Thursday, February 21, 2013

தலைமைப்பண்பு சிறந்திட/தனிமனிதர்கள் வளர்ந்திட/நிர்வாகம் சிறந்திட


தலைமைப்பண்பு சிறந்திட….

1. சிக்கலை சரி செய்யுங்கள். பழிபோடுவதில் நேரம் செலவிடாதீர்கள்.

2. என்ன வேண்டுமென்று சொல்லுங்கள். எப்படிச் செய்வதென்று அவர்கள் பொறுப்பில் விட்டுவிடுங்கள்!


3. உங்கள் செயல்களை மற்றவர்கள் கண்காணிப்பதன் மூலம் அவர்கள் வளர வழிசெய்யுங்கள்

4. தயங்கிக்கொண்டே இருக்காதீர்கள். தெளிவாகவும் விரைவாகவும் முடிவெடுங்கள்.

5. உட்கார்ந்து கொண்டே இருக்காதீர்கள். உற்சாகமாய்க் களமிறங்குங்கள்.

6. தரம் என்பதற்கான அளவுகோல், தேவைகளை நிறைவேற்றுவது என்பதை உணருங்கள்.

7. தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்….. முக்கியமாக மற்றவர்களின் தவறுகளிலிருந்து!!

8. முன்னுதாரணமாய் இருங்கள். முன்னேறிக் கொண்டே இருங்கள்

9. மாற்றங்கள் நிகழக் காரணமாய் இருங்கள்.

10. உங்களை நீங்களே எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தாதீர்கள்.

தனிமனிதர்கள் வளர்ந்திட…

1. நேரந்தவறாமையைக் கடைப்பிடியுங்கள்

2. வாழ்வை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்

3. உங்கள் வாழ்வில் யார் குறுக்கிடுகிறார்கள் என்பதை கவனமாய்ப் பாருங்கள்


4. எல்லோரையும்விட நீங்கள் சாமர்த்தியசாலி என்று எண்ணாதீர்கள்

5. எதையும் ஈடுபட்டுச் செய்யுங்கள்

6. தெரியாத ஒன்றில் ஈடுபடும்முன் வேண்டிய தயாரிப்புகளைச் செய்யுங்கள்

7. கடினமாக உழைப்பதைவிட காரியம் நடக்கிறதா என்பதே முக்கியம்

8. உங்கள் பலங்களை பலப்படுத்துங்கள். பலவீனங்களை பலவீனப்படுத்துங்கள்

9. சராசரியாய் வாழாதீர்கள். சாதித்துக் காட்டுங்கள்.

10. மற்றவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.


நிர்வாகம் சிறந்திட ...

1. இரண்டாவது இடத்தில் யார் என்பதைத் தீர்மானியுங்கள்

2. தொழில் நுட்ப வளர்ச்சிகளை உணர்ந்து பின்பற்றுங்கள்

3. ஒரு ரூபாய் சம்பாதிப்பதைவிட ஒரு ரூபாய் சேமிப்பது எளிது

4. ஒவ்வொரு தொழிலுக்கென்றும் சில வெற்றிச் சூத்திரங்கள் உண்டு.

5. உங்கள் அனுபவங்கள் மட்டுமல்ல…. மற்றவர்களின் அனுபவங்களும் பாடங்கள்தான்!

6. உள்ளுணர்வின் தூண்டுதலை உணர்ந்து செயல்படுங்கள்

7. செய்யும் விதமும் முக்கியம். செய்து முடிப்பதும் முக்கியம்.

8. உங்கள் தொழிலாளர்களுக்கு தொழில் பயிற்சியுடன் மேம்பாட்டுப் பயிற்சியும் கொடுங்கள்

9. மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வளருங்கள்.

10. நிறுவனத்தின் வெற்றி தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment