Monday, October 7, 2013

“சாபமே வரமாக மாறும் சந்தர்ப்பம், அர்ஜுனனுக்கு மட்டும் அல்ல‍ உன் வாழ்விலும் நேரலாம்!”

சூதாட்டத்தால் நாட்டை இழந்த பாண்டவர்கள் வனவாசம் மேற் கொண் டிருந்த காலம். பன்னிரண்டு ஆண்டுக ளைக் காட்டில் கழிக்க வேண்டும். பின்னர் ஓர் ஆண்டை யாரும் அடையாளம் காணா தவாறு அஞ்ஞாத வாசத்தில் கழித்தாக வேண்டும். இதுதானே துரியோதனன் நிபந் தனை? பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் தறுவாயி லிருந்தன. இனி விரைவில் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ள ஆயத்தமா க வேண்டியதுதான். அவ்வப்போது கண்ண ன் அவர்களுக்கு, அறிவுரைகளால் தைரிய ம் ஊட்டிக் கொண்டிருந்தான். அப்படிக் கண் ணன் வந்த ஒருநாள், அர்ஜுனன் கேட்டா ன்: ‘‘கண்ணா! துர்வாச முனிவரைப் போன் றவர்கள் திடீர் திடீர் என்று பலரை சபித்து விடுகிறார்களே? முனிவர்களோ வேறு யாருமோ சபித்தாலும் பாதிப்பு ஏற்படாம ல் காத்துக்கொள்ளமுடியாதா?’’ ‘‘ஏன் காத்துக்கொள்ள வேண்டும்? சாபம் என்பதுகூட இறைவனின் அருளால் நேர்வதாகலாம்!’’ என்றான் கண்ண ன்.

பாஞ்சாலி திகைப்புடன் வினவினாள்: ‘‘கண்ணா! வரம்தான் இறைவனி ன் அருள். சாபம் எப்படி அருளாக இருக்க முடியு ம்?’’ ‘‘முடியும். சாபமே வரமாக மாறும் சந்தர்ப்ப ங்களும் நேர்வதுண்டு. சாபமோ வரமோ எதுவா னாலும் இறைவனின் தீர்ப்பு என்று ஏற்று வாழ்ந் தால் சாபத்தினால் கூட நன்மை காணமுடியும். சாபம் வரமாக மாறும் சந்தர்ப்பம் அர்ஜுனன் வாழ்விலும் நேரலாம். யார் கண்டது?’’ கண்ணனின் விளக்கத்தைக் கேட் டுப் பாண்டவர்கள் யோச னையில் ஆழ்ந்தார்கள். போருக்கு இன்னும் ஓரா ண்டுதானே பாக்கியிருக் கிறது? வனவாச காலத் திலேயே இந்திரனிடம்சென்று வலிமையான அஸ்திரங்களைக் கேட்டுப்பெறுமாறு கண்ணன் அர்ஜுனனுக்கு அறிவு றுத்தினான்.

குந்திதேவி, இந்திரனுக்கு உரிய மந்திரத்தை ஜபித்தல்லவா அர்ஜுன னைப் பெற்றாள்? தனக்கு மகனே போன்ற அர்ஜுனன் கேட்டால் இந் திரன் தேவ அஸ்திரங்களைத் தர மறுப்பானா என்ன? அர்ஜுனன் வி ண்ணுலகம் புறப்பட்டான். தேவ சபையில், தன்னைத் தேடி வந்தி ருக்கும் அர்ஜுனனைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான் தேவேந்திர ன். அவன் மனதில் தந்தைக்கே உரிய பாசம் பொங்கியது. மன்மதனும் கண்டு பொறாமைப் படும் பேரழ கனாக அர்ஜுனன் விளங்குகிறானே! சிவந்தமேனி, கவர்ச்சிகரமான முக ம், தாமரை இதழ் போன்ற விழிகள், நீண்ட கைகள்! அவன் அங்கலட்ச ணங்களைப் பார்த்து வியந்தது இந்திரன் மனம்.

