Monday, March 16, 2015

மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும் சிறந்த பழக்கம் ….

மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும் சிறந்த பழக்கம் ….

மனிதனாக பிறந்த எல்லோரும் தவறு செய்வது வழமை . நாம் செய்தது தவறு என்று உணர்ந்து திருந்தி நடப்பவன் சிறந்த மனிதன் . ஒரு தவறு இளைத்து விட்டோமே என வருந்தி நாம் அதற்க்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வது வழமை . சிலர் அதைக் கூட கேட்பதில்லை . நாம் தவறே செய்ய வில்லை என்று வாதிடுவோர்களும் உள்ளனர் .

சரி மன்னிப்பு கேட்கும் போது அந்த மன்னிப்பை ஏற்று கொள்பவன் ஒழுக்கசீலன் . மன்னிப்பது மனித இயல்பு . மறப்போம் மன்னிப்போம் என்பார்கள் . அன்பு என்பது என்ன ?அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். அதுபோலதான் நாம் தவறு செய்யும் போதும் திருந்தி மன்னிப்பு கேட்பதும் இந்த உலக நியதி .

தவறு செய்பவனை தண்டிப்பது கூடாது . அவன் திருந்த வழி சொல்ல வேண்டும் . குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள். அதனை பெரிது படுத்தாதீர்கள் . மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள். அப்போது அந்தக் குழந்தை தான் ஏதாவது தவறு செய்யும் போது அதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அதற்க்கு விளங்கும் . எதிர்காலத்தில் இந்த நல்ல பழக்கத்தையே கைப்பிடிக்கும் .

இறைவன் எத்தனையோ பேர் செய்யும் செயல்களுக்காக மன்னிக்கின்றார் . மன்னித்து கொண்டு இருக்கிறார் . மன்னிப்பது மனித இயல்பு .

No comments:

Post a Comment