Wednesday, September 30, 2015

நிம்மதியாய் வாழ் !

 நிம்மதியாய் வாழ் !

ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் உடல் ரீதியாக நிம்மதி பெறுங்கள். கண்ணியம் மற்றும் பொருளாதாரத்தில் பாதுகாப்பு பெறுங்கள் :

உங்களை விட்டுப்போன பொருளைப்பற்றி கவலை கொள்ளாதே.
    
உன்னை அடையாத விஷயத்தைப்பற்றி பயம் கொள்ளாதே.
    
உன்னிடமும் அதே போன்ற ஒரு குறையிருக்க அதற்காக நீ அடுத்தவரை இழித்துரைக்காதே.
    
நீ செய்யாத வேலைக்கு கூலியை எதிர்பார்காதே.
    
உன் உடமை (மனைவி) அல்லாத வேறு பொருளை (அன்னியப்பெண்னை) இச்சையோடு பார்க்காதே.
    
உன் கோபம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதே அப்படிப்பட்ட கோபம் கொள்ளாதே.
    
இறைவன் தான் அனைத்தையும் செய்விக்கிறான் என்று எண்ணாதவனை நீ புகழாதே.

No comments:

Post a Comment