அர்ஜுனன், மாவீரனும் கூட! மண்ணுலகி லிருந்து அஸ்திரங்கள் பெறுவதற்காக எல் லாத் தடைகளையும் தாண்டி விண்ணுல கிற்கே வர முடிந்து விட்டதே அவனால்! இந்திரனின் தந்தை மனம் பெருமிதம் கொ ண்டது. அதே தேவசபையில் ஒரு சாளரத் தின் வழியே வேறு இரு விழிகளும் ரகசிய மாக அர்ஜுனனின் எழிலைப் பருகிக்கொ ண்டிருந்தன. பேரழகியான ஒரு பெண்ணி ன் கருநீல விழிகள் அவை. அர்ஜுனனின் எழிலில் ஈடுபட்ட அவள் விழிகளில் மெல்லமெல்லக் காமத்தின் செம் மை படரத்தொடங்கியது. அவள் புகழ் பெற்ற நாட்டியக்காரி. அவளை அடைய ஏராளமானோர் ஏங்கித் தவித் தார்கள். அவள் இந்திர சபையில் இந் திரனுக் குரியவளாய் இயங்குபவள். பிறரை ஏங்கவைக்கும் அவள், இப் போது, தான் அர்ஜுன னை அடைய வேண்டும் என்று ஏங்கலானாள்!

இந்த வசீகர வாலிபன் இன்னும் எத்த னைநாள் தேவருலகில் தங்குவானோ ? அஸ்திரங்களை வாங்கிக்கொண்டது ம் விடைபெற்று விடுவான். அதற்குள் நாம் நமது மன்மத அஸ்திரங்களை அவன் மீது தொடுக்க வேண்டும்…. அவள் மனத்தில் மெல்லிய முறுவல் தோன்றியது. வேடிக்கைதான். அவள் தோழிகள் அவளது மனநிலையை அறிந்தால் சிரிப்பார்கள். முற் றும் துறந்த முனிவர்கள்கூட அவளது அழகில் கிறங்கித்தவத்தை விட்டுவிடச் சித்தமாக இரு க்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புலனடக்கம் உடை யவனையும் வீழ்த்தக் கூடியது அவளின் அழகு . அவளைக்கண்டுதான் இதுவரை எல்லோரும் ஆசைப்பட்டிருக்கிறார்களே ஒழிய அவள் யாரையும் பார்த்து ஆசைப்பட்டதாக வரலா றே இல்லை. ஆனால் இப்போது வரலாறு மாறுகிறது!

அன்றிரவு ஒலி அடங்குவதற்காகக் காத்திருந் தாள். அவளிடமிருந்த ஆடைகளிலேயே மெல் லியதும் பளபளப்பானதுமான ஆடையை அணிந்துகொண்டாள். புருவம் திருத்தி, கண் ணுக்கு அஞ்சனமிட்டு அலங்கரி த்துக் கொண் டாள். முத்துச்சரம், மேகலை, கழுத்து நகைக ள், நெற்றிச்சுட்டி என ஒவ்வோர் அணிகலனை யும் தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டாள். தன் அழகால் யாரையும் கவ ர்ந்துவிட முடியும் என்ற கர்வம் அவளிடம் தோன்றியது. போயும்போ யும் ஒரு மானிடனைக் கவரவா இத்தனை பாடு! சப்தமெழுப்பாம ல் தன் மாளிகையை விட்டு வெளி யேறினாள். அந்த விருந்தினன் தங்கியுள்ள மாளிகை நோக்கி நட ந்தாள். அர்ஜுனன் மாளிகை இரு ளில் ஆழ்ந்திருந்தது. மெல்லக் கத வைத் தட்டினாள். அந்தத் தட்டலி லேயே ஒரு கொஞ்சல் இருந்தது.

