Tuesday, October 1, 2013

திருமணத்தின்போது நிகழ்த்தப்படும் நிகழ்வுகளும் அதற்கான பலன்களும்

விளக்கேற்றுதல்: இருள் விலகி ஒளியேற்படும்.

அரசாணிக்கால் ஊன்றுதல்: அரசு செலுத்த செங்கோல் போலாகும்.

பந்தக்கால் நடுதல்: ஒற்றுமையை வலுப்படுத்திடும்.

மாவிலை தோரணம்: மங்கலம்  பெருகும்.

திருமாங்கல்யம்: இறைவனின் நினைவாகும்.

திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட நூல்: வாழ்க்கை, மேன்மை, ஆற்றல், தூய்மை, தெய்வத் தன்மை போன்ற நற்குணங்கள் அமையும். விவேகம், தன்னடக்கம் உண்டாகும். தொண்டுள்ளம் மேம்படும். இவ்வளவு நற்பலன்களைத் தரும் அடையாளமே 9 நூலிழை கொண்ட மஞ்சள் நிற தாலிசரடாகும்.

அம்மி மிதித்தல்: பாறையைப் போன்று உள்ளம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தல்.

அருந்ததி பார்த்தல்: கற்பின் சிறப்பினை அறிவுறுத்துதல்.

ஹோமம் வளர்த்தல்: ஆயுள் நீடிக்கச் செய்யும்.

காப்புக் கட்டுதல்: அவ்வேளையில் துன்பம் நிகழாதிருப்பதற்காக.

பூநூல் அணிவித்தல்: மந்திர உபதேசங்களை மனதில் பதியச் செய்திட.

படையல்: அனைத்துத் தேவதைகளுக்கு பிரியம்.

காசி யாத்திரை: பிரம்மச்சாரியாக இருந்தவனை இல்லறத்தானாக மாற்றும் நிகழ்வு.

காப்பரிசி மலர்: முப்பத்தி முக்கோடி தேவர்களும் மனிதர்களும் அருளாசி வழங்குவதாக ஐதீகம்.

மஞ்சலாடை: மங்கலமும், நோய் தடுப்பும் உண்டாகிட.

மாலை மாற்றிக் கொள்வது: மாலைகளில் உள்ள மலர் போல் மணம் பெற்று ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கணவனுக்கு மென்மையாக பணிபுரிதலை உணர்த்துவது.

யாகசாலை: மணம், மனம் மாறிட உதவுகிறது. இது அக்னி தேவதையின் சாட்சியாக திருமணத்தினை நடத்துவதாக  ஐதீகம்.

விருந்தோம்பல்: சகல ஜீவராசிகளுக்கும் உரிய விருந்தோம்பல் பண்பு. 

வாழ்த்துதல்: இம் மண்ணுலகில் 16 பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்திடும் பண்பு.

No comments:

Post a Comment