Wednesday, October 9, 2013

கிழமைகளுக்கு பெயர் தோன்றிய வரலாறு

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழமைகளுக்குப் பெயர் கிடையாது. அப்போதெல்லாம் காலத்தை மாதமாக வே பிரித்திருந்தனர். மாதங்கள் வாரங்க ளாக கணக்கிடப் பட்டதும், வாரத்திற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க்கலாம்… ஆரம்ப காலத் தில் பகல் – இரவு, சந்திரன் வளர்ச்சியை க் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் கிழமைகள் உருவாக்கப்பட வில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஏரா ளமான நாட்கள் உள்ளன. அத்தனை நாட் களுக்கும் தனித்தனியாகப் பெயர் வைப்பதற்கு சாத்தியப்படவி ல்லை.

மனிதர்கள் சமுதாயமாக கூடி வாழப் பழகிய பிறகு நகரங்களும், வாணிபமும் வளர்ந்தது. வாணிபம் செய்வதற்கு அதாவது சந்தை கூடிப் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் வசதியாக அவர்களுக்கு தனியாக ஒருநாள் தேவைப்பட்டது. அதற்காக அவர் கள் 10 நாட்களுக்கு ஒருநாள் சந்தை நாளாக ஒதுக்கினார்கள். சில சமயங்க ளில் ஏழு நாட்களுக்கு ஒரு நாள் ஒதுக்க ப்பட்டது. பண்டைக்காலத்து பாபிலோ னியர்களே இதற்கு முன்னோடியாக இருந்தனர். 

அவர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளையு ம் வணிகத்திற்கும், மத விசயங்களு க்கும் மட்டும் ஒதுக் கினர். அந்த நாட்களில் அவர்கள் இந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. யூதர்கள், பாபிலோனியர்களைப் பின்ப ற்றினர். ஒவ்வொரு ஏழாவது நாளையும் மத விசயங்களுக் கு மட்டுமே அவர்கள் ஒதுக் கினர். இவ்வாறு இரு வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட கா லம் (7 நாட்கள்) வாரம் என்று கணக்கில் கொள்ளப் பட்டது.

வாரம் பிறந்த வழக்கிலேயே கிழமைகளும் தோன்றின. வாரம் கணக்கிடப் பழகியவர்கள் சந்தைக்கு அடுத்த நாளை ஒன் றாம் நாள், இரண்டாம் நாள் என்று எண் ணிட்டு வழக்கப்படுத்தினர். அடுத் த 7-வது நாள் மீண்டும் சந்தை வந்தது. வாரத்திற்கு 7 நாட்கள் என்ற முறையை கடைபிடி த்த எகிப்தியர்கள், வாரத்தின் நாட்க ளுக்கு பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்தனர். அவர்கள் 5 கிரகங் களின் பெயர்களை கிழமைகளு க்கு சூட்டினர். 

மற்ற இரண்டு நாட்களும் சூரியனி ன் (ஞாயிறு) பெயராலும், சந்திரனின் (திங்கள்) பெயராலும் வழங்கப்பட்ட து. ரோமானியர்கள், எகிப்தியர் வை த்த பெயர்களைப் பின்பற்றினர். மார் ஸ் அல்லது டியூரோ மானியர்களின் யுத்த தெய்வம். அப் பெயர் (டியூஸ்டே) செவ்வாய் கிழமையாயி ற்று. மற்றோர் தெய்வத்தின் பெயர் வெனஸ், அது (வெனஸ்டே) புதன் கிழமையாயிற்று. இடியை உருவாக்கும் தெய்வமாக ரோ மானியர்கள் வழிபட்டது ‘தர்’ தெய் வ மாகும். அதன் பெயரே (தர்ஸ் டே) வியாழக் கிழமை. 

பரிக் என்பது ரோமானியர்களின் மற்றோர் தெய்வத்தின் மனைவி. அந்தப் பெயர் பிரைடே வெள்ளிக் கிழமை ஆயிற்று. சனிக்கிரகத்தி ன் பெயர் சனிக்கிழமை ஆயிற்று. சூரியன் உதயமான நேரத்திற்கு ம், மறையும் நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் பகலாகக் கணக்கிடப்பட்டது. ஒரு நள்ளிரவிலி ருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள காலத்தை ரோமானியர் ஒருநாளாகக் கொண்டனர். அந்த முறை யைத்தான் இன்றைய நாடுகள் பின்பற்றி வருகின்றன.

No comments:

Post a Comment