Thursday, January 9, 2014

சமயோசித அறிவை வளர்ப்போம்.

சமயோசித அறிவை வளர்ப்போம்.

1.ஒரு மனிதன் பேசுகின்றான் என்றால் சதையினால் உருவாக்கப்பட்ட அவனது நாவினால் அல்ல .சமயோசிதம் என்றால்  தகுந்த சமயத்தில் நாம் இருக்கும் நிகழ்கால சூழ்நிலையில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அந்த சூழ்நிலையை படைப்பாற்றல் மிக்கதாக ஆக்குவது.அதே சமயத்தில் நாம் எந்த சூழ்நிலையில் இருக்கின்றோம் என்பதைக்கூடவும் நமது சுற்றுப்புறத்தை மறந்தும் இருத்தல் ஆனது சூழ்நிலையில் இருந்து விலகி இருப்பது ஆகும்.

2.தனது பக்கம் எல்லாவற்றையும் கவர்ந்திழுப்பது சம்யோசிதத்தின் அடிப்படை. ஒரு சூழ்நிலையை அழகுபடுத்துவது என்பது அந்த சூழ்நிலையில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு அந்த சூழ்நிலையுடன் ஒன்றி இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தது.சில நபர்கள்  தன்னுடன் ஒத்த   சூழ்நிலையில் இருந்து விலகி இருப்பவர்களையும் தனது சமயோசித புத்தியினால் சூழ்நிலைக்குள் கொண்டு வரும் திறமையினைப் பெற்றிருப்பார்கள்.இந்தத் திறமை இயல்பாகச் சிலருக்கு அமைந்திருக்கும் ,சிலர் தங்களது சுய முயற்சியின் மூலமாக இதனை வளர்த்து இருப்பார்கள்.

3.இப்படிப்பட்ட தனித்திறமையை நாம் உணர்ந்து வளர்க்க வேன்டும் .நாங்கள் சிறு வயதினராக இருக்கும் போது கிராமத்திற்கு விடுமுறையில் செல்வோம் அப்போது எனது தாத்தா டே பேராண்டி இங்க வா நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல் என்று "உங்க வீட்டுச் சேவல் என் வீட்டில முடையிட்டா அது யாருக்குச் சொந்தம் "என்று கேட்பார் .அவரது கேள்வியில் இருக்கும் சூட்சுமத்தை எல்லாம் புரிந்து கொள்ளும் வயதில்லை, நாம் அதனை கோழி தானே முட்டையிடும் என்றுப் பகுத்துப் பார்க்கவெல்லாம் முடியவில்லை ,யாருக்கு உரிமை என்பதிலேயே மனது இருக்கும்.

4.இப்படித்தான் பல கேல்விகளும் மாட்டுக் கணக்குகளும் ,மாம்பழங்களைப் பிரிக்கும் கணக்குகளும் கேட்கப்படும் நமது முழித்தல் ரசிக்கப்படும்.சமயோசித புத்தி தான் வாழ்க்கயினை அனுபவிப்பதற்கு அடிப்படை என்பதனை மனிதர்கள் பன்னெடுங்காலமாக உணர்ந்து வந்திருக்கின்றார்கள்.அதனை மனதில் விதைக்கும் அடிப்படைக் காரணிகள் தான் இப்படிப்பட்ட கேள்விகள் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப் பன்னெடுங்காலங்கள் ஆகின்றது அப்போது நாம் சமயோசிதத்தைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லாது, நமது அறிவு வளர்ச்சி  முதிர்ச்சியடைந்து விடுகின்றது.

5.ஆனால் பெரிய தலைவர்கள் ,அறிஞர்கள்,அறிவியலார்கள்,சமூக சிந்தனையாளார்கள் தங்களது வாழ்நாளின் இறுதிவரைக்கும் இந்த சமயோசித புத்தியைத் தகுந்தபடி உபயோகம் செய்து வந்தார்கள்.இவர்களின் இப்படிப்பட்ட சமயோசித அறிவால் தனி நபர்களின் மன முடிச்சுகளும் சமூகத்தின் மன முடிச்சுகளும் விடுக்கப்படுகின்றன.சமயோசித அறிவு என்பதை  வேறு கோணத்தில் எதனையும் பார் என்னும் மனச்சிந்தனையை நாம் எல்லோரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.

6,இதனை மாற்றுச் சிந்தனை என்றுகூடச் சொல்லலாம்,இயற்கை தன்னை எப்போதும் ஒரே மாதிரியான நிலையில் வைத்திருக்க விரும்புவதில்லை.அதன் அடிச்சுவட்டில் வாழும் நம்மையும் தான் .மாறுதல்களை மட்டுமே மாறாமல் வைத்துத்  தன்னைப் புதுப் பொலிவுடன் எப்போதும் வைத்துக் கொண்டே இருக்கின்றது.இந்த சிந்தனை மனநிலையை நாம் கற்றுக் கொள்வதற்கு அடிப்படை கற்பனை தான் .

