Tuesday, January 7, 2014

எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி

எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி
          
மனோதிடன்

நட்டோர்க்கு அல்லது கண்கங்காத நெஞ்சம் வேண்டும்_பதிற்றுப்பத்து

நாளென் செயும் வினைதான் என் செயும்
நாடிவந்த கோளென் செயும்_அருணகிரியார்

நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்_திருநாவுக்கரசர்

விதியின் சங்கடங்களைக் கண்டால்
சீ என்று சிரித்துத்துப்பிவிடு_புதுமை பித்தன்

ஆற்றும் கடமையை மறக்காதே
காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே_கண்ணதாசன்

சாதலோ சரதம் நீதி அறத்தோடும் தழுவி நிற்பாய்_கம்பன்

தசையினைத் தீச் சுடினும் அசைவுறு மதி வேண்டும்_பாரதி

யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது_மசு பிள்ளை

எல்லா நாளும் ஒரு நாள் போல இருக்க வேண்டும்
என் மனமே_அவ்வையார்

இருக்கும் பொழுதை ரசிக்கனும்
எதிலும் துணிஞ்சு இறங்கனும்_பட்டுகோட்டையார்

மனோசக்தி

துணியும் போது கடலின் ஆழம் குறைவதில்லை
நாம் உயர்கிறோம்_பிசிகணேசன்

மனித மனம் அபூர்வமானது
அதிசய சக்திகள் கொண்டது_வல்லிக்கண்ணன்

ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழுவதை மட்டும் நிறுத்தி விடு_கண்ணதாசன்

வன்மையிலே உளத்திண்மையிலே
மதிவன்மையிலே உயர்வோம் நாம்_பாரதி

நன்றே நினையுங்கள் நமனின்றி பயமில்லை_திருமூலர்

விசையுறு பந்தினைப் போல்
மனம் வேண்டியபடி செல்லும் உடல் வேன்டும்_பாரதி

வெயில் என முனியேன் பனி என மடியேன்_மதுரை குமரனார்

அசையாது நிற்பதாம் ஆண்மை_நாலடியார்

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது_வெற்றி வேந்தன்

அன்றே எனின் அன்றே ஆம் ஆமே என்றுரைக்கின் ஆமே ஆம்_கம்பன்
          
துணிவு

உயிரிடத்தில் அன்பு வேனும் வயிரமுடைய நெஞ்சு வேனும்_பாரதி

துப்புத் துறை போகிய துணிவுடைய ஆண்மை வேண்டும்_பதிற்றுப்பத்து

நெருக்கடியை தவிர்ப்பதே
தோல்வியை எதிர்கொள்வதே வெற்றியாகும்_தயானந்த சரஸ்வதி

துணிந்தால் துன்பமில்லை
மனம் சோர்ந்தால் இன்பமில்லை_பட்டுகோட்டையார்

கொசு நெருப்பில் மொய்க்காது_தாமு சிவராம்

துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்_கண்ணதாசன்

அய்யம் தீர்ந்து விடல் வேண்டும்
புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும்_பாரதி

வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்_நீதி வெண்பா

சித்தம் கலங்காது செய்கின்றது ஆனந்தம்_திருமூலர்

தூயவர் துணி திறன் நன்று அது தூயதே_கம்பன்

நம்பிக்கை

எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி___ஈரோடு தமிழன்பன்

உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது___அரவிந்தர்

காரிருள் பெரிது விளக்கு சிறியது என்று என்ன வேண்டும்
பெருமையின் பீடுடையது இல்லை_வள்ளுவர்

கடமைகளுக்கு ஊதியம் கிடைத்தாலும்
மனம் பாராட்டு எனும் பரிசுக்கு ஏங்குகிறது_தாகூர்

பாராட்டுவதை பகிரங்கமாக செய்ய வேண்டும்
குறையை அறையில் சொல்ல வேண்டும்_கலாம்

அகங்காரம் தீனி தேடுகிறது யாராவது பாராட்ட வேண்டும்
அதுவே அதற்கு தீனி_ஒஷோ

இயந்திரங்களுக்கு மின்சாரம் தேவை மனிதருக்கு
அங்கீகாரம் தேவை_தயானந்த சரஸ்வதி

சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேனுமப்பா_நாமக்கல் கவிஞர்

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே_வெற்றி வேற்கை

பேரும் புகழும் பெரு வாழ்வு_நல் வழி

வழங்கத் தளிர்க்குமாம் மேல்_நாண்மணிக்கடிகை

தமிழர் தத்துவம், துணிவு, மனோபக்குவம்.


No comments:

Post a Comment