Monday, October 7, 2013

அறிவை வளர்த்துக்கொள்வதற்குமுன் ஒழுக்கம் அவசியம்!

நாம் மாடர்ன் ஸயன்ஸைப் படிக்க வேண்டும். அதில் நல்லதாகவும் பல அம்சம் இல்லாமலில்லை. ‘களவும் கற்று மற’ என்றார்கள். முதலில் நம் ஸமயாசார ங்களால் நல்லொழுக்கங்களைப் பாறை மா திரி உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டால், அப் புறம் எதுவும் நம்மைக் கெடுக்க முடி யாது என்ற நிச்சயத்துடன் கெட்டதோ, நல்லதோ எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு மற்ற வர்களுக்கு நல்லது- கெட்டதுகளை எடுத்துச் சொல்லலாம். 

ஆகையால் Knowledgeக்கு (அறிவை வளர்த் துக் கொள்வதற்கு) முன்னால் Character ( ஒழுக்கம்) அவசியம். இல்லாவிட்டால் அறி வு கெட்டதற்கு Apply ஆகி, கெட்டதுகளை வளர்க்கும். முதலில் வரவே ண்டிய இந்த ஒழுக்கம் மதா நுஷ்டானத்தால் தான் வரும்.

உலோகங்கள், மற்ற வித்யைகள், விஞ்ஞா னங்கள் யாவும் லௌகிகத் துக்கும் அறிவு க்கும் மட்டுமே பிரயோஜனமானாலும் இவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டு ம். Basic ஆக (அடிப்படையாக) தெய்வ பக்தி யும், ஸமயாநுஷ்டானங்களும் இருந்துவி ட்டால் அறிவுக்கும் மனோ வளர்ச்சிக்கும் ஏற்பட்ட விஞ்ஞானங்களையும் கலைக ளையும் தெரிந்து கொள்வதுகூட அந்த அறிவையும் மனஸையும் நன்றாக வளர்த்து சுத்தப்படுத்தவே உதவும். அப்புறம் இவற்றைத் தாண்டி ஆத்மாவிலேயே ஆணி அடித்த மாதிரி நிற்க, ஆரம்பத்தில் இவையே உபாயமா யிருக்கும்.

உபவேதங்கள் மட்டுந்தானா என்ன? கர் மாக்கள் அத்தனையும் – தர்ம சாஸ்திரம் சொன்ன அத்தனை விஷயங்கள், வேத த்தின் கர்மகாண்டத் திலேயே உள்ள அநு ஷ்டானங்கள் எல்லாமும்கூட – முடிவி லே அடிபட்டுப் போகிறவைதான். ஆனால் அந்த முடிவிற்குப் போவதற் கே அடிமட் டத்தில் அவை வேண்டும். இத்தனை படிப்பதும், பார்ப்பதும், அறிவதும், அநுபவிப்பதும், அநுஷ்டிப்பதும் பரமாத்மாவைத் தெரிந்து கொள்வதற்கு வழியாகத் தான்.

-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச் சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment