Thursday, October 10, 2013

முதலில் உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை!

உன்னை உடம்பாக நினைக்கும் போது உலகிலிருந்து நீ வேறுபடுகி றாய்; உன்னை உயிராக நினைக்கும்போது நிலையான பேரொளிப் பிழம்பின் பொறி!

இறைவன்: இறைவனுக்கு அருவமும் உண்மை, அதுபோல் உருவமும் உண் மை; இதை நினைவில் வைத்திரு. ஆனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக் கொள்

பாடுபடு : இந்த மானிடப் பிறவியைப் பெறுவது பெரிய பாக்கியம்! சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடு. பாடுபட வேண்டும்; பாடுபடாமல் ஏதாவது நடக்குமா? பல்வேறு பந்தத்தின் 

காரணம்: பந்தத்திற்கு காரணம் காமம் மற்றும் பணத்தாசைதான், காமமும் பணத்தாசையுமே உலகியல். இவை இரண்டுமே நாம் இறைவ னைக் காண்பதற்கு தடையாக எங்கும் எப்போ தும் இறை நாமம்

சொல் : இறைவனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதற்கும் அவரை வழிபடுவதற் கும் குறிப்பிட்ட இடமோ, காலமோ, அவசிய மில்லை.

ஆனந்தங்கள்: விஷயானந்தம், பஜனானந்தம், பிரம்மானந்தம் என் று ஆனந்தம் மூன்றுவகை. எல்லோரும் ஈடுபடுகின்ற காமம் மற்றும் பணத் தாசை ஆனந்தம்தான் தவம் என்பது என்ன? இறைவனிடம் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் அடைய வேண்டுமெ ன்றால் நீ கடும் தவம் செய்ய வேண்டும்.

தவம் என்பது இதயத்து உணர்வு: இறை வன் இதயத்து உணர்வையே ஏற்றுக் கொள்கிறார். ஒருவன் எதைக் கருத்திற் கொண்டு சாதனை செய்கிறானோ, அது வே அவனுக்கு அமைகிறது.

இதயத்து உன் ஆன்மாவே உன் ஆசிரியர் : நீயே உன்னுள்ளிருப்பதை வெளிவரச் செய்ய வேண்டும். ஒருவராலும் உனக்குக் கற்பிக்க முடியாது. யா ராலும் உன்னை ஆன்மீகவாதியாக்க முடியாது. ஆன்மாவே நாம்! மரணமற்ற, சுதந்திரமான, இயல்பாகவே தூய்மையான ஆன்மாவே நாம். நாம் பாவம் செய்யமுடியுமா? முடியவே முடி யாது. இத்தகைய நம்பிக்கைதான் அன்பா யிரு!

எல்லோரிடமும் அன்பாயிரு, துன்பப்படுப வர்களிடம் பரிவுகொள். எல்லா உயிர்களையும் நேசி. யார்மீதும் பொறாமைப் படாதே. உன்னை அறிக! ஆ! நீங்கள் மட்டும் உங்க ளை அறிந்துவிட்டால் நீங்கள் ஆன்மாக்கள், தெய்வங்கள், என்றை க்காவது நான் தெய்வத்தை இழிவு செய்  யும் பேடித்தனத்திற்கு இடமளி க்காதே!

பலவீனத்தைச் சக்திபோல், உணர்ச்சியை அன்புபோல், கோழைத்தனத்தை வீரம் போ ல் காட்டவே நாம் எப்போதும் முயன்று வருகிறோம். உண்மையே வெல்லும்! உண்மைக்காக நான் வாழ்கிறேன். உண் மை ஒருபோதும் பொய்யுடன் இசைந்து செல்ல முடியாது. உலகனைத்தும் என் னை எதிர்த்தாலும். 

யார் சுதந்திரன்? உலகை விட்டு, எல்லாம் துற ந்து, உணர்ச்சி வேகங்களை அடக்கி, அமைதி க்காக ஏங்குபவன் சுதந்திரன். பெரியவன். வீர னாக இரு! நீ எதை நினைக்கிறாயோ அதுவா க ஆகிறாய், உன் னை வலிமை உடை யவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! உன்னை நம்பு! இவனை நம்பு அல்ல து அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன்; முதலில் உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை.

No comments:

Post a Comment