7.மனிதனின் கற்பனைக்குக் கட்டுப்பாடு விதிக்க அவனைத் தவிர வேறு யாருக்கும்  உரிமை  இல்லை.எதனை வேண்டுமானாலும்  எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்வதற்கு மனிதனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அவனது கற்பனைக்கு எல்லையோ வரையறையோ கிடையாது இது தான் கற்பனைக்கான எல்லையும் வரையறையும் ஆகும்.கற்பனையையே எப்படி கற்பனை செய்வது என்பதனைக் கற்போம் ,கற்பனையில் கற்பனையைப் பயன் படுத்துவோம்.

8.ஒரு சின்னக் கற்பனை பொதுவாக ஒரு வரியை நாம் படிக்கும் போது அதனைப் புரிந்து கொண்டு உணர்வாகவும் அதனை  வரியாகவும் மனதில் பதிப்போம்.மனதில் அந்த வரி எப்படிப் பதிக்கப்பட்டு வெளிக்கொணரப் படுகின்றது என்பதனைப் பார்த்தோம் என்றால் நாம் எப்படி ஒரு வரியை நேர்கோட்டில் உள்ளது போல் படித்தோமோ அதே போல் தான் வெளிக்கொணரப்படும் போதும் நம்மால் உணரப்படுகின்றது.

9.ஏன் இந்த வரியை முக்கோணமாக நம்மால் கற்பனை செய்ய முடியாதா?சதுரமாக அமைக்க முடியாதா ,வட்டமாகக் கற்பனை செய்து படிக்க முடியாதா?முடியும் .இதனால் என்ன பயன் ?மனித மனம்  தனக்கும் சமூகத்திற்கும் ஒரு செயலால் ஏற்படும் பயனை அளவிட்டுத்தான் எதனையும் மதிப்பிடுகின்றது.நமது வாழ்க்கையின் பல தருணங்களில் பலவிதமான பாடங்களையும் கொள்கைகளையும் வழிகாட்டுதலையும் நமது செயலின் நிமித்தமாகப் படித்து மனதில் பதிவு செய்து வைத்து தகுந்த தருணத்தில் அதனைப் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது

10.நாம் இந்த நேர் வரி  மன கற்பனையில் ஒரே விதமாகப் பாடங்களைப் பயிலும் போது மனதின் இயற்கை குணமான எதுவும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்னும் விதியினைப் புறக்கணித்து நாம் ஒரே நிலையில் தொடர்ச்சியாக  ஒரு வரியை நேராகவேப்  படித்து பொருள் கொள்ளும் போது சலிப்பும் அதனைத் தகுந்த நேரத்தில் தகுந்தபடி பயன்படுத்தும் போது அது முழு ஆற்றலுடன் வெளிப்படுவதில்லை ஏன் எனில் அதில் தான் மாற்றத்திற்கான சிந்தனையே இல்லையே.

11.அதனால் எதனையும் படிக்கும் போது அந்த வாக்கியங்களைப் பல கோணங்களில் நாம் படித்து மனதில் பதித்து அதனை நமது முழு ஆற்றல் மையத்தில் இருந்து தகுந்த சமயத்தில் வெளிப்படுத்தலாமே.சமயோசிதம் என்பது நாம் இருக்கின்ற சூழ்நிலையில் நமது  கண்ணுக்குத் தெரிந்த மற்றவர்களின்  கண்ணுக்கும் சிந்தனைக்கும் தெரியாத சிந்தனைகளை ஒருங்கிணைத்து அந்த சூழ்நிலையின் மறுபக்கத்தை வேறு ஒரு கோணத்தில் மற்றவர்களை உணரச் செய்வது .

12.ஒரு மனிதன் பேசுகின்றான் சதைகளால் உருவாக்கப்பட்ட நாவினால் அல்ல ,ஒரு மனிதன் ஓவியம் தீட்டுகின்றான் அவன் கைகளால் அல்ல,மனதில் சிந்தனைகளின் தாக்கம் நம்மால் தாங்கமுடியாத போது அந்த சிந்தனையின் அடிப்படையில் செயலை  மட்டும் தான்  செய்ய வேண்டும்  இது தான் அந்தச்  செயலைச் செய்ய ஒரு நல்ல தருணம்.சாக்ரட்டீஸ் சொல்லுகின்றார் நான் யாருக்கும் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை ஆனால்  சிந்தனை செய்வதற்கு மட்டும் அவர்களைத் தயார் செய்கின்றேன்.

13.ஒரே ஒரு வாழ்க்கைக்குத்தான் பலவித அர்த்தங்களைப் பலரும் சொல்லுகின்றார்கள் எல்லாமும் சரியாகத்தான் இருக்கின்றது அதனைக் கடைப்பிடிக்காத வரைக்கும்.இந்த சமயோசித சிந்தனையை எப்படிக்  கடைப்பிடிப்பது  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment