Tuesday, October 15, 2013

இந்த படிகளை கடந்தால், நீங்கள் வெற்றிக்கனியை பறிப்ப‍து நிச்ச‍யம்!

வெற்றிக்கான படிகள்

இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க் கையைப் பாதுகாப்பான வாழ்க்கை யாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக் காமல் திரும்பமாட்டேன் என்ற உங் களது உறுதிஒன்றே எப்பொழுதும் கை விளக்காக இருக்க வேண்டும்.
“வெற்றிபெறவேண்டும்” என்னும் உங்களுடைய திடமான எண்ணம் தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான்தோற்று விடு வேனோ? என்று சிந்திக்காதிர் கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள்.
அப்போதுதான் பிரச்சினைகளை வெல்ல வழிபிறக்கும். வீட்டிலும், வேலையிலும், வெளியிலும் நான் வெற்றி பெறுவேன் என் கிற மன நிலையே உங்களை வெற்றி பெற ச் செய்துவிடும். எதையும் ஒரு திட்டத் தோடு மட்டும் தொடங்காதிர்கள். செயலோ டும் தொடங்குங்கள். சிந்தனை செய்யுங்க ள்; முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கை யுடனேயே உங்களுடைய சிந்தனை அமை ந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலி ருந்து மாறிவிடாமல் சிந்தித்தைச் செயலி ல் காட்ட மிகுந்த மகிழ்ச்சி யுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.
தாழ்வுமனப்பான்மை வேண்டாம். அனைத்தை யும் வெல்ல முடியும். வெற்றியைப்பற்றிய சிந் தனையுடன் செயல் படுங்கள். தோல்வி, வெறு ப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக் காமல் வெற்றியை மட்டு மே சிந்தித்து உயர் வடையுங்கள்.
உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித் தான் இருக்க வேண் டும். தடைகள் எதிர்படும் பொழுதும் இலட்சிய த்தி லிருந்து உங்கள் மனத்தையும், செயலையு ம் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதி கக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடை யுங்கள்.
வெற்றியைக் கற்பனையில் நம்பி க்கையுடன் பார்க்கும் திறன், என் னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என் றாலும் பொறுமை யுடன் விடாப் பிடியாக முயற்சி செய்யும் குண ம்,   இந்த நான்கும் உள் ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.
நம்முடைய வெற்றி, தோல்வி யைத் தீர்மானிப்பது மனவளர்ச் சியோ, மனவளர்ச்சி இன்மை யோ அல்ல.நல்லதே நடக்கும் எ ன்ற மனோ பாவ ம் தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வ த்துடன் வெற்றிக்காக உழையுங் கள். நம்முடைய உழைக்கும் நே ரம் நாள்தோறும் அதிகரிக்க வே ண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை,செயல்வேகம் ஆகிய வை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கை விடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந் து பறந்து போய்விடுகிறது.
அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமை யினால் அல்ல. விடாமுய ற்சியினால் தான் .வெற்றியின் இரகசியம் “கடின உழைப்பு” என்ற சொற் களில் தான் அடங்கி இருக்கிறது. நம்பிக்க&33016;யும் உற்சாகமும் மட் டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடை ந்துவிடலாம். சிந்த னையைவிடச் செயல் தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும். எப்போதும் சிந்தித் துக் கொண்டே மட்டும் இருக்காமல் செயல்பட்டுக் கொண்டெ இருங்க ள்.
நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றா ல் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடு வீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவ ர் என்றால் உங்களை எல்லோ ரும் நம்புவார்கள். விடாது முயற்சி செய் யு ம் அரிய குணத்தைப் பெற்றிருந்தா ல், எப்போதும் நீங்கள் வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள்.மனம் அமைதி யாக இருக்கவேண்டுமானால் எதிர்மறையான சிந்தனைகளை யும், பிற ரது திறமைகளை சிறுமைபடுத்து வதையும், கீழ்த்தரமான முறை யில் விமர்சிப்பதையும் நிறுத்துங் கள். உங்கள் மனதை சுத்தப்படுத் துங்கள். ஊக்கமான சிந்தனைக ளையே நிரப்புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் என்றே செயல் படுங்கள். இப்போது நீங்கள்தான் உலகிலேயே மிகவும் அமைதியா ன மனம் உடையவர்.
