Monday, October 7, 2013

“முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்!” – மகா பெரியவர்

ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. சாஸ்திரத்தி ல் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யை களையும் படித்தால் கட்டுப்பெட்டிக ளாக இருக்க வேண்டியதே யில்லை. அதனால் அவற்றையும் படித்து, மாடர் ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மாதிரி ஸய ன்ஸ்காரர்க ளும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக் கொன்று ‘காம்ப்ளிமென்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப் பிக் கொள்ள வேண்டும்.

நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வள வு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலா சாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. நமக்கென்று காரியத் தில் பின்னி வைத் திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணி னால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படி ப்பதில் ஸாரம் எது என்று புரிந்துகொண் டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்ச ரை வளர்க்க முடியும். பிற தேச விஷய ங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வ தற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.

இக்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தா ன் விட்டது. அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் strain பண்ணிக் கொண்டாவது (சிரமப்படுத்திக் கொண்டாவது) சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத் தான்வேண்டும். நம் மதத்துக்கு ஆதா ரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால் தான் போஷிக்கும். முதலில் லெக்சரா கவும் அப்புறம் லைப்ரரியில் புஸ்தக மாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜன மில்லை.

நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம்தான். ‘பணம்தான் பிரதா னம்’ என்பதே அந்த அம்சம். பணமே குறி என்று நாம் இறங்கின பிற் பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததே யில்லை. லௌகிக வாழ்க்கை யை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வது தான் நம்முடைய தேசாசாரம்.

-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச் சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment