Saturday, April 27, 2013

உங்கள் கனவு நிறுவனம்

சிகரத்தின் படிக்கட்டுகள்

தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ ஒரு சிலருக்குத்தான் சாத்தியமாய் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. தலைமுறையாய் ஒரு துறையில் ஈடுபட்டிருப்பவர்கள்தான் நிறுவனங்களை நடத்த முடியும். மேலும் கிளைகளை விரிவாக்கம் செய்யமுடியும் என்ற நிலைமாறி, இன்றைய காலத்தில் தகுதியும், தன்னம்பிக்கையும், தைரியமும், பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. மாநில அளவிலும் தேசிய அளவிலும் பன்னாட்டளவிலும் என நிறுவனங்கள் விரிவடைந்து செல்வதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தன்னால் செய்யக்கூடியதைக்கூட செய்வதற்கு துணிச்சல் வராமல் வானளாவி உயர்ந்து நிற்கும் நிறுவனங்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டபடி, “நான்கூட இப்படிப்பட்ட நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். ஏனோ முடியவில்லை” என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. “பல்லாயிரம் மைல்களுக்கான பயணம் முதல் அடியில்தான் தொடங்குகிறது” என்பதை நினைவில் வையுங்கள். முதல் அடியை எடுத்து வைக்கவே பயமும் தயக்கமும் இருந்தால் கனவு அப்படியே கனவாகவே இருக்கும். வாழ்நாளும் முடிந்துவிடும். எனவே எதுவாயிருப்பினும் தயக்கத்தை கைவிட்டு துணிச்சலோடு ஒரு முடிவை எடுக்கும்போதுதான் நம் நோக்கங்களை செயல்படுத்த வழிகள் பிறக்கும்.

உங்களின் கனவு நிறுவனத்தை தொடங்குவதற்கு காலதாமதப்படுத்தும் காரணங்கள் வெளியில் இல்லை. உங்களிடம்தான் இருக்கிறது என்பதை உணருங்கள் மந்தமான வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு விரைவில் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு மாறுங்கள். நீங்கள் கனவு காணும் நிறுவனம் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் இல்லாமல் போகட்டும். நிறுவனங்கள் ஏன் தொடங்கப் படுகின்றன? ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கான படிநிலைகள் என்னென்ன? என்பதைப் பார்ப்போம்.

நிறுவனங்கள் ஏன் தொடங்கப்படுகின்றன?

நி வழக்கமாக ஓரிடத்தில் சென்று ஒரேமாதிரி பணியைக் குறைந்த வருவாய்க்கு செய்து கொண்டிருப்பதில் இருந்து ஒரு மாற்றம் தேவை.

நி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம்.

நி வருவாயைப் பெருக்குவதன் மூலம் வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக் கொள்ளலாம் எனும் உந்துதல்.

நி தொழில் ரீதியான அனுபவமும், நிதியைத் திரட்டி ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தக் கூடிய ஆற்றலும், சாதகமான புறச் சூழல்களும் அமைந்திருக்கும்போது தாமே ஏன் ஒரு நிறுவனத்தை தொடங்கக் கூடாது? எனும் சிந்தனை.

நி சமூக பொருளாதார அடிப்படையில் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளவும், சமூகத்தில் அந்தஸ்து பெறவும் தம்மை அடையாளப்படுத்தவும் தமக்கென்று உள்ள நிறுவனத்தால் மட்டுமே முடியும் என்ற எண்ணம்.

நி சமூக, பொருளாதார அடிப்படையில் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளவும், சமூகத்தில் அந்தஸ்து பெறவும், தம்மை அடையாளப்படுத்தவும் தமக்கென்று உள்ள நிறுவனத்தால் மட்டுமே முடியும் என்ற எண்ணம்.

நி எல்லாவிதமான திறன்களையும் வைத்திருக்கும்போது, தான் ஓரிடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் பல பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குபவராக தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அவா.

நி காலப்போக்கிற்கு ஏற்ப மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய நிறுவனங்களைத் தொடங்குதல்.

நி ஓரிடத்தில் படித்த நண்பர்கள், ஒரே இடத்தில் தொழில் பழகியவர்கள் ஒரு குழுவாய்ச் சேர்ந்து தாம் விரும்புகின்ற துறை சார்ந்த நிறுவனத்தை தொடங்குவது.

