Saturday, January 4, 2014

வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா?

வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா?

இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கி ற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப் போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல் வி பற்றிய கண்ணோட்ட ம்தான், பல பிரச் சி னைகளுக்கே அடிப்படையாக உள்ளது.

‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவ ளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன் னாலும், ‘இதுதான் வெற்றி, இது தான் தோல்வி’ என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது. 

அதுவும் இந்தவேறுபாடு நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம், ஏன் ஆண்களுக்கு ஒரு மாதிரி பெண்களுக்கு ஒரு மாதிரியாகவு ம்கூட வேறுபடுகி றது. 

பணம் நிறைய சம்பாதிப்பதை வெற்றி என்று எடுத்துக் கொண்டால், கோடீஸ்வரர்கள், மனநோயாளிகளாகவோ, தற்கொலை செய்து கொள் பவர்களாகவோ இருந்திருக்க கூடாதல்ல வா? காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதை வெற்றி என்று எடுத் துக்கொண்டால், காதல் தம்பதிகள் விவா கரத்து செய்யக் கூடாதல்லவா? தோல்வி பற்றிய கண்ணோட்டம் என்பது சமூக சூழ் நிலைகளினாலும் பெருவாரியான மக்கள் ஆதரிக்கும் கருத்துக்களாலும் நிலை பெறுகிறது. 

இந்த கருத்துக்கள் தான் குடும்பம், அரசியல், ஆன்மிகம், கலைத்துறை, கல்வித்துறை என்று பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து, வெற்றி பெறுகிறவர்களுக்கு சந்தோஷத்தை யும் தோல்வி பெறுகிறவர்களுக்கு துக் கத்தையும் தருகிறது. ஒரு தலை முறையினர், இன்னொரு தலை மு றையினருக்கு சொல்லும் கருத்துக்க ளில், முக்கால்வாசி இந்த வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான் இருக்கிறது.

ஒரு தலைமுறையினர் மிகப்பெரிய வெற்றி என்று நினைத்தது, அடுத்த தலைமுறையினருக்கு சாதாரண விஷ யமாகி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அந்த காலகட்டத்தில் சொல்லப்படும் வெற்றி, தோல்வி பற்றி ய கருத்துக்களுக்கு இடையே அல்லல் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. 

வெற்றி, தோல்வி பற்றிய தெளிவு இல்லாவிட்டால் அது தேவையில் லாத மன அழுத்தத்தையும், சோர்வையும், சக்தியற்ற நிலைமையையு ம் உருவாக்கி விடும். ஒரு வகையினர் வெற்றியை ஆர்ப்பாட்டமாக கொண்டா டுகிறார்கள், இன்னொரு வகையினர், அமைதியாக இருப்பதே பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள். 

ஆனால் இரு வகையினருமே, வெற்றி என்ற வார்த்தைக்குள் தான் மாட்டிக் கொ ண்டு இருக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா? என்று கேட்டால், அதை ஒரு அடையாளம் என்றுதான் எடுத்துக் கொள் ள முடியும். 

இந்த அடையாளம் தான் சிறந்த மாணவன், சிறந்த வியபாரி , சிறந்த அரசியல்வாதி , சிறந்த மருத்துவர் என்று பல்வேறு முத்தி ரைகளைப் பெறுகிறது. சில நேரங்களில் இந்த முத்திரை மாறிக்கொண்டு இருக்கும். டிவி நிகழ்ச்சிகளில் தோல்வி அடைந்தவர் கள் கண் கலங்குவதும், அதைப்பார்த்து பெற்றோர்கள் தாரை தாரையாக கண்ணீர் விடுவதும், வெற்றி பெற்று விட்டால், அலப்பறை பண்ணுவதும் இரண்டுமே தவறான அணுகு முறைகள். 

காரணம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு. கொஞ்ச விகிதத்தில் மாறி மாறி இருக்கும். அதை உன்னிப்பாக கவனி க்காமல், சிறந்த ஓவியம் வரையக்கூடிய மாணவன் சரியாக பாடவில்லையே என்று நினைப்பதும், நன்றாக பாடக்கூடிய மாண வி நன்றாக ஆடவில்லையே என்று நினைப்பதும் பல் வேறு மன உளை ச்சல்களைத்தான் உருவாக்கும். 

ஒரு மயில், சிங்கத்தை போல கர்ஜனை செய்ய முடியவில்லையே என்று நினை க்கவே நினைக்காது. அதேபோல், ஒரு சிங்கம் மயிலைப்போல் ஆட முடியவி ல்லையே என்று நினைக்காது. அவைக ள், தங்களின் இயல்புக்கேற்ப முழுமை யாக இருக்கின்றன. 

