Monday, January 6, 2014

தாய்மையை பாராட்ட தமிழ் போதாது

தாய்மையை பாராட்ட தமிழ் போதாது

தாயிடம் சேவை தொடங்கி மனைவியிடம் வளர்கிறது தாய்நாட்டு சேவை சிறந்த தெய்வ சேவையில் நிறைவடைகிறது

ஒவ்வொருசிகரத்தை அடையவும் படிக்கட்டுகள் உண்டு.
தன் உட‌லுக்கு மட்டுமே சேவை செய்வது விலங்கியல்
தன் வயிறுக்கு உணவு தேடுவது
தன் பிறப்புறுப்புகளுக்கு உறவு தேடுவது
இவை இரண்டு மட்டுமே வில்ங்கினத்தின் சுய சேவைகள்
மனிதத்தில் மட்டுமே

முதன்முதலாக அந்த எல்லை தான்டப்பட்டது.
பாலூட்டிகளிடம் தன் சேவை சில காலம் உணவூட்டும் தாய்மை வள்ர்ந்தது
தாய் முதலில் தன் உதிரத்தை பாலாக ஊட்டியது
தகப்பன் தான் வேட்டையாடிய உணவின் மிச்சத்தை தந்தது.
இவைதாய்மையின் சிறிய விதைகள்.
ஆனால் மனிதத்தின் தாய்மை 
மகத்தான சிகரங்களை தொட்டது

பாலூட்டி, தாலாட்டி,குளிப்பாட்டி,பட்டுத்திசீராட்டியது
அன்பு தந்து அறிவுதந்து,பண்புதந்து,பாசம்தந்தும் தந்தது
அதன்சேவை பட்டியல் மிக நீளமானது
கடைசி மூச்சு உள்ள வரை
தன் சேவை சீராட்டும் அந்த தாய்மையை பாராட்ட தமிழ் போதாது
தாய்மையை சேவைகளின் தாய்,
அடுத்தது தாரம் ,அது தாய்மையிலும் உயர்வாக போற்றப்பட்டது
தன் சேயை காப்பாற்ற அதன் தேவைகளை நிறைவேற்ற‌
நிரந்தர ஆண் துணையைபெண்மையும், தாய்மையும் நாடியது

அந்த பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டமாக
தேர்ந்தெடுத்த தன் துணையை தன் சேய்க்கு சமமாக
பாராட்டி சீராட்டி பராமரித்தது பெண்மை.
பெண்மை என்பது தாய்மையின் சிகரமாக
குடும்பத்தின் தலைமை பீடத்தில் அமர்ந்தது
தன் கணவன் குழந்தைகளுக்காக
பல உயர் பண்புகளை வளர்த்துக் கொண்டது
உணவு,உறவு,உறக்கம் என்ற
உடலின் அடிப்படை ஆதாரங்களைக் கூட தியாகம் செய்தது.

இது வளர்ப்பினால் மட்டுமல்ல
கல்வியினால் மட்டுமல்ல 
உதிரத்தில் ஊறிப் போன பண்பாக பரிணமித்தது
இதயத்தில் எழத்தாக பதிந்து போனது
இந்த தாய்மையும், தலைமைப்பண்பும்
அவர்களும் தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும்
தன் இல்லத் துணைக்காக
இவள் பெற்ற பிள்ளைகளுக்காக
மொத்தத்தில் தன் குடும்பமே தன் உயிராக எண்ணி
தியாகம் செய்யும் சேவை பிறந்தது
அது தன் உறவினர்,அயலார்,ஊர்,தேசமென விரிந்து பரந்தது

தாய் நாட்டு,தேச சேவையில் தாய்மையின் முழமை வெளிபட்டது.
தன்னைத் தாண்டி
தன் உடலின் பசி,காமம் உறக்கம் தாண்டி
ஆன்மாவைப் பற்றி தேடிய போது மனிதன் ஆண்டவனை உணர்ந்தான்
தெய்வத்தின் பக்தியிலும் சேவையிலும் உயர்ந்து சிறந்தான்.

No comments:

Post a Comment