Wednesday, December 18, 2013

ஒரே பேப்பரில் உங்கள் ஆசைகளை அடையுங்கள் .

ஒரே பேப்பரில் உங்கள் ஆசைகளை அடையுங்கள் .

1. நாம் நமது  வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல முடிவுகளை உடனடியாகவோ அல்லது குறிப்பிட்டகால இடைவெளியிலோ எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.வெற்றிகரமாக வாழ்க்கையை அமைத்தவர்கள் எல்லாம் சரியான நேரத்தில் சரியான முடிவுகளையோ அல்லது தவறான முடிவுகள் எடுத்து அதன் மூலம் சரியான பாடம் கற்றுக் கொண்டவர்கள்  ஆவார்கள்.
                                                                                    
2. ஒரு காரியம் நாம் நினைத்த படி நினைத்த நேரத்தில் நடைபெறவில்லை,நமது முடிவை அடைய பல வழிகளை நமது மனதும் அனுபவமும் முன்னிறுத்துகிறது ,எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்று மனக் குழப்பம்,நமது அத்தியாவசியமான ஆசைகளை நிறைவேற்ற நமக்கு அதில் எந்த முன் அனுபவமும் இல்லை இப்படிப்பட்ட சூழ்நிலைகளைக் கடந்து யாரும் தங்களது வாழ்க்கையை கடக்க முடியாது.இதற்கு உதவி செய்வதற்காகவே இந்த பதிவு.
            
3.  நாம் பல காரியங்களுக்கு முடிவெடுக்கும் ஒரு நிலையில் இருக்கும் போது ,இவற்றில் எது அதி முக்கியத்துவம் வாய்ந்தது ?,அதற்கப்புறம் முக்கியமானது எது? என்று முதலில் வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும் .ஒரே சமயத்தில் பல காரியங்களுக்கு முடிவெடுக்க வேண்டும் என்று மனதை குழப்பினோம் என்றால் சரியான முடிவு எடுப்பது என்பது கடினமாகி விடும்.
                                                       
4. முதலில் ஒரு பேப்பரை எடுங்கள் அதில் உங்களது முடிவடுக்க வேண்டிய பிரச்சினகளை உங்கள் மனது என்ன நினைக்கின்றதோ அதனை அப்படியே வரிசையாக எழுதுங்கள் .பின்பு அடுத்த பக்கத்தில் எதனை முதலில் தீர்க்க வேண்டும் என்பது பற்றிய உங்களது மனது நினைக்கின்றது என்பது பற்றிய உங்களது கருத்துக்களை ,அதன் சாதகம் மற்றும் பாதகம் ஆகியவை பற்றி நேர்மையாக எழுதுங்கள் .பின்பு இந்த சாதக பாதகங்களை நீங்களே தனியாக எடுத்து வைத்து பரிசீலனை செய்யுங்கள் .இந்த சாதக பாதகங்களை எழுதும் போது அந்தக் குறிப்பிட்ட காரியம் பற்றி உங்களுக்கு போதுமான அறிவு இல்லை என்றால் ,அது பற்றிய எல்லா விதமான கருத்துக்களையும் சேகரியுங்கள் .
                                                       
5.இந்த கருத்துக்களை சேகரிக்கும் முறையானது மற்றவர்களின் அனுபவங்களை சேகரிப்பதாக இருக்கலாம்,அது சம்பந்தமான விசயங்கள் கொண்ட புத்தகங்களை படிப்பதாகவும் இருக்கலாம்.இது போன்ற ஒரு காரியத்தில்  தோல்வி அடைந்தவராக ஒருவர் இருந்தால் அவரை பேட்டி காணுங்கள்,அவர்களது அனுபவத்தை கேளுங்கள்,அதே போல் வெற்றி பெற்ற ஒருவரையும் பேட்டி காணுங்கள் அவர்களது அனுபவங்களை கேட்டறியுங்கள்.

6.பின்பு எந்த காரியத்தை முதலில் செய்வது என்று வரிசைப் படுத்தி அதற்கு ஒரு கால அவகாசத்தை உங்கள் மனதிற்கு விதியுங்கள்,அந்த கால அவகாசத்தில் பிழைக் காலம் அல்லது கால தாமதம் எவ்வளவு ஏற்படும் என்பதை கணியுங்கள் ,பின்பு நிறைவேறும் காலத்தையும் குறித்து வையுங்கள் .
                                              
7.இப்பொழுது உங்கள் முன்னால் உங்களது காரியங்களும் அவற்றின் முக்கியத்துவத்திற்கும் ஏற்றாற் போல ஒரு பட்டியல் ரெடி.இந்த பட்டியலில் உள்ள காரியங்களில் மட்டும் நீங்கள் கவணம் செலுத்தினால் மட்டும் போதும்.

அடுத்து முதல் காரியத்தினை மட்டும் தனியாக ஒரு பேப்பரில் எழுதுங்கள் ,பின் வருமாறு அந்த பட்டியல் இருக்கட்டும்.

1.நான் முடிக்க வேண்டிய காரியத்தின் பெயர் அல்லது தலைப்பு:
2.இதனை ஏன் நான் முடிக்க வேண்டும்:
3.இதனை நான் முடிக்காவிட்டால் என்ன விளைவு என் வாழ்வில் ஏற்படும்:
4.இந்த காரியம் நான் செய்யாமல் இருக்க வேறு மாற்று வழி இருக்கின்றதா?:
5.இந்த மாற்று வழியினால் என்ன விளைவு ஏற்படலாம்:
6.இந்த விளைவினால் எனக்கு நல்லதா?கெட்டதா?:
7.இந்தக் காரியம் பற்றிய அனுபவம் இதனை திறம்பட முடிக்க போதுமா?:
8.போதாது என்றால் நான் யார் யாரை சந்தித்து வினவ வேண்டும்:
9.எத்தனை நாளுக்குள் இவர்களை சந்திக்க வேண்டும்:
10.வேறு புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றால் எத்தனை நாளுக்குள்?;
11.இந்த காரியம் நான் நினத்தபடி முடிந்தால் என்ன விளைவு?
12.நடக்கா விட்டால் என்ன விளைவு?
13.எனது முடிவுப்படி பாதிப்புகள் ஏற்பட்டால் தப்பிக்க மாற்று வழி?
14.மொத்தத்தில் இது பற்றிய சாதகமான கருத்துக்கள் எல்லாம்;
15.மொத்தத்தில் இது பற்றிய பாதகமான கருத்துக்கள் எல்லாம்:
16.நான் முடிக்க வேண்டிய காலக் கெடு:
17.இதில் கால தாமதத்திற்கான காரணம்:
18.கால தாமதத்தை தவிர்க்க வழிகள் எல்லாம்.
19.நான் எனது காரியத்தை செய்து முடிக்கும் நாள் :
20.வெற்றியை உறுதியாக அடைந்தேன் .
                                                                        
இந்த கேள்விப் பட்டியலில் உங்கள் மனது சொல்லும் சரியானவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ,வளமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment