Friday, September 18, 2015

படித்ததில் பிடித்தது,

பெரிய குரு இருந்தார்.
🚫 முற்றும் துறந்தவர்.
✅ எல்லாம் கற்றவர்.
📢 அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.
🔣 பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.
🏇 அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.
☔ அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை.
🔇 கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.
🎅 குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.
🎤 பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.
👳 இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.
☝ ‘என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.
🙏 ‘அய்யா! நான் குதிரைக் காரன் 🏇
❗எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க 😒
👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க.
🐎 நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.
🌾 புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க ❗
👮 நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ னான்.
👋 பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.
🏇 அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,
அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.
🔣 தத்துவம்,
🔠 மந்திரம்,
🚫 பாவம்,
✅ புண்ணியம்,
🌁 சொர்க்கம்,
🔥 நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு.
🎤 பிரசங்கம் முடிஞ்சுது.
✴ ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.
🙏 ‘அய்யா… நான் குதிரைக்காரன்.
😳 எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…
🌾 நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு 🐎 குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.
🔢 முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான் 😨
😱 அவ்ளோதான்❗
😰 குரு தெறிச்சிட்டார்!
© நீதி:
✊ மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும் ✅
👼 புரியாத,
😇 தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் 😂😂

No comments:

Post a Comment