Wednesday, April 8, 2015

மனதுக்கு அமைதி தரும் கீதாசாரம்!!!

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் – கீதாசாரம்:-

* எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடககிறதோ அதுவும் நனறாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

* உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது.

* பூமியைப் போல பொறுமையுடனும், வீட்டு நிலையைப் போல உறுதியுடனும் வாழ்ந்து காட்டு.

* நம் நற் செயல்களும் தீய செயல்களும் விடாது நம்மைப் பின் தொடரும்.

* உன் துன்பத்துக்கு காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்கு வேண்டாததைச் செய்யாதே.

* உடலில் நிதானம், மொழியில் நிதானம், எதிலும் நிதானம், இதுவே நல்வழி.

* தீயசெயல்களின் விளைவு உடனே தெரிவதில்லை. மறைந்திருந்து பின்னால் தாக்கும்.

* பேராசையும், தீய ஒழுக்கமும், நம்மைத் தீராத துக்கத்தில் மூழ்கடித்து விடும். தன்னை அடக்குபவனே தலைவன். தன்னலமின்மை, அமைதி, வாய்மை ஆகிய மூன்றும் இன்பம் தரும். மனநிறைவே தலை சிறந்த செல்வம். உடல்நலமே மிக உயர்வான நலன். நம்பிக்கைக்கு உரியவரே மிகச் சிறந்த உறவினர்.

* எதிலும் எப்பொழுதும் கவனமாக இருங்கள்.

* உங்களுக்குள் ஒளியைத் தேடுங்கள். அந்த ஒளி உங்கள் உள்ளிருந்து சுடர் விடுமாறு வாழுங்கள் இதைத் தவிர வேறு ஒளி கிடையாது.

* நான் உங்களுக்குப் பாதையைக் காட்ட மட்டுமே முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம், எவ்வளவு தூரம் செல்ல முடியுமென முடிவு செய்ய வேண்டும். உங்களுக்குள்ளே உறையும் உள்ஒளி மூலம் உங்களை நீங்களே வழி நடத்திக் கொள்ளுங்கள்.

* செவி வழிச் செயதி கேட்டோ வழி வழியாய் வந்த விஷயஙகள் கேட்டோ பரம்பரையாகப் பரிமாறிக் கொள்ளப்பட்ட விஷயஙகள் கேட்டோ, உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாதீர்கள்

No comments:

Post a Comment