வெற்றி பெறுவோம்’ என்ற திட மான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து விடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனி யைப் பறிக்கமுடியும். வாழ்க்கையில் உயர வேண்டும் என்று உங்கள் மனதிற் கு கட்டளையிடுங்கள்.
கட்டளையை முழு வேகத்துடனும் விரு ப்பத்துடனும் அடிக்கடி இட்டால் நீங்கள் உண்மையில் அதை அடைய செயலி லும் இறங்கிவிடுவீர்கள். தன்னம்பிக்கை யே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங் களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக் கையே நோய்களையும், உடல் வலி யையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம் பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத் துத் தருகிறது.
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்தி ரச்சொல் “இப்பொழுது”. தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் “பிறகு”. வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதிர்கள்.பிரச்னைகள்தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதி மிக்க சாதனையாளர்களை யும் உரு வாக்குகின்றன. எனவே பிரச்னை களை விருப்பத்துடன் எதிர்கொள்ளு ங்கள்.
தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கி றது. எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெறமுடியாது. தோல்வி களைக் கண்டு அஞ்சாமல் தொட ர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால்தான் முன் னேற முடியும், வெற்றிபெற முடி யும். இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல் லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.
முன்னேற முயற்சியை, உழைப் பை, அறிவை, ஒழுக்கத்தை நம்புங்கள். இதைத்தவிர வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது. அறிவுக் கு இந்த உலகம் எப்போதும் வணங்கும். திறமைக்கு இருகரம் நீட்டி ஆத ரவு தரும். தூய்மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும் .வேதனையை மனோபல த்துடன் எதிர்கொள்ள முடிந்தா ல், எப்படிப்பட்ட துக்கத்தையும் தாங்கிக் கொ ள்ள முடியும்.
வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு முடிந்தவரை மகிழ்ச்சி யாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனை யை பற்றியே சிந்தி த்துக் கொண் டிருக்காமல், அதை எதிர் கொள்வது எப்படி என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போதும். குழப்பநிலையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிட்டதாக அர்த்தம். இந் த நிலையில்தான் நீங்கள் சரி யான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கவேண்டியுருக் கும். பிரச்சனை களுக்குத் தீர்வு காணும் முன்பு மனதை சமநி லைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
மிகப்பெரிய எழுத்தாளராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும்ஒருவன் தான் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பு ‘எப்படி முடிந்தால் சிறப்பாக இரு க்கும்’ என்பதை கற்பனையில் பார்த்து, அதற்கு ஏற்றபடி எழு தினால் நிகழ்காலத் தில் வெற்றி பெறமுடியும். ஆகவே நாம் செய்து முடிக்க எடுத்துக்கொண்டுள்ள காரியங்களும் அதை கற்பனையில் பார்த் தபடி உருவாக்கும் குணமும் நம் வாழ் வில் நிச்சயம் பலம் சேர்க்கும். எனவே ‘ முடிவு இப்படி இருக்க வேண்டும்’ என்று உறுதியாக கற்பனையில் படமாகப் பார்த்து முடிவு செய்துகொண்டு தீவிரமாக உழைத்து வெற்றி அடையுங்கள். இதைப் பழக்கத்தில் கொண் டு வந்து தொடர்ந்து சாதனை புரியுங்கள்.
செயல்படுங்கள். காரியத்தில் இறங்குங்கள். அறிவுடன் இருங்கள். கால த்தை வீண் அடிக்காதிர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி. உறுதியாக நின்று, நானும் ஓர் ‘வெற்றி வீரனே’ என்று காட்டுங்கள். வெற்றி வீரனாக செயல்படுங்கள்.
