை கேலி செய்வார்களோ என்ற எண்ணத்தில் குறிக்கோளை நிர்ணயிக்க மறந்து விடுகிறோம். நமது குறிக்கோள் நம்மை மட்டும் தெரிந்திருந்தால் போதுமானது. யார் நம்மை உற்சாகப்படுத்துவார்கள் என்று நினைக்கிறமோ அவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொண்டால் போதுமானது. 

*கடைசியாக தோல்வி அடைந்து விடுவமோ என்ற பயத்தின் காரணமாகவும் குக்கொல்களைதவித்து விடுகிறோம். தோல்வியே வெற்றியின் ஆரம்பம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். தோல்விக்கு பயந்தால் நம்மால் எந்த வேலைதான் செய்ய இயலும்?

வெற்றியடைய வேண்டு என்ற தாகம் உடையவர்கள். மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை அவர்களுடைய வாழ்க்கையில் நிரும் அகற்ற வேண்டும். 

குறிக்கோளை அடைய தன்னம்பிக்கை தேவை. திட்டவட்டமான முடிவெடுக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கும் தன்னம்பிக்கை தேவை. 

குறிக்கோளும் தன்னம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. இவற்றை புஎஇந்து கொண்டு செயற்படும் போது, இளைய தலைமுறையின் ஒவ்வருவரின் ஆற்றலும் பயனுள்ள வழியில் பாய்ந்தோடும். பலன் பெருகும்!

சரி, தன்னம்பிக்கை என்றால் என்ன? ஒருவர் வாழ்க்கையில் முன்னேற எவ்வாறு உதவுக்கிறது, தன்னம்பிக்கைகளுக்கு தடைகள் யாவை?

தன்னமிப்பிக்கை என்றால் என்ன?
“மனிதன் அற்புதமானவன், பல அற்புதங்களை படைக்கும் பிரம்மா” என்று உலக இலக்கிய மேதை மக்சிம்காங்கி வியர்ந்து பேசுவஅற. அத்தகைய அற்புதமான மனிதனின் வாழ்க்கை அருமையும் பெறுமையும் உடையதாக இருக்கவேண்டும்!

ஆனால், செயற்கரிய சிய நினைக்கும் மனிதன் நடந்தும் கடந்து செல்ல வேண்டிய பாதை வழுக்கம்நிலமாகவும், பாளை நிலமாகவும், காலை இடறச் செயும் பறைதளமாகவும் இருக்கிறது. சிறிது கவனம் தப்பினாலும் உடலும் உள்ளமும் ரணமாகிவிடும்! 

அதனால், “முன்னேறு மேலே மேலே” என அவன் நடை நடந்து செல்லும் போது கால்களில் ஒட்டிய துசிகளை உத்தற மறந்தால் அந்த துசிகளுக்கு இரும்பின் கணம் வந்து விடும்! ஈரம் சுமந்த பஞ்சு பொதியாய் மனம் கனத்துப் போகும், அவன் இட்ட அடி நோகும். எடுத்த அடி தளரும், நடை வேகம் குறையும். முன்னேற்றம் தோடு வனமாய் போய் விடும்! 

பயிர் நிலதில்ன் கலைகள் மிகுந்திருந்தால் பயிரின் வளர்ச்சி தடைப்படும். மனித வாழ்வின் தளைகள் மிகுந்திருந்தால் முன்னேற்றம் தடைப்படும். ஆக, களைஎடுத்தலும், தளையறுதலும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்! 

ராபர்ட்புரூஸ் என்ற மன்னன், போரில் பல முறை தொல்விய்று, பகைவருக்கு அஞ்சி ஒளிந்து கொண்டு இருந்த போது, அவன் விழிகளுக்கு ஒழி எற்றி அவன் நெஞ்சுக்கு உரம் ஏற்றிய ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு ஞாபகம் வருக்கிறதா? 

வலை பின்னும் சிலந்தி தமக்குரிய வலையை பின்னி முடிப்பதர்கில் அது திரும்ப திரும்ப முயற்சி மேற்கொள்வதை புரூஸ் மன்னன் வைத்த விழி அசைக்காமல் பார்துக்கொண்டு இருக்கிறான். அந்தச் சிலந்திக்கு சோர்வே இல்லையா? அதற்கு அலுப்பு ஏற்படவே இல்லையா? திரும்ப திரும்ப நூள் அறுபடும், வலை பின்னும் முயற்சி தடை படும். அதனால் என்ன? வலை பின்னி முடிக்கும் வரை அது ஓயவில்லை. வலை பின்னிய வெற்றி பெருமிதத்துடன் சிலந்தி?

இவன் மட்டும் என்ன சோர்ந்து கிடக்க வேண்டும்? திரும்ப திரும்ப முயற்சி செய்தல் வெற்றி கிட்ட முடியாமலா போய்விடும்? வலை பின்னும் சிலந்தி சொல்லித்தந்த பாடம் இவன் உள்ளத்தில் அடைந்து கிடந்த தன்னம்பிக்கை ஊற்றைத் திறந்து விட்டது. அந்தத் தன்னம்பிக்கை அவனை வெற்றியாளனாக்கி விட்டது. 

No comments:

Post a Comment