மாளிகையில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த அர்த்த ராத்திரியில் தன்னை த் தேடிவருபவர் யாராயிருக்கக் கூடும்? மாவீரனான அர்ஜுனன் எச்சரிக் கையோடு வந்து வாயில் கதவைத் திறந்தான். வாயிலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவன் உள்ளம் திகைப்பில் ஆழ்ந் தது. அவளின் ஒப்பனையும் அவ ள் விழிகளில் தென்பட்ட காமச் சிவப்பும் சொல்லாமலே அவள் எண்ண த்தைப் புரிய வைத்தன. அர்ஜுனனும் பாஞ்சாலி என்ற வீரத்தால் பெற்ற ஒரு மனைவியோடு தன் உறவை நிறுத்திக் கொண்டவனல்ல. செல்லு மிடமெல்லாம், தன்னை விரும்பும் பெ ண்களை அவன் மணப்பதுண்டு. அவன து அத்தகைய குணத்தைப் பற்றிப் பாஞ் சாலிக்குச் சற்றுச்சலிப்புண்டு. ஆனால் இந்த தேவலோகப் பெண்ணைப் பார்த்த தும் அவன் மனதில் காதல் எழவில்லை . ஏனோ மரியாதைதான் எழுந்தது. தன் மன உணர்வுகளை எண்ணி அவனுக் கே திகைப்பாக இருந்தது.

முதலில் அவள் யார் என்று அறிவோம். ‘‘தாயே! தாங்கள் யார்? இந்த நள்ளிரு ளில் என்னைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன?’’ என்று பணிவோடு வினவினான். ‘‘தங்களைவிட வயதில் குறைந்த தோற்றம் காட்டும் என்னைத் தாங்கள் தாய் என அழைப்பது முறையல்ல!’’ என்று அவனி டம் முறையிட்ட அவள், மய க்கும் மோகனப் புன்முறுவ லோடு சொன்னாள்: ‘‘என்னை ஊர்வசி என்பார்கள். இந்திர சபையில் ரம்பை, திலோத் தமை போல நானும் ஒரு நாட்டியக்காரி. தங்கள் மேல் கொண்ட இச்சையால்தான் தங்களை நாடிவந்தேன் என்ப தை வெட்கத்தைவிட்டு நான் வெளிப்படையாகச் சொல்லுமாறு செய்து விடாதீர்கள். தாங்களே புரிந்துகொள்ளுங்கள்!’’ வெளிப்ப டையாகச் சொ ல்லிவிட்டு அவ்விதம் சொல்லுமாறு செய்துவிடாதீர்கள் என்று சொல்லும் அவளின் சாதுரியம் அர்ஜுனனை நகைக்க வைத்தது. மிகுந்த மதிப்போ டு அவளை உள் ளே அழைத்த அவன் ஓர் ஆசனத்தில் அமர வைத்து, திடீரெ ன அவள் காலில் விழுந்து வணங்கி னான்!

அவள் பதறிப்போய் காலை நகர்த்திக் கொண்டாள். அர்ஜுனன் பணி வோடு பேசலானான்: ‘‘அம்மா! தாங்கள் என் தாய்க்கு நிகரல்லவா? தே  வேந்திரன் எனக்குத் தந்தை முறையாக வேண்டும் என்றால் தாங்கள் எனக்குத் தாய் தானே?’’ ஊர்வசி யின் விழிகளிலிருந்து அரு வி போல் நீர்கொட்டியது. கூடவே அவள் மனத்தில் கடும் சீற்றமும் எழுந்தது. அர்ஜு னனைப் பற்றிய மரியாதை மொழிகள் அவளிடமி ருந்து விடைபெற்றன. ‘‘உன்னை விட வயதில் குறைந்தவளாகத் தோற்றம் காட்டும் நான் எப்படி உனக்குத் தாய்முறையாக முடியு ம்? ’’‘‘தாய்ப் பாசத்திற்கும் வயதிற் கும் என்ன சம்பந்தம்? மகனை விட வயதில் குறைந்த பெண் ணைத் தந்தை இன் னொருமணம் புரிந்துகொண்டால் அந்த மக னுக்கு அவனை விட இளையவள் தாயா கத் தானே ஆவாள்? தாங்கள் என் தாயாவதும் அப்படித்தான். இவ்வளவு பேரழகுடைய பெண்மணி எனக்குத் தாயாய் இருப்பது குறித்து என் மனம் பெருமைகொள்கிறது தாயே!’’