நிறைந்த முயற்சியை உடையவன், மலர்ந்த வாழ்வைப் பெறுவான். ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி பிரார்த்திக்க மாட்டேன். ஆபத்துகளை ச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக் கொடு. நோய்களிலிருந்து காப்பாற் றும்படி யாசிக்க மாட்டேன். நோயைப் பொறுத்துக் கொ ண்டு வெற்றி கொள்ளும் மனதிடத்தை எனக்கு கொடு. வாழ்க்கை எனும் போரில் என க்கு துணை கேட்க மாட்டேன். வெற்றி யடைய சுயலாபத்தைக் கொடு.
எதிர்பார்ப்புகள் என்ன ஆகுமோ? என்ற பயத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்ட மாட்டேன். நம்பிக்கையுடன் இருந்து வெற்றியடைய பொறுமையைக் கொடு. தாகூர்.
நிகழ்வதை கொண்டு நிகழ்ச்சிகள் உறுதிப்படு கின்றன. அகமகிழ்வதும், தோல்வியில் வருந்துதலும் சூழல்நி மித்தம். முழுமை பெறுவதே அமைதி.-தொல்காப்பியர்
எந்தப் பணியை நாம் மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந் தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என் பதுதான் முக்கியம். நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வது நம்முடைய ஆர்வத்தையும் முயற்சிகளையும் பொறுத்தே அமைகிறது. விரும்பியது கிடைக்கவில்லையெனில், கிடை த்தை விரும்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பல்வேறு காரணங்களால் நமக்கு ள்ளே உருவாகும் தன்னம்பிக்கை யின்மை, தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர்காலத்தை ப் பற்றிய அவநம்பிக்கை ஆகிய வற்றறின் காரணமாக நம்மிடம் உள்ள ஆற்றல் செயல்பட முடியா மல் முடக்கி வைக்கப்பட்டு விடுகி றது. எல்லாவ ற்றுக்கும் மேலாக நம்மைப்பற்றி நமக்கென்று “ஒரு சுயமதிப்பீடு” இல் லாதபோது நம் முடைய ஆற்றலைப்பற்றிய உணர்வும் நமக்கில்லாமல் போய்விடுகிறது. என்னால் இது முடியுமா? என்று சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, என் னால் முடியும் என்கிற நம்பிக்கை யினைப் பெறுகிற போது ஆற்றலும் செயல்படத் தொடங்குகிறது.
ஆற்றல் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் வெளிப் பட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனைத் துறைகளில் ஈடுபட்டாலு ம் அத்தனைத் துறைகளிலும் நம்மு டைய ஆற்றலை நம்மால் வெளிப்ப டுத்த முடியும். ஆனால் அத்தனைத் துறைகளிலும் அக்கறை காட்டுகின்ற மனஉறுதி நமக்கிருப்பது அவசி யம்.முயற்சிகள் தொடரும் போது ஆற்றல் வெளிப்படத் தொடங்குகிற து. முயற்சி விடாமுயற்சி யாகும் போது ஆற்றல் வலிமை பெறுகிறது. ஆற்றல் வலிமை பெறுகி றபோது மனத்தளவில் ஏற்பட்ட தடைகள் தகர்ந்து போகின்றன.
நான் விரும்பிய துறை கிடைக்கவில் லை. ஆகவே என்னுடைய ஆற்றல் வெளிப்பட வழியில்லை என எண்ணு வது தவறு. அவ்வாறு எண்ணுகின்ற மனிதன் தன்னுடைய ஆற்றலுக்குத் தானே தடை விதித்துக் கொள்ளுகிற வன் என்று தான் கருத வேண்டு ம்.கதவைத் தட்டி வாய்ப்புகள் தங்க ளை அறிவித்துக் கொள்வதில்லை. நாம்தான் வாய்ப்பு களின் கதவைத் தட்டி , திறக்க வைத்து அதைப் பயன்ப டுத்திக் கொள்ள வேண் டும். வாய்ப்பு சிறிதாயினும், பெரிதாயினும் உங் களுடைய முழுத்திற மையைக் காட்டி செயல்படுங்கள். அப்போது உங் கள் ஆற்றல் வளர்ந்து கூர்மையடைவதை உணர லாம்.