நி ஏற்கனவே நடத்தப்பட்டுவரும் நிறுவனத்தின் துணைப்பொருட்கள் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தாமே அவற்றை இன்னொரு நிறுவனத்தின் மூலம் தயாரித்தால் என்ன என்கின்ற முடிவு.

நி தொலைநோக்கு இலட்சியங்களை அடைவதற்கான முயற்சி.

போன்றவையும் மேலும் பல்வேறு அம்சங்களும் நிறுவனங்கள் தொடங்குவதற்கு காரணங்களாய் அமைகின்றன.

நிறுவனத்தை தொடங்குவதற்கான படிநிலைகள்:

1. புதிய நிறுவனத்தை தொடங்குவதன் முதல்கட்டச் செயல்பாடு ஒரு குழுவை அமைப்பதாகும். ‘ஊர்ழ்ம்ண்ய்ஞ் இர்ம்ம்ண்ற்ற்ங்ங்’ எனப்படும் இக்குழுவில் நான்கு முதல் பனிரெண்டு பேர் வரை இருக்கலாம். நிறுவனம் தொடங்கத் தேவையான அனைத்து அம்சங்களைப் பற்றியும் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டியது இக்குழுவின் பணியாகும். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் /பங்குதாரர்கள் தவிர தேவைப்படும் பட்சத்தில் வெளியில் இருந்து வேறு யாரேனும் நிறுவனத்தில் உறுப்பினர்களாக / பங்குதாரர்களாக இணைவது குறித்து வெளிப்படையான ஒரு கூட்டத்தை நடத்தி அறிக்கையை தயாரிப்பதும் இக்குழுவின் வேலையாகும்.

2. நிறுவனத்திற்கான அமைப்புவிதித் தொகுதியையும் (இர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ள்)துணை விதிகளையும் (ஆஹ்ப்ஹஜ்ள்) உருவாக்க அமைப்பு விதிக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இக்குழு தற்காலிகமானது. நிறுவனத்தின் கட்டமைப்பிற்கும் தொடர்ச்சியாய் ஓர் ஒழுங்குமுறையோடும், விதிமுறைகளின் படியும் இயங்குவதற்கும் அமைப்பு விதித்தொகுதியும் துணை விதிகளும் மிக மிக அவசியமாகும். இவைதான் நிறுவனத்தின் நோக்கங்களுக்கும், இலட்சியங்களுக்கும் செயல்வடிவம் கொடுப்பவை. முடிவுகளை எடுத்தல், அலுவலர்கள், பணியாளர்களை நியமித்தல், குறிக்கோள்களை அடைவதற்கான வழிவகைகளை உருவாக்கித் தருதல் உள்ளிட்டவை இவ்விதிகளில் அடங்கும்.

3. அமைப்புவிதிக் குழுவினால் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின் அமைப்பு விதிகளிலும், துணை விதிகளிலும் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி முடிவினை மேற்கொள்ளுதல் வேண்டும்.

4. நிறுவனத்தின் உறுப்பினர்கள் அமைப்புவிதிகளை ஏற்றுக்கொண்ட பின் அமைப்பு விதிக் குழுவினை கலைத்துவிட வேண்டும். அக்குழு உறுப்பினர்களுக்கு வேறு பணிகளை ஒப்படைக்கலாம்.

5. தற்காலிகமான ஒரு நிர்வாகக் குழுவினை நியமித்தல் அடுத்த பணியாகும். தகுதியும், ஆர்வமும் கொண்ட உறுப்பினர்களைக் கொண்டு நிர்வாகக் குழுவை அமைக்கலாம். நிறுவனங்களின் தன்மையைப் பொறுத்து மூன்றுமாதம், ஆறுமாதம், ஒருவருடம் என தற்காலிக நிர்வாகக் குழுவிற்கு கால வரையறையை நிர்ணயிக்கலாம். பின்னர் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைப்புவிதிகளுக்கேற்ப நிர்வாகக் குழுவினை அமைக்கலாம்.

