Tuesday, October 8, 2013

“நான் ஒரு மூடன்” என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.” – கவியரசு கண்ண‍தாசன்

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத் தறிவாளர்கள் உண்டு. அவர் களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத் தனம் என்றும் நம் முடைய நம்பிக்கை கள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர் கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை… எது வும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத் தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?

நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என் று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய் தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது? திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக் கையில்தான் அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள். அதன் கதி என்ன?

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது. அப்படி நடக்காம லும் போய்விடலாம். அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.

ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி! இது வரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆனா ல், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே மேற்கொள் கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.

தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கு மாகவே ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கை யைப் போல் ஒரு கட்டத்தில் தோல்வியுற்றா லும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.

“ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்” என்பது மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால், “நான் ஒரு மூடன்’ என்று சொல்லிக் கொள் வதிலேயே பெருமைப் படுகிறேன்.

முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக் காரத்தனத்தில் இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் “ஒன்றுமே இல்லை’ என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கி றான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொ ரு மயிர்க்காலையும் பார்த்து, “”இது அதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறி வாளி, நித்திய நோயாளி யாகச் சாகிறான்.

“சுடு’ என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காம லே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால் .. . பகுத் தறிவு மிஞ்சும்… நாடு மிஞ்சாது!

போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணன் அதைத்தா ன் சொன் னான்.

“போர்’ என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உத வாது’ என்றான். கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.

கீதையில் கர்மயோகம் மானிடக் கட மைக ளை வலியுறுத்துகிறது. பக்தி யோகம், தியானத்தை வலியுறுத்துகிற து. கடமையு ம், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும், நம்பிக்கையுடன் தான் நடை பெறு றது.

“மனம் உண்டானால் வழி உண்டு’ என் பது பெரியோர் வாக்கு. அது மானி ட தர்மத்துக் கும் பொருந்தும். தியான தர்மத்துக்கு ம் பொருந்தும். ஆக வே, தெய்வ நம்பிக்கையை மூட நம்பிக் கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப்போகிறார்கள்” என்ற நம்பிக் கை தெய்வத்துக்கு இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!

No comments:

Post a Comment