தன் திறமையில் சந்தேகம், பயம், சோம்பல், வேண்டாத வீணான கற் பனை, கீழ்நிலையில் உள்ளவர்களின் துன்பத்தைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பது, ஆரம்பத் திலேயே வெற்றியின் அறிகுறி யை எதிர்பார்ப்பது, சிறுதடை என்றாலும் மனமுடைந்துபோவது, இவை போன் ற பல காரணங்களால் ஒருவருக்குத் தோல்வி மனப் பான்மை ஏற்பட்டு விடுகிறது. மனஉறுதியென்பது நமக் கு நாமே உண் மையோடும், நம்பி க்கையோடும் உண்டாக்கிக் கொள்வதுதான். விழுவ தில் தவறில்லை. விழுந்தபின்பும் அமைதியாய் இருப்பதுதான் தவறு. விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடப்பதில் தான், நமது வெற்றியின் ரகசி யமே உள்ளது என்பதை நினை வில் கொள்ளுங்கள்.
மூடிய கதவுகளை முறைத் து ப் பார்த்துக் கொண்டிருக்காதிர் கள். அதையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்காதிர்கள். திறந்தி ருக்கும் கதவுகளை தேட முயலுங்கள். ஒவ்வொரு வினாடியும் முன் னேற வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனுடைய கால்க ளை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றார்.
பார்க்கின்ற பொருட்களில் மகிழ் ச்சியில்லை. அந்தப் பொருளை பார்க்கி ன்ற மன நிலையில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. முயற்சி என்னும் விளைநிலத்தில் உழை ப்பு எனும் இரயில் வெற்றி அனு ம் இடத்தை அடைய வேண்டு மானால் உற்சாகம் என்னும் பச்சைவிளக்கு எப்பொ ழுதும் எரிந்துகொண்டே இருக்க வெண் டும்.தாமதிப்பதால் நம் ஒளியை வீணாக்குகிறோம்.அது பகலில் விளக்குகளை எரிப்பதற்குச் சமம். தாமதம் செய்து கொண்டிருப்பவர்களும், தடுமாறிக் கொண்டிருப்பவர்க ளும் ஒருபோதும் செயலில் துணி ந்து இறங்கமாட்டார்கள்.
ஒரு முக்கியமான காரியத்தை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டு விட்ட பின்பு, யாருடைய அபிப் பிராயத்துக்காகவும் காத்துக் கொ ண்டு இருக்கக் கூடாது. யாருடை ய பேச்சைக் கேட்டும் இடையில் காரியத்தை நிறுத்தி விடுவதும் சரியல்ல. நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் ஆலோசனை செய்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. செயல் புரியாமல் சோம்பி இருப்பவர்கள் செத்துப்போன சவத் துக்கு ஒப்பானவர்கள்.
முன்னேற்றப்பாதைக்கு, அகத் தூண்டுதல் ஒரு சதவி கிதம். வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் .-எடிசன் சுறுசுறு ப்பு என்பது ஒரு செயலை நோக்கி தேக்கமில்லாமல், மந்தமில்லாமல் அதே சமயத்தில் அமைதி யோடு முன்னேறும் (முன்னேற்றும்) உன்னத நிலையாகும். நாம் முன்னேற்ற மடைந்து உயர்வடைவதை நம்மைத்தவிர வேறு எவராலும் தடுத்து விட முடியாது.எந்தத் தொழி லும் வெற்றிபெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பு வார்கள்.-ஆண்ட்ரு கார்னீகிஊதியத்திற்கு மேற்பட்ட உழைப் பைச் செய்வதன் மூலம் நமக்கு நாமே பெரிய உதவி யை செய்து கொள்கி றோம்.ஒரு இட த்திற்குப் போய் சேரவேண்டுமானால், இருக்கின்ற இடத்தை விட்டுத்தா ன் செல்லவேண்டும். ஆக உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமெனில் சில இன்பங்களை மறந்துதான் ஆகவேண்டு ம். ‘இன்று’ என்பது நம்மிடம் உள்ள ஒரு பணநோட்டு போன்றது.
