Tuesday, January 7, 2014

ஞானமுள்ள தலையை விட ஈரமுள்ள இதயத்துக்கு புகழ் கூடுதலாகும்….

ஞானமுள்ள தலையை விட ஈரமுள்ள இதயத்துக்கு புகழ் கூடுதலாகும்….
     
எளிமையான மனித நேயத்தின் முன்பு முழுமையான ஞானம் கூட ஈடாகாது

மனிதரிடையே இரு துருவங்கள் போல‌ இரு குணாதிசியங்கள் காண்கிறோம்

ஒருவரின் குணம் இருதயத்தால் நிர்ணயிக்கப்படுகிறது மற்றவரது குணம் மூளையால் உருவாகிறது

அன்பேயில்லாத,உணர்ச்சியே இல்லாத‌ மூளை  வளர்த்த மூதறிஞரை விட‌ நேயமுள்ள இரக்கமுள்ள இதயம் எனும் அன்னை வளர்த்த எளிமையானவன்

எதுவுமே தெரியாதவனாய் இருந்தாலும் பரவாயில்லை

அதனால் நடைமுறையில் மெத்தப்படித்த மேதாவிகளான‌ பெரிய பெரிய பட்டங்களை வாங்கிய‌ உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை விட‌ மக்கள் இதயங்களின் பசியை,வலியை,  துயரை தேவையை உணர்ந்த எளிமையான மனிதர்கள் நிரந்தர இடம் பிடித்து விடுகிறார்கள்
    
ஞானமுள்ள தலையை விட ஈரமுள்ள இதயத்துக்கு புகழ் கூடுதலாகும்.

No comments:

Post a Comment