ஆனால், சிங்கத்தையும், மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்- புலம்பல் என்ற ஒரு பெரிய கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக் கொண்டிருக் கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியேறுவது? கூண்டிலிரு ந்து வெளியேற வேண்டுமென்றா ல் முதலில் நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம் என்ற விழிப்புணர்வு முக்கியம். 

அடைபட்டுக் கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய், அதன் அறிகுறி யை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை பார்த்து இப்படி ஆகி விட வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு தான் அது. ஆனால் வெற்றி பெற்றவர் களைப் பார்த்து அதே போல் ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கியமான சிந்தனை தானே, அது எப்படி மனநோயாக இருக்க முடியும் என கேட்கலாம். 

எந்த ஒரு விஷயமும் சுயமாக ஆராய்ந்து, முடிவு எடுக்காமல், பிறரைப் பார்த்து எடுப்பது என்பது நிச் சயம் ஒரு சமயத்தில் குழப்பத்தை தந்து காலை வாரிவிட்டு விடும். இன்னொரு பக்கம், உங்களுக் கே உரித்தான, நீங்கள் மட்டு மே செய்யக் கூடிய காரியத் தையும், நீங்கள் மட்டுமே அடையக்கூடிய அந்த அனுப வ த்தையும் நிச்சயமாகத் தவற விடுவீர் கள். 

இந்த வெற்றி, தோல்வி கண்ணோட்டம் பள்ளிப் பருவத்திலிருந்தே உரு வாகி, ஓய்வு பெறும் வயது வரை உங்களை பாடாய்ப்படுத்துகிறது என்ப தை தெளிவாக புரிந்துகொள்ள வேண் டும். எது எது சந்தோஷம் தருகின்ற தோ, அவைகளுக்கு வெற்றி என்று பெயர் சூட்டியும், எது எது துக்கம் தரு கின்றதோ, அவைகளுக்கு தோல்வி என்று பெயர் சூட்டியும் பழகி விட்டோ ம். 

இதற்கு ஆரம்ப வித்து பள்ளியில் இருந்தே முளைவிடத் தொடங்கியது . ‘கிளாஸ் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்” ”ஒரு என் ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆயி ரணும்” ஓ.கே. இந்த விதிமுறைக ள் ஒன்றும் தப்பில்லை ‘பாசிட்டிவ்’ சிந் தனைகள்தான். ஆனால், பொதுவான ஒரு விதிமுறையை நாம் கவனிப்பது இல்லை. 

அனைவரும் நன்றாக படித்து சென்ட ம் வாங்கினால் யார் கிளாஸ் பர்ஸ்ட் ? அப்படி ஒரு சம்பவம் எப்பொழு தும் நடப்பதில்லை. மாணவர் களைச் சுற்றி ‘மெஷின் கன்’னை வைத்து கொண்டு மிரட்டி படிக்க சொன்னால்கூட, உயிருக்கு பயந்துகூட அனை வரும் ‘முதல் ரேங்க்’ எடுக்க மாட்டார் கள். எடுக்கவும் முடியாது. 

ஆக, பொது விதிமுறை அனைவராலும் ‘முதல் ரேங்க்’ எடுக்க முடியாது என்பது தான்… இன்னொரு பொதுவிதிமுறை, படிப்பில் 25-வது ரேங்க் எடுப்பவன், விளையாட்டில் முதலிடம் வரலாம். வகுப்பில் கடைசி ரேங்க் எடுப்பவன் பாட்டு போட்டிகளில், நன்றாக பாடி லட்சங்களில் பரிசை அள்ளலாம். 

ஆக எவருமே சாதாரண நபர்களில் லை, ஒரே மாதிரி நபர்களுமில் லை… ஒரு மனிதனோட கட்டை விரல் ரேகை மாதிரி, இன்னொரு மனிதனுக்கு இருக்காது. 700 கோடி கட்டை விரல் ரேகைகளும் வேறு தான்… இயற் கையே இவ்வளவு ‘சிம்பிள்’ஆக சொல்லிவிட்ட பிறகு ம்கூட நாமதான் முதல் இடம், இரண்டாம் இடம் என்று அடித்துக் கொ ண்டிருக்கிறோம். 

சிந்தனையை ஒருமுகமாக்கி எடுத்துக் கொண்ட செயல்களில் முழுமையாக நம்மை ஒப்படைக்கும்போது நாம் முய ற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் எப்படியும் வெற்றி வந்தே தீரும். 

அதனால் முதல் இடமே லட்சியம் என் ற சிந்தனையை தோளில் தூக்கி சுமந்து திரியாமல் காரியமாற்றினால் அப்போது அதுவாகவே தேடி வரும். அந்நேரத்தில் அந்த வெற்றி உங்களு க்கு சாதாரணமாகவே படும் என்பது தான் ஆச்சரியம். பக்குவப்பட்ட வெற் றி எப்போதுமே அகந்தை தராது என்ப து இதில் உணர வேண்டிய உண்மை.

No comments:

Post a Comment