Wednesday, April 8, 2015

நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க!

* பிறருடைய பசியைப் போக்குவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அவர்களின் துன்பத்தையும் களைய முயற்சிக்க வேண்டும்.

* அரிதான மானிட தேகம் எல்லா உயிர்களுக்கும் கிடைப்பதில்லை. இதைப் பாதுகாத்து திடமாக வைத்துக் கொள்வது நம் கடமை

* கற்பனை அனைத்தையும் கடந்தவன் இறைவன். அவனை நம் கற்பனை எல்லைக்குள் கொண்டு வர இயலாது.

* அம்பை ஏவி விட்டவனுக்குப் பதிலாக, அம்பையோ, அம்பு செய்து கொடுத்தவனையோ நொந்து கொள்வதால் ஒருபயனும் இல்லை.

* உத்தமர் தம் உள்ளத்தில் கடவுள் பிரணவ ஒளியாக வீற்றிருப்பார். அவர் எண்ணம், சொல், செயல் அனைத்தும் புனிதமானதாக இருக்கும்.

* பிறர் தயவை நாடாமல் மனிதன் வாழ வேண்டும். தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் நல்ல மனம் பெற்றிருக்க வேண்டும்.

*ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கேன்ற உத்தமர் தம் உறவு வேண்டும் ,

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்
அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை!
– வள்ளலார்

No comments:

Post a Comment