ஊர்வசி இருசெவிகளையும் கரங்களால் பொத்திக்கொண்டாள். ‘‘மீண் டும் மீண்டும் என்னைத் தாய் என்று சொ ல்லி அவமானப்படுத் தாதே! நான் உன் மேல் ஆசைகொண்டு உன்னைத் தேடி வந்த பெண். தாய்-மகன் உறவு என்பது இருதரப்பிலும் ஏற்கப்பட வேண்டும். நீ என்னைத் தாய் என்று சொல்வதால் மட் டும் நான் உன் தாயாகிவிட மாட்டேன்.’’ அர்ஜுனன் அமைதியாகவும் உறுதியாக வும்சொன்னான்

‘‘தாயே! உங்கள் உணர்வுகள் உங்களுடையவை. அவற்றை நீங்கள்தா ன் மாற்றிக்கொள்ளவேண்டும். என் மனநிலையை நான் தெரிவித்தே ன். அதில் என்றும் எந்த மாற்றமும் இல் லை. தன்தாயின் ஆசிகளை வேண்டிப் பணி கிறான் இந்த மகன்!’’ மீண்டும் அர்ஜுனன் ஊர்வசியின் காலில் விழுந்து வணங்கினா ன். எரிச்சலடைந்த ஊர்வசியின் ஆழ் மன ம் கோபத்தால் பொங்கியது. முன்னர் காமத் தால் சிவந்த அவள் விழிகள் இப்போது சீற் றத்தால் சிவந்தன.

‘‘வெட்கத்தை விட்டுத் தேடிவந்து என் உண ர்வுகளைச் சொன்ன என்னை அவமானப்ப டுத்திவிட்டாய். அதற்குரிய தண்டனையை நீ அடைந்தே தீரவேண்டும். ஒரு பெண்ணி ன் ஆசையை உணராத நீ, பெண்ணாகவும் இல்லாமல் ஆணாகவும் இல்லாமல் இரண் டு தன் மைக்கும் இடைப்பட்ட நிலையை அடைவாய்!’’ ஊர்வசியின் சாபம் காற்றில் ஆக்ரோஷத்துடன் படபடத்தது. அர்ஜுனன் மனம் திடுக் கிட்டது. தான் அடையவிருக்கும் துர்ப்பா க்கியமான நிலையை எண்ணி அவன் மனம் வருத்தத்தில் ஆழ்ந்தது. அவன் ஒரு விம்மலுடன் ஊர்வசியிடம் வேண் டினான்: ‘‘தாயே! சற்றே சிந்தித்துப் பாருங் கள். என் நிலை தங்களுக்குப் புரியும். தங் கள் இச்சைக்கு நான் உடன்பட்டால் தாய் க்கு நிகரானவளை அடைந்தேன் என்று சான்றோர் என்னைப் பழிக்கமாட்டார்களா? தங்களுக்கும்தான் அது பெருமையா? அறவழியில் செல்ல நினைத்தவனைச் சபிப்பது எவ் வகையில் தர்மமாகும்? என் நிலை உணர்ந்து எனக்குத் தாங்கள் சாப விமோசனம் அருள வேண்டும்!’’

ஊர்வசியின் உணர்ச்சிகள் மெல்ல சமனப் பட்டன. தன் மனத்தில் தோன் றிய காம உணர்ச்சி அடங்கியதும், அர்ஜுனன் தரப்பி ல் இருந்த நியாயத் தை அவள் மனம் உண ரத் தொடங்கியது. அவள் ஒரு பெரு மூச்சுடன் சொன்னாள்: ‘‘ஆம். நீ சொல்வது சரிதான். ஆனால் சபி த்தது சபித்தது தான். அதைச் சபித்தவரே கூட மாற்ற இயலாது. என்றாலும் சாபத்தின் வேகத்தைக் குறைக் க இயலும். நீ உன் வாழ்வில் ஓராண்டு மட் டும் அலித்தன்மை பெறக் கடவாய். அது நீ விரும்புகிற எந்த ஆண்டாக வேண்டுமா னாலும் நீயே தேர்வுசெய்து கொள்ளலாம்!’’ சொன்ன ஊர்வசி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அந்த மாளிகை யை விட்டு வெளியேறினாள். தேவேந்தி ரனிடமிருந்து அஸ்திரங்களை ப் பெற்ற அர்ஜுனன் மீண்டும் கானகம் திரும்பினா ன். கண்ணன் அவனைச் சந்திக்கக் காத்தி ருந்தான். அர்ஜுனன் விழிகளில் கண்ணீர் திரை யிட்டது.