அமைப்பு விதிகளும் துணைவிதிகளும்:

அமைப்புவிதிகள், நிறுவனத்தின் நோக்கங்களை குறிப்பிடுவதாக இருக்கும் நிறுவனத்தின் கட்டமைப்பையும், நிறுவனம் செயல்படப்போகும் வழிமுறைகளையும் அமைப்பு விதிகள்தான் எடுத்துக் கூறும். துணை விதிகளை உருவாக்கும் அதிகாரத்தையும் அமைப்புவிதி கொண்டிருக்கும்.

ஒவ்வொரு உறுப்பினரும் மிகத் துல்லியமாக நிறுவனத்தின் நோக்கம், செயல்பாடுகளை அறிந்து வைத்திருத்தல் அவசியம். நிறுவனத்தின் அமைப்புவிதித் தொகுதியும், துணைவிதிகளையும் படியெடுத்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

அமைப்புவிதித் தொகுதி (இர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ள்)

: நிறுவனத்தின் பெயர்

: நிறுவனத்தின் இலட்சியங்கள்

: பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் முகவரி

: நிறுவனத்திற்கான அடையாள முத்திரை

: நிறுவனத்திற்குள் அதிகாரப் பகிர்வு

: முடிவெடுக்கும் அதிகாரம் உடைய நிரந்தர உறுப்பினர்கள்

: அலுவலர்களுக்கான பதவிப் பெயர்கள், கடமைகள், விதிமுறைகள்

: இயக்குநர்கள் குழு மற்றும் நிர்வாகக் குழுவிற்கான வாக்களிப்பு உரிமையுடன் கூடிய விதிகள்

: உரிமைகளை அளிக்கும் அதிகாரி

: நிறுவனத்திற்கான விதிமுறைகளில் தேவைப்படும் திருத்தம் கொண்டு வரும் வழிமுறைகள்

மேற்கண்டவை மட்டுமல்லாது அவரவர் நிறுவனம் சார்ந்து தேவைப்படுவனவும் இவற்றில் அடங்கும்.

துணைவிதிகள் (ஆஹ்ப்ஹஜ்ள்)

: உறுப்பினர்கள் / பங்குதாரர்களை நிறுவனத்தில் சேர்க்கும் முறை

: கௌரவ உறுப்பினர்கள், குடும்பம் சார்ந்த உறுப்பினர்கள், நிறைஉரிமையில்லா உறுப்பினர்களுக்கான கட்டளை விதிகள்

: நிறுவனத்தில் உறுப்பினர்களாய் இருப்பதற்கான கால வரையறை விதிகள்

: அலுவலர்கள், குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல், நீக்குதலுக்கான வழிமுறைகள்

: உறுப்பினர்கள் / பங்குதாரர்கள் முதலீடு செய்வதற்கான வழிமுறைகள்

: மாதக்கூட்டம், ஆண்டுக் கூட்டம், சிறப்புக்கூட்டம், அவசரக் கூட்டம் நடத்துவதற்கான வழிமுறைகள்

: நிறுவனத்தின் பொதுக்கூட்டம், இயக்குநர்கள் குழு கூட்டம், ஒவ்வொரு பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் கூட்டம் ஆகியவற்றை நடத்துவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை.

: ஒழுங்குவிதிகளுக்கான அதிகாரம்

: முக்கிய முடிவுகள் எடுக்கும்போது வாக்கெடுப்பிற்கு விடுதல்சார்பு

: பணியாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிறுவனத்தில் அவர்களின் நிலை (நற்ஹற்ன்ள்)

: துணைவிதிகளை திருத்தியமைக்கும் வழி முறைகள்

: சார்புடைய நிறுவனங்களுடன் மேற் கொள்ள வேண்டிய தொடர்புமுறைகள்

: நிறுவனம் சார்ந்த வழக்குகளுக்கான நீதிமன்ற எல்லை. இவற்றோடு தேவைப்படும் மற்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துவதற்கான அடிப்படையான செயல்களை இதுவரை பார்த்தோம். இனி அந்நிறுவனம் வெற்றிகரமாய் இயங்கவும், சிகரத்தின் படிகளில் நம்மை இட்டுச் செல்லவும் அச்சாணியாய் இருக்கும் நிர்வாகம் குறித்து அடுத்த இதழில் பேசுவோம்.

No comments:

Post a Comment