Tuesday, January 7, 2014

மனதின் மாச்சர்யங்கள் அதிகம்

மனதின் மாச்சர்யங்கள் அதிகம்

பிறர் பாராட்டப்படும் போது பெருமை அடையுங்கள்

நம்மை பாராட்டும் போது நாணம் வேண்டும் பிறர் பாராட்டப்படும் போதும் மகிழ்ச்சி வேண்டும்

நடைமுறையில் நம்மை யாராவது பாராட்டினால் ஆணவத்தில் அகந்தையில் மனம் குதியாட்டம் போடுகிறது அது நாம் வீழப் போவதற்கு அறிகுறி இதுகூட மன்னிக்கப்படும்,

ஆனால் மனதின் மாச்சர்யங்கள் அதிகம்,

நம்மைத் தவிர உண்மையிலேயே தகுதியுடைய‌ ஒரு நபர் வெற்றி பெறும் போதோ, புகழ் பெறும் போதோ பாராட்டப்படும் போதோ, அது நமது பகையானாலும் கூட‌  நடிப்பில்லாமல், உண்மையான மனமகிழ்ச்சி நம்முள் ஏற்படுமானால்  அதுவே நாம் மனப்பக்குவமடைந்ததன் வெளிப்பாடு,

ஆனால்  அது சாதாரண,சாமாண்ய, பாமர மக்களுக்கு கூட‌கைகூடுகிறது.

அறிவு ஜீவிகளான தலைபெருத்தவர்களுக்கு சுலபமாக வருவதில்லை

No comments:

Post a Comment