அர்ஜுனனின் சோகத்திற்கு என்ன கார ணம் என வினவினான் கண்ணன். அர்ஜு னன் ஊர்வசியின் சாபத்தைப் பற்றிச் சொன்னான்.கண்ணன் மகிழ்ச்சியு டன் நகைத்ததைக் கண்டு அர்ஜுனனுக்கு வியப்புத் தோன்றியது. ‘‘என்ன கண்ணா உன் முகத்தில் இத்தனை மகிழ் ச்சி? நான் பெற்ற சாபம் உனக்கு ஆனந்தம் தருகிறதா?’’ ‘‘ஆமாம்!’’ உறுதிபடக்கூறிய கண்ணன் விளக்கலானான்.‘‘அர்ஜுனா! பதி மூன்று வருட வனவாச காலத்தில் கடைசி ஓராண்டை நீங்கள் ஆறுபேரும் அஞ்ஞாத வாசமாகக் கழிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. யாரும் உங்களை அடையாள ம் புரிந்துகொள்ள முடியாமல் வாழ வேண் டிய நிர்ப்பந்தம். பெரும் வீரனான நீ மிடுக் கான தோற்றமு டையவனாய் இருக்கிறா யே? உன்னை எவ்விதம் ஒளித்து வாழ்வா ய்? ஊர்வசியின் சாபத்தால் நீ அலித்தன்மை அடையும் ஓராண்டாக அந் தக் கடைசி ஆண்டைத் தேர்வு செய்துகொள்.

உன் தோற்றம், இயல்பு அனைத்தும் மாறும். உன்னை யாராலும் கண்டு பிடிக்க இயலாது! ஊர்வசி கொடுத்தது சாபமல்ல, வரம். நீ அறநெறி தவறா மல் அவளைத் தாயாக ஏற்றாய். அந்த அறநெறி அவள் மனத்தில் ஒரு சாபத் தைத் தோற்றுவித்து அதையே உனக் கு வரமாக மாற்றிவிட்டது! அறநெறி யில் நடந்தால் இறுதியில் நன்மைதா ன் உண்டாகும்! சாபமே வரமாக மாறு ம் சந்தர்ப்பம் உன் வாழ்விலும் நேர லாம் என்று சொன் னேனே? நினைவி ருக்கிறதா?’’ இதைக்கேட்டு பாண்டவர் ஐவர் முகத்திலும் பாஞ்சாலி முகத்தி லும் மகிழ்ச்சி பரவியது.

கண்ணன் விளக்கினான்: ‘‘மூடிய இரும்புக் கதவைப் பார்த்து வருந்துகி றார்கள் மக்கள். ஆனால் அதைவிடப் பிர காசமான தங்கக் கதவைத் திறப்பதற்கா கவே தற்காலிகமாக அந்த இரும்புக் கதவு மூடப்படுகிறது என்பதைப் பின்னர்தான் அறிகிறார்கள். கடவுள் சக்தி மக்களைக் காப்ப தற்குத்தானே எப்போதும் காத்திரு க்கிறது! தற்காலிக சோகங்களை எண்ணி வருந்துவானேன்? நிரந்தர ஆனந் தத்தை நோக்கி நடக்க வேண்டியதுதானே?’’ கண் ணனின் பேச்சைக்கேட்டு நிறைவடைந்த அர்ஜுனனின் கரம் கண்ண னை நோக்கிக் குவிந்தது. 

No comments:

Post a Comment