Tuesday, September 3, 2013

பிரதோஷத்தன்று ஒரு வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும்

நான் ஏழையாயிற்றே! சுவாமி கும்பிட ஐந்து ரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கக்கூட வசதியில்லாத நான், தங்கப்பூவைப் பற்றி சிந்திக்க முடியுமா! அதிலும் ஆயிரம் தங்கப்பூ!'' என்பவர்கள் இதைப்படியுங்க! 

சிவபெருமானுக்கு விருப்பமானது வில்வார்ச்சனை. பிரதோஷத்தன்று ஒரு வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும். இந்த வில்வ இலையையும் காசு கொடுத்து வாங்க வேண்டாம். அநேகமான சிவன் கோயில்களுக்குள் வில்வமரம் இருக்கிறது. அதிலிருந்து உதிரும் இலைகளைக் கழுவி பூஜித்தாலே போதும். முற்பிறவியில் செய்த கொடிய பாவம் கூட வில்வ அர்ச்சனையால் நீங்கும். வில்வமரத்தில் திருமகள் நித்யவாசம் செய்வதாக ஐதீகம். வில்வார்ச்சனை மூலம் உலகிலுள்ள செல்வம் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பதாக பொருள். "நமஸ்தே பில்வதரவே' என்ற மந்திரம் சொல்லி வில்வத்தை பறிப்பதோ, எடுப்பதோ நல்லது. மந்திர சாஸ்திரப்படி, லட்சுமி கணபதி, மகாலட்சுமி யந்திரங்களை வில்வமரப்பலகையில் வரைந்து வழிபடுவது மிகவும் சிறப்பு. அதர்வணவேதத்தில் வில்வத்திற்கு 108 சூக்த மந்திரங்கள் உள்ளன. இதனை சிவராத்தியன்று படிப்பார்கள். காளஹஸ்தி புராணத்தில் வில்வத்தின் மகிமை கூறப்பட்டுள்ளது. வில்வ இலை உதிர்ந்து கிடந்தால் மிதிக்காமல் நடக்க வேண்டும்

No comments:

Post a Comment