Wednesday, March 25, 2015

“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதில்லை. பலரும், “எனக்கு மட்டும் ஏன் இந்த கடன் தொல்லை? இந்த வியாதி…’ என்று நம் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகிறோம். பல நேரங்களில் பிரச்னைகளை நினைத்து கடவுளை நொந்து கொள்கிறோம். ஆனால், நாம் எப்போதாவது, “கடவுளே எனக்கு ஏன் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை? நான் ஏன் இதில் வெற்றி பெற்றேன்? என் தோழிக்கு வந்த அந்த நோய் எனக்கு ஏன் வரவில்லை?’ என்று நினைக்கிறோமா? ஒரு போதும் இல்லை. வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான். இரண்டையும் சரிசமமாக எண்ண வேண்டும்.

துன்பம் வரும் போது அதை நினைத்து கண்ணீர் விடுவதால் எந்த பலனும் இல்லை. அதிலிருந்து வெளி வருவது எப்படி என் பதை யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால் வெற்றி நிச்சயம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

1. நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் முதலில் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி எண்ணும் போது தான், பிரச்னையை நம்மால் எளிதாக கையாள முடியும்.

2. “இதை நான் எப்படி சமாளிக்க போகிறேன்?’ என்று பயப்படக் கூடாது. எதுவாக இருந்தாலும், நாம் தான், அதை எதிர்கொள்ள வேண்டும். எனவே, பயத்தை போக்குங்கள்.

3. என்னால் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்று நம்புங்கள். உங்கள் நம்பிக்கை மன தைரியத்தை கொடுக்கும். மன தைரியம் இருக்கும் போது, சிந்தனை தெளிவாக இருக்கும். எனவே,எடுக்கும் முடிவும் தெளிவாக இருக்கும். இது பிரச்னையில் இருந்து எளிதில் வெளிவர உதவும்.

4. தீர்வு காண முயலுங்கள். உங்கள் பிரச்னையை எடுத்து அதன் காரண, காரியங்களை அலசுங்கள். எவ்வாறு அதிலிருந்து வெளி வருவது என்பது பற்றி யோசியுங்கள்.

No comments:

Post a Comment