Sunday, January 20, 2013

நல்லோர் வழி சேர்தல்

உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். நெஞ்சம் மகிழ பழக வேண்டும். இதனை வள்ளுவர் இவ்வாறு  கூறுகிறார்.

குறள் :

முகம்நக நட்பதுநட்பு அன்று; நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.

பொருள் : 

பார்க்கும்போது மனம் மகிழாமல் முகம் மட்டும் மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம். உதாரணமாக,  செம்மண்ணில்  மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால்  கருப்பு.

நல்லோர் வழி பற்றி இலக்கணம் கூறுவது :

    * இலண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ் இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.

    * கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி புத்த பிரானைச் சந்தித்ததும் ஞான தீட்டை பெற்று விட்டாள்.

    * ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் 
தோன்றிற்று.

    * நல்லோர் உறவைப்போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல் துன்பமும் இல்லை.

பழமொழி கூறுவது :

    * பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
    * பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நணபல்லார் நண்பல்லர் எட்டுணையும்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

பொருள் : 

பாலைக் காய்ச்சினாலும் சுவை குறையாது. சங்கைச் சுட்டு நீறாக்கினாலும் தன்  வெண்மை நிறத்தை தரும். அதைப் போல, மேன்மக்கள் துன்பம் வந்த போதும் தம் உயிர்  குணத்திலிருந்தும் மாறுபடார். கீழோர் கலந்து பழகினாலும் நணபராகார்.

No comments:

Post a Comment