Friday, May 31, 2013

ராகு காலம்,எம கண்டத்தில் குழந்தை பிறக்கலாமா?

ஒவ்வொரு நாளும் பூமியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,மாயக்கிரகங்கள் என சொல்லக்கூடிய ராகு,கேதுவின் நிழல் தலா 3-3/4 நாளிகை,அதாவது ஒன்றரை மணி நேரம் விழுகிறது என்பது ஜோதிட சாஸ்திர நம்பிக்கையாகும்.ராகுவின் நிழல் விழும் காலம்,ராகு காலமாகும்,கேதுவின் நிழல் விழும் காலம்,எமகண்டம் ஆகும். 

அத்தியாவாசிய விசயங்களுக்கும்,அவசரமான காரியங்களுக்கும் நாம் ராகு&எமகண்டம் பார்க்கவேண்டியதில்லை.உதாரணமாக திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு அவசரசிகிச்சை செய்யவேண்டும் அப்பொழுது நேரம் ,காலம் பார்த்துகொண்டிருப்பது முட்டாள்தனமான செயலாகும். குழந்தை ராகு காலத்தில் பிரந்தாலும்,எமகண்டத்தில் பிறந்தாலும் கவலைபடவேண்டியதில்லை.குழந்தை சுகப்பிரசவமாக பிறப்பது,இயற்கையின் நியதியாலும்,இறைவனின் அருளாலும் நடக்கும் செயலாகும்.

நல்ல நட்சத்திரம்,ராசி,லக்கினம் அமைந்து விட்டால் போது.இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் 1 வயது வரை கொஞ்சம் சிரமங்களையும்,கஷ்டங்களையும் பெற்றோருக்கு கொடுக்கும் என்பது ஜோதிட விதியாகும்.ஆனால் இந்த நேரத்தில் பிறப்பதால்,குழந்தைக்கோ,நல்ல எதிர்காலத்திற்கோ எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. குழந்தை பிறப்பு,சுகப்பிரசவமாக இருப்பதே சிறப்பாகும்.தாய்க்கும்,குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

சில பேர் குழந்தை நல்ல நட்சத்திரத்திலும்,ராசியும் பிறக்கவேண்டும் என்பதற்காக சிசேரியன் மூலம் குழந்தையை பிரசவிக்கின்றனர்.இது தாய்க்கும்,குழந்தைக்கும் தோசத்தையும்,ஆரோக்கிய குறைவையும் கொடுக்கும். பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் தொழிலை சேவையாக எண்ணாமல்,பணத்திற்க்காகவும்,சுய நலத்திற்க்காகவும் சுயப்பிரசவம் மூலம் குழந்தை பிறக்கவிடாமல்,சிசேரியனே செய்கிறார்கள் என்பதே வேதனையான உண்மையாகும்.அப்படி சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பது உறுதியானால் அப்பொழுது நேரத்தையும்,காலத்தையும் பார்த்து சிசேரியன் செய்யலாம்,இது ஜோதிடர்களுக்கு தோஷத்தை கொடுத்தாலும்,சில நேரம் என்னாலும் தவிர்க்க முடிவதில்லை. 

No comments:

Post a Comment