அதனை எப்படி வேண்டுமானாலும் நம்மால் செலவு செய்ய குடியும். ‘நாளை’ என்பது பின்தேதியிட்ட காசோலை போன்றது. அந்தத் தேதி வரும்வரை நம்மால் அதனைக் காசாக்க முடியாது. இன்று அது வெறும் தாளுக்குச் சமம்.
தோல்வியை சந்திக்க நேரும்போ து அதிருப்தி ஏற்படுவது இயற்கை தான். ஆனால் அந்த அதிருப்தியானது உங்களை இயலாதவர்களாக, அவமானப்பட்ட வர்களாக உருமாற்றும் முன்பே அதை “பிடிவாதமாக”மாற்றிக் கொள்ளுங்கள். எதையோ சாதிப்பதற்காக நீங்கள் பிறந்திருக்கி றீர்கள். அது என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுடை ய வேதனைகளை நினை த்து வருத்தப்படாதீர்கள். அப்படி வருத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாதீர்கள். முக்கி யமாக ‘சுய இரக்கம்’ என்பது கூடாது.உங்களை யாராவது விரும்பா விட்டால் அது அவர்களுடைய பிரச் சனை. அது பற்றி நீங்கள் வருத் தப்பட வேண் டிய தேவை இல்லை.
மற்றவர்கள் உங்களுடன் கழிக்கப் போ கும் நேரம் ரொம்பக் குறைவு தான். ஆனால் உங்களுடன் நீங்கள் 24 மணி நேரம் கழிக்க வேண்டியிருக்கும். உங் களுடைய கம்பெனி உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் .விரும்பியதை யாராலும் பெறமுடியும்.முயன்றால் முடியா தது இல் லை.யாரையும் நம்மைவிட தாழ்ந்தவர்களாக எண்ணிவிடக் கூடாது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்க ளை மிகவும் முக்கியமான வராக, தவிர்க்க இயலாதவராக மாற்றிக் கொள்ளுங்கள். இனிமையான பேச் சுக்களின் மறுபதிப்பாக இருங்கள்.
ஒரு மனிதனுக்குத் தேவை தன்னம் பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை யே அவனை முழுவேகத்தில் செய ல்படவைத்து தடைகளையும் தாண் டி வலிமையுடன் வெற்றியைச் சந்திக்க வைக்கிறது.எல்லாக் கவலைக ளையும் மறக்கவும்,கவலையே இல்லாமல் வாழவும் தன்னம்பிக்கை யுடன் சிந்தியுங்கள். வழிபிறக்கும்.
“தோல்வி உறுதி” என்கிற நிலையி லும் போராடத் துணிந்தவனே உண் மையான வீரன். “வெற்றி பெறு வோம்” என்று நம்புங்கள். இறுதி வரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.-முசோலினி தன் மேஜை மீது வைத்திருந்த பொன்மொழி
மனதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இலட்சியத்தை அடையும் வரை, நமது மனமும் செயலும் இலட்சியத் தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டு ம். முதலில் கடினமாகத் தோன் றினாலும் மனப்பழக்கத்தினால் நம்முடைய பணிகளை வெகு எளிதாக தொடர்ந்து செய்யமுடியும். கடினமான வேலையைச் செய்வ தில் மகிழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும்வெற் றியையும் அதன்மூலம் புகழையு ம் பெறுகிறார்கள்.
மனம் சோர்ந்து போனால் நீங்கள் இதுவரை பெற்ற வெற்றிகளை நி னைத்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டிய அம் சங்களை நினைவிற்குக் கொ ண்டு வாருங்கள். நாம் எழுந்து எழு ந்து உறுதியுடன் எடுத்து வைக்கு ம் முயற்சிகளில்தான் நம்பிக்கையும் வெற்றியும் உள்ளன.

No comments:

Post a Comment